Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, April 6

குகை வாசிகளும் குழப்பும் செங்கொடியும்


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-19

சூறதுல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு? எனும் கட்டுரைக்கு மறுப்பாக இது வெளியாகிறது. இந்த தலைப்பை பார்த்ததும் சற்று ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால் தனக்கு தெரிந்த ஒரு சில வரலாற்று தகவல்களை ஃபிக்ஸ் பன்னி புனையப்பட்டதுதான் இக்கட்டுரை. இதில் இவர் வரலாறு ரீதியாக கூறும் அபத்தங்களை பார்ப்பதற்கு முன் சூறதுல் கஹ்ப் சம்பந்தமாக குறிப்பிடும் விடயங்களை பார்க்கலாம்.

அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் சில இளைஞர்கள் பல வருடங்கள் தூங்கியதாகவும் அது எத்தனை வருடம் என்பது இறைவனே அறிவான் என்பதாகவும் உள்ளது. மேலும் அவர்கள் தொடர்பாக பலரும் பல விதமாக ஊகிக்கின்றனர். அதையும் தவறு என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிலொன்றுதான் அவர்கள் 309 வருடங்கள் தூங்கியதாக வரும் சேதி. இந்த சேதியை அல்லாஹ் கூறுவதாக நினைத்துக்கொண்டு ஒருவன் 309 வருடங்கள் தூங்க முடியுமா என்று கேட்கிறார்! அவ்வாறு கூறியது மக்கள்தான்; இறைவனல்ல!
இக்கேள்வி தவறான புரிதலின் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ளதால் இந்த கேள்விக்கு பதிலளிப்பதை அடியோடு தவிர்க்கிறோம்.
மேலும் இறைவனை நம்பக் கூடியவர்கள் குறித்து விமர்சனம் செய்வதாக இருந்தால் அவர்களின் நம்பிக்கையை ஒட்டித் தான் விமர்சனம் செய்ய வேண்டும். இறைவன் சர்வ சக்தன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. நினைத்ததை செய்ய யாருக்கு இயலுமோ அவன் தான் இறைவன். அண்ட சராசரங்களைப் படைத்தவனுக்கு சில வருடங்கள் தூங்க வைப்பது சாத்தியமற்றதாக இருக்காது. இது குறித்து செங்கொடி விமர்சிப்பதாக இருந்தால் கடவுள் இல்லை என்பதை நிரூபித்து விட்டு மறுக்க வேண்டும். அதை மறுக்காமல் இது முடியுமா என்றுகேட்டால் இறைவனுக்கு முடியும் என்பது தான் இதற்கான பதில்

இனி இவர் கையாண்ட வரலாற்றுப் புரட்டுக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்:

கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை? கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எஸ்ஸீனர்களுடையவை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சாசனங்கள் ஈசாவின் காலத்தைச் சார்ந்தவை அல்ல, அதற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தயவை. ஆகவே அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதமாக,  இஞ்சீலாக இருக்க முடியாது. 

கண்டுபிடிக்கப்பட்ட அந்த ஏடுகள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்குரியது என்கிறார். ஆனால் இந்த ஏடுகள் கி.மு 150 தொடக்கம் கி.பி 70ம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை. இக்காலத்துள் ஈஸா (அலை) அவர்களும் அடங்குவார்.
                                                                           
அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதம், அது குரானை ஒத்திருக்கிறது அதனால் தான் திருச்சபைகளும், கிருஸ்தவர்களும் அதை மறைக்கிறார்கள் என்று இஸ்லாமியவாதிகளின் பிரச்சாரத்தில் உண்மையில்லை.
இப்படி யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. அந்த ஏட்டில் உள்ள விடயங்கள் கிறித்தவத்தின் பெயரால் இப்போது நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களை மறுக்கக்கூடியனவாகவும், இயேசுவின் காலத்தில் இருந்த கிறித்தவத்தை போதிப்பனவாகவும் உள்ளன. இதனால்தான் அந்த ஏட்டை மறைத்தனர்.

இதன் பின் இவராகவே ஒரு வினாவை எழுப்பி அந்த வினாவுக்கு பதிலாக புத்தரையும் கோர்த்துவிடுகிறார். அந்த வினா என்ன? ஏன் கிறிஸ்தவ திருச்சபை அந்த ஏட்டை மறைக்க வேண்டும். இதற்கு பதிலாக அவர் குறிப்பிடும் விடயம்தான் ஆச்சரியமாக உள்ளது. அதாவது ஏசு எனும் நபர் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்தவரல்ல. அது ஒரு கற்பனைப்பாத்திரம். இக்கற்பனைப்பாத்திரம் புத்தரின் கதையுடன் ஒத்துப்போகிறது என்று ஒரு பட்டியலையே போடுகிறார் (அந்த பட்டியலிலுள்ள அபத்தங்களை பிறகு பார்ப்போம்). இயேசு என்பவர் உண்மையிலேயே ஒரு கற்பனைப்பாத்திரம்தானா? இயேசு வாழ்ந்ததற்கு ஏதாவது சான்று உள்ளதா? என்பதை பார்க்கும் போது இவரைப்பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வரலாற்று ஆசிரியர்களே இப்படி கூறுகின்றனர். பெரும்பாலானவர்கள் இதை உண்மை என வாதிடுகின்றனர். மைக்கல் ஹார்ட் என்பவர் நூறு பேர் (THE HUNDRED) எனும் நூலை வெளியிட்டார். அது உலகம் பூராவும் விற்பனையில் சக்கைப்போடு போட்டது. இவர் வரலாற்றில் அதிகம் தாக்கம் செலுத்திய நூறு பேரின் பட்டியலையும் அவர்களின் வரலாற்ரையும் அப்புத்தகத்தில் வெளியிட்டார். அந்த வரிசையில் இயேசுவுக்கும் ஒரு இடத்தை அளித்திருந்தார். இயேசு என்பவர் ஒரு கற்பனைப்பாத்திரம் என்றால் எதற்காக தனது பட்டியலில் சேர்த்தார்? அது மட்டுமல்ல, இவரது முகவுரையில் வரலாற்றில் உண்மையா அல்லது ஊகமா என உறுதியிட்டு கூற முடியாத நபர்களை தான் இப்புத்தகத்தில் இடம்பெறச்செய்யவில்லை என்று உறுதியளிக்கிறார். எனவே இயேசு ஒரு கற்பனைப்பாத்திரமாக இருக்க முடியவே முடியாது. மேலும் குறிப்பிட்ட அச் சாசனச்சுருள் கூட இயேசுவின் இருப்பை உண்மைப்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இனி இவர் புத்தர்தான் இயேசு என்பதற்கு எடுத்துக்காடும் ஆதாரங்களின் அபத்தத்தை சுட்டிக்காட்டும் முன் ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். யாருடைய வாழக்கையாக இருப்பினும் ஏதாவது ஒரு சில விடயங்களில் ஒரு ஒற்றுமை இருக்கத்தான் செய்யும் அதை வைத்துக்கொண்டு இவ்விருவரும் ஒருவர்தான் என்பது மடத்தனம். அந்த வகையில் கூட புத்தரையும் இயேசுவையும் ஒட்ட வைக்க இயலாது. ஏன்? இவர்கள் இருவரின் வரலாறுகள் அடிப்படையிலேயே முரண்படுகின்றன. புத்தரின் காப்பிதான் இயேசு என்றால் இருவரது அடிப்படையும் ஒன்றாக இருக்க வேண்டும்! ஆனால் அப்படி எதுவும் இல்லை. இவர் புத்தரும் இயேசுவும் ஒன்றுதான் என்று பத்து சான்றுகளைக்காட்டினால் புத்தர் ஏசு இல்லை என்பதற்கு எம்மால் 100 சான்றுகளைக் காட்டமுடியும்!  நமது வேற்றுமையை காட்டுவதற்கு முன் இவரது ஒற்றுமைப்பட்டியலிலுள்ள தவறையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
மேலும் இயேசு வாழ்ந்தாரா என்பதில் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதை விட புத்தர் வாழ்ந்தாரா என்பதில் இவருக்கு சந்தேகம் ஏற்பட வேண்டும். இயேசுவுக்கு இருப்பதை விட புத்தரின் வரலாறு அதிக சந்தேகங்களைக் கொண்டது. இவர் எதையாவது உளற நினைக்கிறாரே தவிர அறிவுப்பூர்வமான எந்த பார்வையும் இவரிடம் இல்லை

இவர் முதலாவதாக குறிப்பிடும் ஒற்றுமையே அண்டப்புளுகாக இருக்கிறது. அது என்ன?

சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

புத்தர் தந்தை இன்றி பிறந்தவராம். புத்தரின் தந்தை சுத்தோதனன். இவர் கபில வஸ்து எனும் சிற்றரசுக்கு மன்னன். (புத்தர் ஒரு இளவரசன்) இரண்டாவதாக,
சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.
பிம்பிசாரனின் ஆட்சிக்காலத்தில்தான் புத்தர் பிறந்தார். ஆனால் அவர் கொல்ல முயற்சித்தார் என்பது உண்மையாக இருக்க இயலாது! ஏன்? புத்தர் ஒரு மன்னனின் மைந்தன். கொல்வது சுலபமல்ல! அப்படி முயற்சித்திருந்தால் பாரிய கலகமே வெடித்திருக்கும்! இவர் இதற்கு தகுந்த சான்றைக்காட்ட வேண்டும்.

நான் மதங்களை ஆய்வு செய்பவன் கிடையாது. இதனால் எனக்கு இயேசுவைப்பற்றி அதிக விபரம் தெரியாது. புத்தரைப்பற்றி எனது பாடப்புத்தகங்களில் உள்ள விடயங்களை வைத்தே இங்கு வாதிடுகிறேன். விரிவஞ்சி 20 சான்றுகளை மாத்திரம் முன்வைக்கிரேன். அதுவும் அடிப்படையிலிருந்து..., இங்கு இயசு தொடர்பாக நான் குறிப்பிடும் விடயங்கள் கிறிஸ்தவர்கள் நம்பும் அவர்கள் போதிக்கும் விடயங்களிலிருந்து எடுத்துக்கூறப்படுபவை. இதில் முஸ்லிம்களுக்கு உடன்பட்டதும் முரண்பட்டதும் உள்ளன என்பதை கவனத்தில் கொள்க!

1.இயேசு தந்தையின்றி பிறந்தவர். புத்தர் தந்தையின் துணையுடன் பிறந்தவர்.
2.இயேசு பிறந்ததும் ஒரு நட்சத்திரம் பிறந்து ஒரு கூட்டத்திற்கு இயேசுவின் இடத்திற்கு செல்ல வழிகாட்டியது.புத்தருக்கு இப்படி நடந்ததே கிடையாது.
3.இயேசு ஒருவரிடம் ஞானஸ்னானம் செய்தார்(அவரது பெயர், ஊர் நினைவில் இல்லை), புத்தர் போதி மரத்தில் ஞானம் பெற்றார்.
4.இயேசு கடவுள் பற்றி போதித்தார். புத்தர் இது பற்றி வாய் கூட திறக்கவில்லை.
5.இயேசு திருமணம் செய்யவில்லை. புத்தர் 16 வயதில் யசோதராவை திருமணம் முடித்து 29ம் வயதில்  பிள்ளையும் பெறுகிறார்.
6. புத்தர் நான்கு விடயங்களை(முதுமை, நோய் வாய்ப்பட்டவன், இறந்து கொண்டிருப்பவன், இறந்த உடல்) அவதானித்தால் ஆட்சியை துறந்து செல்வான் என்று ஒரு சோதிடன்  மன்னனிடம் கூறினான். இதனால் மன்னன் அவரை உலகமே தெரியாத சொகுசு வாழக்கைக்குள் பூட்டி வைக்கிறார். இயேசுவுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.
7.புத்தர் நான்கு விடயங்களையும் கண்டு துறவு பூணுகிறார். இதற்கு இயேசுவின் வாழ்க்கையில் ஆதாரம் கிடையாது.
8.போதி மரம் புத்தருடன் முக்கியத்துவம் பெற்றது. இயேசுவின் வாழ்க்கயில் ஈச்ச மரம் கூட வரவில்லை.
9. புத்தர் ஞானத்தை பெற கடும் தவமெல்லாம் செய்தார். இயேசு அப்படி செய்யவில்லை
10.தலையை மழிப்பது புத்தருக்கும் பிக்குகளுக்கும் அடையாளம். இயேசு பெண்கள் போல் முடியை வளர்த்திருந்தார்.
11. கைத்தடியும், பிச்சைப்பாத்திரமும் தவிர வேறு எதையும் கொண்டு செல்லவில்லை. இயேசு இப்படி பிச்சை எடுக்கவில்லை.
12. இயேசு ஆட்டுத்தொழுவத்தில் பிறந்தார். புத்தர் அரச மாளிகயில் பிறந்தார்.
13.நாடு துறந்து காட்டுக்குச் சென்று போதி மரத்துடன் சங்கமித்தல் புத்தரின் கொள்கை(இதை இப்போதுள்ள பிக்குகள் கூட கடைபிடிக்கமல் இலங்கையில் ஆட்சிபீடம் ஏறி ராஜ வாழ்க்கை நடாத்தி வருவது தனி விசயம்) இயேசுவின் கொள்கை இது அல்ல.
14.இஸ்ரவேலர்களுக்காக வந்தவர் இயேசு. புத்தர் யாருக்ககவும் வரவில்லை.
15.இயசு சிலுவையில் அறையப்பட்டார். புத்தருக்கும் சிலுவைக்கும் தொடர்பு இல்லை.
16.இயேசு பல அற்புதங்களை செய்து காட்டினார். புத்தருக்கும் அற்புதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
17.இயேசு சிறுவயதிலேயே பலியிடப்பட்டார். புத்தர் எண்பது வயதில் நோய் வாய்ப்பட்டு மரணிக்கிரார்.
18.இயேசுவின் வரலாற்றில் கேப்ரியல் எனும் பரிசுத்த ஆவிக்கும் இடமுண்டு. புத்தரின் வாழ்க்கையில் நீராவிக்கு கூட இடமில்லை.
19.இயேசுவுக்கு எதிராக ஒரு யூதக்கூட்டமே அணி திரள்கிறது. இவருக்கு எதிராக அணி திரளவில்லை. ஏனெனில் இவர் யாருக்கெதிராகவும் பேசவில்லை.
20.இயேசு இறுதியாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்து சில விடயங்களை கூறுகிறார். புத்தர் நோய்க்கு மருந்து வாங்கி வா என்று கூட சொல்லவில்லை.

இது போல் இன்னும் எத்தனையோ அடுக்க முடியும். இதுதான் வரலாற்றை ஆராயும் அழகா?  இது போதாதென்று இன்னும் ஒரு குண்டை தூக்கிபோடுகிறர். அது என்ன? புத்தர்தான் ஏசு என்றால் எப்படி புத்தரைப்பற்றிய விடயங்கள் பலஸ்தீனுக்கு சென்றது? என்ற கேள்வியை உருவாக்கி அதற்கு பின்வருமாறு பதிலும் அளிக்கிறார்.
கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து  தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம்  திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான்.
கி.மு 327ல் அலெக்ஸாண்டரால் கொண்டு செல்லப்பட நூல்களை வைத்துத்தான் இவர்கள் கட்டியிருக்கிரார்கள் என்றால் அது முற்றிலும் தவறானது. புத்தர் கி.மு 483 இல் மரணிக்கிறார். அவர் மரணித்து கிட்டத்தட்ட 400 வருடங்களின் பின்னர்தான் புத்தரின் போதனைகள் நூலுருவகம் பெறுகின்றன. அப்படியானல் கி.மு 83இல் தான் புத்தர் தொடர்பான நூல்கள் கிடைக்கும். அலக்ஸாண்டர் படையெடுக்கும் போது புத்தர் தொடர்பான் விடயங்களை எடுத்துச்சென்றிருக்க முடியாது. அது மட்டுமல்ல வட இந்தியாவில் அலக்ஸண்டரின் ஆதிக்கம் பரவாமல் அக்கலத்தில் ஆண்ட நந்த வம்ச ஆட்சியாளனான தன நந்தன் தடுத்தும் குறிப்பிடத்தக்கது. அசோகன் தூதுவர்களை அனுப்பியதாக வரலாறில் உள்ளது ஆனால் இவர் குறிப்பிடும் நாடுகளுடன் நட்புறவைப்பேணுவதற்காக அனுப்பியதாகத்தான் காணப்படுகிறது! அதுவும் பாரசீகம், ரோமாபுரிக்கு அனுப்பியதாக நான் அறியவில்லை. போத்த மதத்தை பரப்ப அசோகன் இலங்கை, சீயம், பர்மா போன்ற நாடுகளுக்கு பிக்குகளை அனுப்பியதாகத்தான் வரலாறு கூறுகிறது.
இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.

எஸ்ஸீனர்கள் என்றால் புத்த பிக்குகளால் கவரப்பட்ட குழுவினரா? எஸ்ஸீனர்கள் என்பது யூத மதத்தில் உள்ள ஒரு பிரிவினரின் பெயர். நசரேயர்கள் என்பதும் ஓர் யூத மதப்பிரிவுதான். எவனாவது ஒருவன் வராலாறு என்ற பேரில் எடுத்த வாந்தியை எடுத்து வந்து கொட்டிவிட்டு கதையளக்கிறார் செங்கொடி.

அப்படியானால் அந்த சாசன்சுருள் இஸ்லாத்தை உண்மைப்படுத்துகிறது என்று ஏன் கூற வேண்டும்? இது பற்றி ஆராய்ந்த இரு வரலாற்றாசிரியர்களின் கூற்றுத்தான் அது! இதை பிபிஸி நிறுவனமும் பல வருடங்களுக்கு முன் வெளியிட்டது. இது இஸ்லாத்தை உண்மைப்படுத்துவதாகவும், கிறிஸ்தவர்கள் தங்களின் மதத்தின் பேரில் செய்து வந்ததை மறுப்பதாகவும் அது உள்ளதால் இது இஞ்சீள் வேதமாக இருக்க முடியும் என்பதுதான் எமது நிலை.

ஆக இவர்களின் அத்தாட்சிகளும் சான்றுகளும் எந்தவகைப் பட்டவை என்பது தெளிவாகிறதல்லவா. கேள்வரகில் எண்ணெய் வடிந்தால் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது நினைவுக்கு வருகிறதா?

கேனையானக எம்மை ஆக முயர்ஸித்துவிட்டு எப்படி திசை திருப்புகிறார்? இதற்கெல்லம் மிகுந்த துணிவும், கோயபல்ஸ் போன்ற அஞ்சா நெஞ்சமும் தேவைதான். இது நமக்கு இல்லை. ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குவதற்கு இதெல்லம் தேவைதானே!

வளரும் இன்ஷா அல்லாஹ்


0 comments:

Post a Comment