செங்கொடியின் கற்பனை கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-25
நிலவை உடைத்து ஒட்டிய அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.
இவரது இக்கட்டுரையின் ஆரம்பமே டேஞ்சராக ஆரம்பிக்கிறது. எப்படி? நிலவில் அரேபியன் பிளவு எனும் ஒரு இடம் உண்டு. அதை நிலவு பிளந்ததற்கான ஆதாரமாக நாம் குறிப்பிடுகிறோம். இதை எப்படியாவது மறைக்க வேண்டும் என்பதற்காக இது வரைகலை (கிராபிக்ஸ்) படம் என்று சங்கூதுகிறார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று நிரூபிக்க ஏதாவது அற்புதம் ஒன்றை செய்து காட்டுமாறு கேட்கிறார்கள். அதிலொன்றுதான் இந்த நிலவை பிளக்கும் சம்பவம். இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் நபி (ஸல்) அவர்கள் பிளந்து காட்டுகிறார்கள். அப்படி பிளந்து காட்டியும் கூட முகம்மது சூனியம் மேஜிக் செய்கிறார் என்று அந்தர்பல்டி அடித்தனர் மக்கா இறைமறுப்பாளர்கள். இது தொடர்பாக குர்ஆனில் ஒரு வசனம் இறக்கப்பட்டது. அந்த வசனம் இதுதான்:
பிற்காலத்தில் தோன்றும் செங்கொடி போன்றவர்கள் இதற்கென்ன ஆதாரம் என்று கேட்பார் என்பதை அறிந்த அல்லாஹ் "ஒவ்வொரு காரியமும் பதிவாகிறது" எனும் ஒற்றைச்சொல்லினுள் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறான். அதுதான் அந்த நிகழ்வுக்கான தடயம் பதிவாகியுள்ளது என்பது. நிலவை ஆய்வு செய்ய சென்ற போது எடுக்கப்பட்ட படங்களில் நிலவு இரண்டாகப் பிளந்து மீண்டும் சேர்ந்தது போன்ற ஒரு தடயம், ஒரு பிளவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு விஞ்ஞானிகள் "அரபியன் பிளவு" என்று பெயரும் இட்டனர். இதற்கு இவாறு பெயரிடுவதற்கான காரணமே அவர்கள் நிலவு பிளந்ததாக கூறும் சேதிதான். அதற்கு ஆதாரமாகத்தான் இந்த நிகழ்வும் நடந்துள்ளது. அந்த அரபியன் பிளவின் படத்தைத்தான் சென்க்டோய் போட்டுக்காட்டி இது கிராபிக்ஸ் எனும் ஒற்றை வரியில் ஒதுக்கித்தள்ளிவிட்டார். ("பொய்யெனக் கருதி மனோ இச்சையைப் பின்பற்றுகின்றனர்" எனும் வசனம் செங்கோடியோடு எப்படி பொருந்திப்போகிறது என்பதை கவனிக்க!) நிலவு பிளந்து ஒட்டியதற்கான ஆதாரம் இதுதான்.
இதற்கு வரலாற்று ரீதியான சான்று இருக்கிறதா என கேட்கிறார். இது நடந்ததற்கான வரலாற்று ஆதாரம் அந்த செய்திதான். இதை கவனமாக தவிர்ப்பதற்கே இந்த ஹதீஸ் தவிர்ந்த ஏனைய ஆதாரம் உள்ளதா? என்கிறார். விஞ்ஞான ஆதாரமே இருக்கிறது! இப்படி கற்பது இவரது பலவீனத்தையே காட்டுகிறது. அடுத்து, இப்படி பிழைக்குமா? பிளந்தது ஒட்டுமா? இது பிளந்தால் பூமியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிராதா? என்று வரிசையாக அடுக்கிஸ் செல்கிறார். இவையனைத்துக்கும் ஒட்டு மொத்த பதில் நிலவில் காணப்படும் அந்த "அரபியன் பிளவுதான்". நடுநிலையாளர்களுக்கு இந்த ஒரு விசயமே போதும். இதில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா எனும் கேள்வியைத்தவிர வேறு எந்த கேள்வியும் இல்லை! அவை அனாவசியமானவை. எந்த சரக்குமில்லாதவை.
குர்ஆனில் அநேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறீர்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூராதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கலாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன சொந்தக் கற்பனைகளை மேய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.
கதை ரொம்ப சூப்பரா இருக்கு! இவருக்கு கதை படிப்பதில் ரொம்ப ஆர்வம் போல... ஆனா இவருக்கு ஒரு கதையை எங்கு எதோடு பிக்ஸ் பண்ணுவது என்பதுதான் தெரியவில்லை! இந்த கதை நிலவு பிளந்த சம்பவத்தோடு ஒட்டவில்லை என்பதுதான் நிதர்சனம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
1 comments:
proof for moon split
http://www.hoax-slayer.com/moon-split-miracle.shtml
Post a Comment