Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, April 14

பொய்யெல்லாம் உண்மையாகுமா?

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-24

ஆதி மனிதன் மொழி அறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

மேற்குறிப்பிட்ட தொடரில் தனது வாதங்களுக்கு ஆதாரமாக முழுக்க முழுக்க பரிணாமவியல் கோட்பாட்டை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. உலகில் மனிதன் தோன்றிய வரலாறு என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்த டார்வின் உலகில் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைத்தேர்வின் அடிப்படையில் (Natural Selection) கூர்ப்புக்குள்ளாகி கடைசியாக குரங்கு எனும் விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது பரிணாமவியலின் சாராம்சம். எனினும், தற்கால நவீன அறிவியல் வளர்ச்சியின் உதவி மூலம் இந்த கொள்கை ஏற்க முடியாத நிலைக்கு மாறிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு கொள்கையை வைத்துத்தான் தனது கருத்தை நிலை நாட்ட முற்படுகிறார்.

"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக!" என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது..... (2:23) இந்த வசனத்திற்கெதிராக செங்கொடி எழுப்பும் கேள்விகள்:

இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார். அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப்பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் இத்திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வழமைடிந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.

வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாலரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்சில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லோளிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள்ள எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் கூறிவிட்டு பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்குபிந்தான் மனிதன் பேசினான் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் குர்ஆனோ முதல் மனிதனே பேசிவிட்டார் எனக்கூருகிறதே! எப்படி சாத்தியம்? பதில் சொல்ல முடியுமா? என்று கேட்கிறார். அந்த வசனத்தை மட்டும் வைத்து கேட்பதாக இருந்தால் இவ்வாறு கேட்க முடியும். ஆனால், அதற்கு முன்னிருந்த வசனங்களை பார்த்தால் இந்த கேள்வி எழுவதற்கு வாய்ப்பில்லை. ஏன்? அதற்கு முன்னுள்ள வசனத்தில் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் கற்றுக்கொடுத்தான் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை கற்றுக்கொடுத்த பின் பயிற்சி அளித்த பின் இது போல் நடப்பது சாத்தியம்! எனவே, அறிவுபூர்வமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு அறிவற்ற கேள்வியையே எழுப்பியுள்ளார். இதற்கு எதிராக அவர் வைக்கும் அந்த வரலாற்று (?) சான்றில் கூட எந்த சரக்கும் இல்லை. நியாண்டதால் மனிதர்கள் பேசியுள்ளனர் என்பதை நிரூபிக்க இரண்டு ஆதாரங்கள் கொண்டு உறுதிப்படுத்தியிருப்பதாக கூறிவிட்டு "இருக்க வேண்டும்" "யூகிக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார். யூகத்திற்கு இவரது அகராதியில் உறுதி என்பது அர்த்தமோ என்னவோ எமக்குத்தெரியவில்லை. யூகத்தைக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது. ஆனால் யூகிக்கும் விதம் கூட சிந்தித்துப்பார்க்கும் போது தவறாகப்படுகிறது. முதலாவது சான்றாக (?) செங்கொடி குறிப்பது யோயல் ராக் என்பவரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில் தற்போது மனிதனுக்கு உள்ள ஹயாய்ட் எனும் சிற்றேலும்பு காணப்பட்டது என்பதை குறிப்பிடுகிறார். இந்த சிற்றேலும்பு நியாண்டதால் மனிதனுக்கு முன்னுள்ள மனிதனுக்கு இல்லையா? அப்படி இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதத்தை எழுப்ப வேண்டும். இவர்களுக்கு பேசும் திறன் உள்ளது என்றால் மற்றவர்களுக்கு இல்லை என்பதா? அவர்களுக்கு பேசும் திறன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என்பதையும் சேர்த்து சேர்த்து பதிலளிக்க  வேண்டும். 
இரண்டாவது சான்றாக குறிப்பதில் இவர்கள் பேசினார்கள் என்பதற்கு ஏதாவது ஒரு சான்றுள்ளதா? அதையும் யூகிக்கிரார்களே தவிர உறுதிப்படுத்தவில்லை. அப்படி பேசியிருக்க வேண்டுமென்றால் கூட அது ஆ, ஊ, ஈ போன்ற ஒலிகளைத்தான் எழுப்பியிருக்க  வேண்டும் என்று வேறு  எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுகிறார். இப்படி ஒலி எழுப்புவதுதான் அவர்கள் பேச்சு என்பதற்கு என்ன அகழ்வாராய்ச்சி சான்று உள்ளது? ஏன்? கருத்துள்ள சொர்களைப்பேசி மிருகத்தை வேட்டையாட முடியாதா? டார்வினிஸ்டுகள் தங்கள் கொள்கையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நடத்தும் அறிவியல் சித்து விளையாட்டுக்கள் இவை. அதை எப்படியோ செங்கொடி பொருக்கி எடுத்து இங்கு வந்து அதை குர்ஆனை மறுக்கும் ஆயுதமாக தன்னைக்காக்கும் கேடயமாகப்பயன்படுத்துகிறார்.

தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்கு கட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரனின் உடலை மறைத்திருப்பனே!" எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். (5:31)



உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.
ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.
ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.

ஈமச்சடங்கை முதன் முதல் செய்தவர்கள் நியாண்டதால் வர்க்கத்தினர் என்கிறார். அதற்கு முன் வாழ்ந்த பீகிங் மனிதர்கள் ஈமச்சடங்கு செய்யவில்லை! ஏன்? அவர்கள் மனித மாமிசத்தை தின்றனர் என்கிறார். அப்படியானால், பீகிங்க் மனிதர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் மனித மாமிசம் சாப்பிட்டார்களா? பீகிங்க் மனிதர்கள் என்பது சீனா, ஜப்பான் போன்ற இடத்தில் வாழ்ந்தவர்களை குறிக்கும். அது அவர்களது வழக்கம். ஏன்? இன்று கூட அப்பேற்பட்ட இடங்களில் சிலர் நரமாமிசம் உண்பவர்கள் என்று தகவல் வருகிறது. இதனால் அவர்கள் மாமிசம் உண்டிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பரினாமவியலின் படி பீகிங்க் என்றொரு வர்க்கம் கிடையாது. ஒவ்வொரு பிரதேசத்திலும்வெவ்வேறு விதமான வடிவில் மனிதர்களின் உருவ அமைப்பு அமைந்திருக்கும். அப்படிப்பட்ட வித்தியாசங்கள்தான் பீகிங்க், ஜாவா, பலாங்கொடை மனிதர்கள் போன்றவை. இவை எக்காலத்திலும் மாறாது. அன்ரைய பீகிங்க் மனிதனின் மண்டையோட்டு வடிவில்தான் இன்றைய ஜப்பானியர்களும், அன்றைய பலாங்கொடை மனிதர்களின் மண்டையோட்டு வடிவில்தான் இன்ரைய இலங்கையர்களும் இருப்பர். இந்த பேதம் கூட செங்கொடி அறியவில்லையா? அல்லது வேண்டுமென்ண்ரு மறைத்தாரா? ஒன்றோடொன்று அறவே சம்பந்தமில்லாதவைகளை தொடர்புபடுத்தி புனையப்பட்ட கற்பனைக்கற்கால விடயங்கள்தான் இவை! இதில் இவர் குறிப்பிட்டுக்காட்டும் எந்த ஒரு வசனமும் தவறாகாது!.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது.

இவர் முரண்படுவதாக காட்டும் அந்த விடயங்கள் அறிவியல் என்பதை நிரூபித்து விட்டு இப்படி எழுதினால் நாம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வோம்! அது வரை இது ஒரு பழைய அறிவியல் குப்பை என்றுதான் சொல்வோம். அறிவியலின் அடிப்படையில் பரிணாமவியல்தான் சரி என்றாகிவிடால் இவர் குறிப்பிடும் இந்த விடயங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆதம் (அலை) அவர்களின் வரலாறே தவறாகிவிடும். எனவே, அதற்கு முயற்சிக்காமல் சில்லறை விடயத்திற்கு மறுக்க முயற்சித்தமை இவர்களது அறியாமையையும் பலவீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

2 comments:

வால்பையன் said...

ம்ம்ம்ம்ம்ம்

அப்புறம்................

குலாம் said...

//அறிவியலின் அடிப்படையில் பரிணாமவியல்தான் சரி என்றாகிவிட்டால் இவர் குறிப்பிடும் இந்த விடயங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆதம் (அலை) அவர்களின் வரலாறே தவறாகிவிடும். எனவே, அதற்கு முயற்சிக்காமல் சில்லறை விடயத்திற்கு மறுக்க முயற்சித்தமை இவர்களது அறியாமையையும் பலவீனத்தையும் எடுத்துக்காட்டுகிறது.//

இதற்கு பதில்,

//ம்ம்ம்ம்ம்ம்

அப்புறம்................//

என்னே ஒரு கையாலாகாத்தனம்.

Post a Comment