Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, May 25

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே...

இதுவரை எழுதப்பட்ட தொடரின் தொகுப்பு 

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரினூடாக இதுவரை செங்கொடி விமர்சித்த அனைத்துக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இதுவரை நாம் எழுதிய அனைத்தையும் ஒரே தொகுப்பாக வெளியிடப்படுகிறது.

  1. முன்னுரை 
  2. தொடர் 01 
  3. தொடர் 02 
  4. தொடர் 03 
  5. தொடர் 04 
  6. தொடர் 05 
  7. தொடர் 06 
  8. தொடர் 07
  9. தொடர் 08
  10. தொடர் 09 
  11. தொடர் 10 
  12. தொடர் 11
  13. தொடர் 12
  14. தொடர் 13
  15. தொடர் 14
  16. தொடர் 15
  17. தொடர் 16
  18. தொடர் 17
  19. நூஹின் கப்பல்: புராணக்கதையல்ல! உண்மைக்கதை! தொடர் 18
  20. குகை வாசிகளும் குழப்பும் செங்கொடியும் தொடர் 19
  21. அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் (?) அம்பலம் தொடர் 20
  22. நட்சத்திரங்களும் நகைப்பிற்குரிய வாதங்களும் தொடர் 21
  23. குர்ஆனின் காலப்பிழைகளா? செங்கொடியின் கணிப்பின் குறைகளா? தொடர் 22  
  24. சிக்கிக்கொண்டது யார்: அல்லாஹ்வா? செங்கொடியா? தொடர் 23
  25. பொய்யெல்லாம் உண்மையாகுமா? தொடர் 24
  26. நிலவின் பிளவும் செங்கொடியின் புரள்வும் தொடர் 25
  27. செங்கொடியின் அரைகுறை ஆய்வுகள் தொடர் 26
  28. தடையமுள்ள அல்லாஹ்வின் அத்தாட்சிகள் தொடர் 27
  29. சிந்தனைக்கும் உண்டு கடிவாளம் தொடர் 28
  30. அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன் தொடர் 29
  31. மிஃராஜும் மிரளும் செங்கொடியும் தொடர் 30
  32. ஸம் ஸம் நீரும் செங்கொடியின் சல்ஜாப்பும் தொடர் 31
  33. பரிணாமவியல் ஓர் அறிவியல் புரட்டு! தொடர் 32
  34. சத்தியமே வெல்லும் முடிவுரை 

Tuesday, May 17

அறிவை அடகு வைத்த அவ்லியா பக்தர்கள்


சமுதாயத்தின் சாபக்கேடு!
Mohamed Ihsas

இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் (?) பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு. 

முன்னைய காலத்தில் வாழ்ந்து மரணித்த நல்லாடியார்களின் கப்ருகளின் மீது ஓரு வழிபாட்டுத்தலத்தை எழுப்பி அதில் மக்கள் தங்களது தேவைகளை கேட்டல், அவர்களுக்காக அறுத்துப்பலியிடல் போன்ற செயல்களை செய்து வருகின்ரனர். இது இஸ்லாத்தின் அடிப்படையோடு பலமாக மோதுகின்ற ஒரு மாபாதகச்செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் ஷிர்க எனும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச்சேர்த்து விடும் கொடிய இணைவைத்தலாகும். இதை அறியாத சில மக்கள் இதுதான் சரியானது என்றெண்ணி தமது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இறந்தவர்கள் இறந்தவர்களே!

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது!

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று  குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பாற்ற வேண்டும்.

ஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்

தர்கா வழிபாடு இந்தியாவிலும் இலங்கையிலும் மலிந்து கானப்படுகிரது. ஊருக்கொரு அவ்லியா தெருவுக்கொரு அவ்லியா என்றும் பத்தாமல் நாலுக்கு நாள் புதுப்புது அவ்லியாக்கள் முளைத்துக்கொண்டும் இருக்கின்ரனர். அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு பிரபல்யமான தர்காவாக நாகூர் தர்காவை எடுத்துக்காட்டலாம் இது மட்டுமன்றி அடையாளங்காணப்படாத தர்காக்கள் இன்னும் இருக்கின்றன.

அண்மையில் சன் தொலைக்காட்சியில் 'நிஜம்' எனும் நிகழ்ச்சியில் பழவேற்காடு ஏறி அருகிலுள்ள வேநாடு எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் ஷா வலியுல்லாஹ் என்பவரின் தர்கா எடுத்துக்காட்ட்டப்பட்டது. இதில் அந்த தர்காவில் நடக்கும் ஒரு கேலிக்கூத்தான செயல் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் ஷா வலியுல்லாஹ் சுவாசிக்கிரார். அவர் சுவாசிப்பதால் அவரது அடக்கத்தலத்தில் மூச்சு விடுவதுபோன்ற ஒரு செயல் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு அமாவாசையும் இப்படி மூச்சு விடுகிறார் (?) என்ற அவ்வற்புதத்தை பார்க்கவென சாரை சாரையாக மக்கள் இங்கு குழுமுகின்றனர். ஆனால் இங்கு மூச்சு விடுவதாக இவர்கல் கருதும் செயல் உண்மையிலேயே மூச்சு விடுவதுதானா? இல்லை ஏதாவது வேதியல் மாற்றமா? என்பதையும் தொகுத்து வெளியிட்டுள்ளனர். இது ஒரு வேதியல் மாற்றம் என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான விளக்கங்களுக்கு வீடியோவை பார்த்து அறிந்து கொள்க!) ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ இது அந்த அவ்லியாவின் கராமத் என்று அறிவை இழந்து பேசுவது மிகவும் வேதனையாகவுள்லது. இது அறிவியலும் இல்லை! இஸ்லாத்திலும் இதற்கு ஆதாரம் இல்லை! என்பதை ஏனோ சிந்திக்க மறந்துவிட்டனர்.





எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இதுபோன்ற கேவலமான செயல்கள் இஸ்லாத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்தும் என்றாலும் அல்லாஹ்வின் அருளால் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஏகத்துவ எழுச்சியினால் இதை சரிவர மக்கள் அடையாளம் கான ஆரம்பித்துள்ளனர். இதன் எதிரொலி அந்த வீடியோ விவரனத்தில் பேசும் தொகுப்பாளர் "இதுபோன்ற சடங்குகள் இஸ்லாத்திலேயே கேள்விக்குறியானதுதான்" என்று பேசியது தெளிவாக படம்பிடித்துக்காட்டுகிரது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!

இனி களத்தில் இறங்க வேண்டியது நம் கடமை!

இந்த தர்கா வழிபாட்டுக்கெதிராக களமிரங்கிப்போறாடும் ஓர் அமைப்பாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கானப்படுகிரது. இதுபோன்ற பல்வேறு தர்காக்களை எதிர்த்துப்பேசினாலும் இந்த தர்கா பற்றி ஏதாவது விழிப்புணர்வு நடந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்லது. அதுவும் இது போன்ற மூட நம்பிக்கை ஏனைய தர்காகளில் இல்லை! இது பற்றி அப்பிரதேச மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது ஒவ்வொரு ஏகத்துவ வாதியின் கடமை! இதை செயல்படுத்த தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்வரவேண்டும். 

Monday, May 16

என்றுதான் திருந்தப்போகிறார்களோ?

Mohamed Ihsas
உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் விட மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவன் மனிதன். காரணம் மற்ற எல்லா உயிரினங்களையும் விட அவனிடம் இருக்கும் சிறப்புத்தகுதியான பகுத்தறிவுதான். இதன் மூலம் அவன் நாளுக்கு நாள் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறான். அந்த வரிசையில் கண்டுபிடிக்கப்ப்பட்ட சாதனம்தான் வீடியோ கேமராக்கள். இன்று இது அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினிமாத்துறைகளில்தான்.

ஆரம்பத்தில் தெருக்கூத்தாகவும், மேடை நாடகங்களாகவும் இருந்து படிப்படியாக சினிமா எனும் ஒரு துறையாகவே மாறிவிட்டது. மேலை நாடுகளில் ஹொலிவூட் என்றும் இந்தியாவில் ஹிந்தி திரைப்படத்துறை பொலிவூட் என்றும் தமிழ் நாட்டு திரைப்படத்துறை கொலிவூட் என்றும் பரிணாமம் பெற்றுள்ளது. இந்த துறையால் மனித குலத்திற்கு ஏதும் நன்மை வந்துள்ளதா என்று சிந்தித்துப்பார்த்தால் இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு சமூகத்தில் கேடுகெட்ட கலாச்சாரங்களும், அசிங்கமான பழக்க வழக்கங்களும் மேலோங்கிக்காணாப்படுகின்றன. ஒரு காலத்தில் இதுபோன்று நடிப்புத்தொழில் செய்தவர்கள் கூத்தாடிகள் எனும் பெயரில் கேவலமாகக்கருதப்பட்டவர்கள் இன்றோ ஸ்டார் என்று போற்றிப்புகழப்படுகிறார்கள். இவர்கள் ஸ்டார் ஆவதற்கு அப்படி என்ன் சாதனை செய்தார்கள் என்று பார்த்தால் கண்ட கண்ட பெண்களுடன் அரை குறை ஆடைகளுடன் ஆடியதும், சிகரட் வைன் போன்ற கேடுகெட்டப்பழக்கத்துக்கு தன்னை அடிமையாகவும் அதுதான் ஆண்களுக்கு அழகானதும் என்று காட்டியதும்தான் இவர்கள் ஸ்டார் எனப்பட்டம் வாங்க வைத்துள்ளது. இதில் உள்ள பித்தலாட்டங்களை நாம் சிந்திக்கிறோமா? இது சமூகத்திற்கு நல்லதா? கெட்டதா? என்று யோசிக்கிறோமா? இதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதை எண்னிப்பார்க்கிறோமா? என்றால் இல்லை! ஏன்? அந்தளவுக்கு எமது பகுத்தறிவை மழுங்கடித்து எம்மை அறியாமலேயே நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்!

தற்கொலைக்கு முயன்ற ரசிகன் (?)

தமிழுலகில் மட்டுமல்ல! உலகம் பூராவூம் கூட இப்போது வியாபித்திருக்கும் ஒரு பெயர்தான் ஸூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் எனும் கூத்தாடி. இவர் தற்போது உடல் நலக்குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும் வீடு வருவதும் என்றே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி இவருக்கு என்னதான் நோய்? தெரியாமல் முழிக்கின்றனர் அப்பாவி ரஜினி பக்தர்கள். இதனால் வேதனையுற்ற ஒரு 19 வயது இளஞன் தீக்குளிக்கும் அளவுக்கு சென்று பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளான் என்ரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்? இவருக்கு நோய் வந்தால் எங்கோ இருக்கும் ஒருவன் தீக்குளிக்குமளவுக்கு என்ன செய்தார் அந்த ஸூப்பர் ஸ்டார்? இவனது தாய்க்க்கு அல்லது தந்தைக்கு ஒரு நோய் ஏற்பட்டால் இவ்வாறு செய்வானா? குறைந்தது மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று மருந்தாவது எடுத்துக்கொடுப்பானா என்றால் இல்லை! பெற்ற தாயையும் வளர்த்த தந்தையையும் விட பாசத்திற்குரியவராக ஒரு கூத்தாடி இருக்கிறார் என்றால் இவர் இந்த இளஞனுக்கு என்ன செய்தார்? இவன் தீக்குழிப்பதால் மட்டும் ஸூப்பர் ஸ்டார் பிழத்துக்கொள்வாரா? அல்லது எனக்காக ஒருவன் தீக்குழித்துவிட்டானே என்று கவலைப்படுவாரா? மாறாக காதிலே கூட போட்டுக்கொள்ளமாடார்! இந்த சினிமாத்துறை இவனது பகுத்தறிவை எந்தளவுக்கு முடக்கிவிட்டது என்பதை சிந்தித்துப்பர்ர்க்க வேண்டும். இதுபோல் இன்னும் எத்தைனையோ கிறுக்கர்கள் இருக்கலாம்  இவர்கள் இந்த மாயையிலிருந்து மீண்டு வர வேண்டும்.



யார் இந்த ஸூப்பர் ஸ்டார்?

இவரது ரசிகர்களுக்கு ஓர் அளவே இல்லை! இவருக்காக உயிரைக்கொடுக்கத்துணியும் இளைஞர் கூட்டம்! கண் முன் காட்சிதந்தால் கடவுளைப்பார்த்ததுபோன்ற பூரிப்பு இந்த 'பக்தர்'களுக்கு! ஆஹா ஓஹோ என்று போற்றிப்புகழ்வதும், தலைவர் என்று வெட்கமில்லாமல் கோஷம் போடுவதும் இன்று இளைஞர்களின் தொழிலாகிவிட்டது. இவர் இந்த இளைஞர்களுக்கு அப்படி என்ன செய்தார்? பெரிதாக ஒன்றுமில்லை! எப்படி ஸ்டைலாக சிகரட் பிடிப்பது? என்று படித்துக்கொடுத்தார் அவ்வளவுதான். அதுதான் இளைஞர்களின் மத்தியில் மிகவும் விருப்புக்குரியவராக இருக்கிறார். இது தவிர இவரால் தமிழுலகம் கண்ட பயன் என்ன? எம்மை ஏமாற்றி எம்மிடம் பணம் பிடுங்கும் ஒரு தொழிலைச்செய்ய்யும் கூட்டத்தைச்சேர்ந்தவர்தான் இந்த ரஜினி. எம்மை ஏமாற்றுவதற்காக தந்திரம் செய்கிறான். நாம் வாயைப்பிழந்துகொண்டு நிற்கிறோம்! எமது பணம் மற்றும் நேரத்தையும் வீணடிக்கிறோம். வாழ்க்கையை நாசமாக்குகிறோம். இவரை ஒரு ரோல்மாடலாக எடுத்துக்கொண்டு சீரழிந்த இளஞர்கள் எத்தனை பேர்.... சினிமாதான் வாழ்க்கை என்று போய் வாழ்வை தொலைத்து விட்டு நிற்பவர்கள் எத்தனை பேர்? இன்று நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று கேட்டால் நான் ஒரு நடிகனாக வர வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது இந்த உலகம். அதற்கு களமமைய்த்துக்கொடுக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறது டிவி சேனல்கள்.

சினிமாவின் சீர்கேடுகள்

இந்த சினிமா எனும் துறையினால் இவ்வுலகம் அடைந்த நன்மைகள் (?) என்ன? சினிமா வந்ததற்குப்பிறகுதான் இவ்வுலகத்தில் ஒழுக்கம் கெட்டு குட்டிச்சுவராய்ப்போனது என்று சொல்லலாம். அந்தளவுக்கு ஒழுக்க விடயத்தில் தலைகீழாக சென்றுகொண்டிருக்கிறது. இது சினிமாத்துறை வருவதற்கு முன்னுள்ள காலத்தையும் தற்போதைய காலத்தையும் ஒப்ப்ட்டுப்பார்த்தால் உண்மை விளங்கும். திரைப்படங்களில் காட்டப்படுவது அனைத்தும் உண்மையா? ஹீரோ ஒற்றை ஆளாக நின்று 100 பேரைக்கூட சமாளிப்பதாக காட்டப்பட்டவுடன் அதைப்பர்ப்பவர்கள் வாயைப்பிளந்துகொண்டு நிற்கின்றனர். இதெல்லாம் சாத்தியமா? முடியுமா? நிஜ வாழ்க்கையில் இவரால் இப்படி செய்துகாட்ட முடியுமா? என்றெல்லாம் சிந்திப்பதில்லை! இவர் அடிக்கும் அடியில் கட்டிடங்கள் கூட நொறுங்கி விழுவதாக காட்டுகிறார்கள். உண்மையில் என்ன நிலை? அப்படி அடித்தால் இவர் அடுத்த நொடியே கையைத்தொலைத்துவிட்டு நிற்க வேண்டும். இதைப்பார்த்து மலைத்துப்போய் நிற்கின்றனர். காதல் எனும் கருமாந்திரத்தை ஏதோ ஒரு பெரிய தியாகம் போன்று காட்டியவுடன் அது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டு காதலுக்கும் அடிமையாகிவிடுகின்ரனர். இதைபோல் அடுக்கிக்கொணடே போகலாம் அந்தளவுக்கு அசிங்கங்களும், கிறுக்குத்தனங்களும், பித்தலாட்டங்களும் நிறைந்த ஒரு துறைதான் இந்த திரைப்படத்துறை. இதன் பிறகு எம்மில் ஒட்டியிருந்த கொஞ்ச நெஞ்ச வெட்க உணர்வு கூட அற்றுப்போவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. நடிகர்கள் தங்களை திரைப்படத்தில் உத்தமர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்களை விட அயோக்கியர்கள் இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லுமளவிற்கு கேவலாமன செயற்பாட்டையே மேற்கொள்கின்ரனர். இவர்களது உண்மை முகம் தற்காலத்தில் வெளியில் வந்து நாறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்குப்பின்னால் சென்று கொண்டிருப்பதை எண்ணிப்பார்த்தால் மிகவும் வேதைனயாகவுள்ளது.
இதுபோன்ற ஒரு கேடுகெட்ட துறையை நாம் இனிமேலும் ஆதரிக்கக்கூடாது! எமது பிள்ளைகளும் இதில் ஆட்பட்டுவிடாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

Saturday, May 14

சத்தியமே வெல்லும்

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... முடிவுரை

செங்கொடி என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக "இஸ்லாம்:கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடரின் கீழ் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்து வருகிறார். அது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு வருவதாக செங்கொடி சம்மதித்திருந்தும் பின்னர் முடியாது என்று ஒதுங்கி விட்டார்.(இவர் முடியாது என்றதற்கான காரணங்கள் ஏற்புடையதல்ல என்பதை ஏற்கனவே நாம் தெளிவு படுத்தியும் உள்ளோம்.) இதன் பின்னர், நாமே இவரது வாதங்களுக்கு மறுப்பளிக்க முன்வந்தோம்! அல்லாஹ்வின் அருளால் இதுவரை அவர் எவற்றையெல்லாம் விமர்சித்தாரோ அவை அனைத்தும் தவறு என்பதையும் நிரூபித்துக்காட்டியுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆனாலும் செங்கொடி இதன் பின்னும் தொடர்வார் என்றே கருதுகிறேன். ஏனெனில், இவர் இறுதியாக எழுதிய தொடரில் அது சம்பந்தமாக இன்னும் எழுதவிருப்பதை தெரிவிக்கிறார். ஆனால், அக் குறிப்பிட்ட தலைப்பு எழுத்து விவாதத்தின் மூலம் சரியாக முடிவு எட்ட முடியாது. ஆகவே, நாம் இவருக்குப் பயந்து பின்வாங்காமல் துணிவுடன், "நீங்கள் நேரடியாகவே விவாதத்திற்கு வர வேண்டும்” என அழைப்பு விடுக்கிறோம். அந்த அழைப்பை செங்கொடி கட்டாயம் ஏற்றே ஆக வேண்டும். ஏனென்றால், நான் நேரடி விவாதம் செய்யமாட்டேன் என்பதற்கு அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு வாதங்களையும் தவறு என்று நிரூபித்துள்ளோம். நாம் இஸ்லாத்தைப்பற்றி விமர்சித்ததும் அதுக்குப்பயந்து கொண்டு ஓடி ஒழியவில்லை; மாறாக துணிவுடன் களத்தில் குதிக்கத்தயாராக இருகிறோம் என்பதை காட்டும் முகமாகவே நேரடி விவாதத்திற்கும் அழைக்கிறோம். ஆனால், செங்கொடி சாக்குப்போக்கு கூறி ஓடி ஒழியவே நினக்கிறார். முதல் தடவையாக விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஏற்க மறுத்த செங்கொடி ஈற்றில் ஏற்றுக்கொண்டார். பின்னர் நான் ஏன் பி.ஜேவுடன் நேரடி விவாதம் செய்ய விரும்பவில்லை? எனும் கட்டுரையில் அவர் வாபஸ் வாங்கியதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு எமது "செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு" எனும் பகுதியில் முதலாவது பகுதியிலேயே அவை ஏற்கத்தக்கவையல்ல என்பதை எழுதியுள்ளோம். அதைப்பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

செங்கொடிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாகவே அழைப்பு விடுத்தார் பி.ஜே. ஆனால் செங்கொடி நான் பி.ஜேவுடன் விவாதம் செய்ய மாட்டேன் என்றுதான் தலைப்பிட்டுள்ளார். ஆக, செங்கொடிக்கு பி.ஜேவுடன் விவாதம் செய்ய விருப்பமில்லை என்றால் போகட்டும்! பி.ஜே தவிர்ந்த ஏனைய அறிஞர்களுடனாவது விவாதத்திற்கு வருவாரா? செங்கொடியின் நிலை உண்மையிலேயே சரியானது என்றிருந்தால் அவர் விவாதத்திற்கு தயக்கம் தெரிவிக்கக்கூடாது! ஏன்? ஒரு டெஸ்டில் கேள்விகளையும் கொடுத்து அதற்கான ஆன்ஸரையும் கொடுத்து தயாராகிக்கொண்டு வா என்றால் எந்த மாணவனும் பரீட்சை எழுத தயங்க மாடான். அது போல்தான் செங்கொடியின் கேள்விகளுக்கு பதிலையும் கொடுத்து முடிந்தால் நேரடி விவாதத்துல் வந்து உங்கள் நிலையை நிரூபித்துக்காட்டுங்கள் என்று அழைப்பு விட்ட பின்னும் தயங்கினால் என்ன அர்த்தம்? விவாதத்தில் நாம் அழித்த பதிலை விட மிகவும் சிறப்பான முறையில் பதிலளிக்க முடியும் என்பதால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

இது போன்ற எழுத்து விவாதங்கள் மக்களை சென்றடைவதை விட நேரடி விவாதங்கள் நேரடியாகவும் துரிதமாகவும் உழைக்கும் மக்களைசென்றடையும். எழுத்து விவாதத்தில் ஏற்படும் நேர விரயம், பொருளாதார விரயத்தை விட நேரடி விவாதத்தில் மிக மிக குறைவாகவே ஏற்படும்! ஆனால், பயன் நிறைவாக இருக்கும் என்பது யதார்த்தம் என்பதனால்தான் நேரடி விவாதத்திற்கு நாம் அழைக்கிறோம். இதன் பிறகும் மறுத்தால் இவரது வாதத்தில் இவருக்கே தெளிவில்லை என்பதுதான் அர்த்தம்

இதன் காரணமாகவே, இவரது அனைத்து விமர்சனத்திற்கும் பதிலளித்துவிட்டு விவாததுக்கு வருமாறு அழைக்கிறோம். இதன் பிறகும் அவர் ஒரு முடிவு சொல்லாமல் இழுத்துக்கொண்டு சென்றால் இவர் அறிவு நாணயமற்றவர் என்பதுதான் கருத்து!

எனது மனமார்ந்த நன்றிகள்...

இந்த தொடர் எழுதுவதற்கு என்னைத்தூண்டிய முக்கிய காரணம் செங்கொடியின் நேரடி விவாதம் தொடர்பான மழுப்பல்தான். நான் விமர்சனத்திற்கு புதியவன்; அனுபவமில்லாதவன்; மேலும் ஓர் மாணவன் என்பதால்  எனக்கு அவ்வப்போது இணைய வசதிகளை ஏற்படுத்தித்தந்த எனது நண்பர்களுக்கும் கொள்கைச்சகோதரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

இஸ்லாத்திற்கெதிராக எத்தகைய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டாலும் அது சத்தியத்தின் முன் சமாத்யாகும் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (21:18)

Tuesday, May 10

பரிணாமவியல் ஓர் அறிவியல் புரட்டு!

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே.... இறுதித்தொடர்

மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

செங்கொடியின் இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... எனும் தொடரின் அண்மையில் வெளிவந்த தொடர் இது. இதில் செங்கொடி, பரிணாமம் பற்றிய எமது எதிர்க்கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அவர் அளிக்கும் பதில்களிலுள்ள அபத்தத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

முதலாவதாக, நாம் வழக்கமாக டார்வினின் பரிணாமவியல் கொள்கை நிரூபிக்கப்பட்டதல்ல! ஒரு யூகம் என்று கூறிவருகிறோம். இதற்கு பதிலளிக்கப்புகுந்தவர் அது நிரூபிக்கப்பட்ட அறிவியல்தான் என்பதை நிரூபிக்காமல் அது அறிவியல் யூகமா? அல்லது வெறும் யூகமா? என்று விளக்குகிறார். இது எமது கேள்விக்கான பதிலே அல்ல! அது அறிவியல் யூகமாகவே இருக்கட்டும்! இதனால் அக்கொள்கை சரியானதாகிவிடுமா? அறிவியல் ஆய்வுகளில் எத்தனையோ கொள்கைகள் வரும். அவற்றை யூகமாக, அறிவியல் யூகமாகத்தான் கருதப்படும். பிற்காலத்தில் அது தவறு என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு சரியானதை கொள்கையாக பிரகடனப்படுத்துவார்கள். ஒரு காலத்தில், அறிவியல் இப்போதைய காலத்தைப்போன்று இல்லாத காலத்தில் இது ஒரு கொள்கையாக இருந்திருக்கலாம். தற்போது, ஜீனோம் யுகத்தில் இருந்துகொண்டு, அதை சரிகான இயலாது! அது ஒரு நிரூபிக்கப்படாத கொள்கை! பழைய குப்பை! இது தவறு என்றால் அது நிரூபிக்கப்பட்டதுதான் என்று நிறுவ வேண்டும்.

அடுத்து, குரங்கு மனிதனாக மாறினான் என்றால் இப்போது ஏன் எந்தக்குரங்கும் மனிதனாவதில்லை? எனும் கேள்வியை அடிப்படையற்றது என்கிறார். ஏன்? குரங்கு மனிதன் ஆவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன! இன்னும் நான்கு கோடி ஆண்டுகள் எமது வாழ் நாள் இருந்தால் அதைப்பார்க்கலாம் என்று கூறுகிரார். இது அறிவியலா? அடிமுட்டாள்தனம்! குரங்கு மனிதனாவதற்கு நான்கு கோடி ஆண்டுகள் தேவை என்றால் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மூதாதையின் சந்ததிக்குரங்கு இப்போது இல்லாமலா போய் விட்டது? தொடர்ந்து வந்துகொண்டுதானே இருக்கிறது! பதிலென்ற போர்வையில் பசப்புகிறார்! இதற்குள் எம்மை நோக்கி பரிணாமவியலை அறியாதவர்களின் நினைப்பு என்ரு ஜம்பம் அடிக்கிறார்.

மூன்றாவதாக, மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால் மனிதன் இன்னும் பரிணாமம் அடையவில்லையே? ஏன்? எனும் கேள்விற்கு ஓர் அழகிய (?) பதிலளிக்கிறார்.

யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் முடியாது. பரிணாமத்தின் முக்கியமான காரணியே சூழலால் பாதிக்கப்படுவது. சூழலால் தாக்கப்பட்டு நிர்ப்பந்தத்திற்குள்ளாகும் உயிரினங்கள் விரைவாக பரிணமிக்கின்றன. மனிதனைப் பொருத்தவரை தனக்கு ஏற்ப சூழலை மாற்றியமைத்து கொள்ளும் திறனுடன் இருக்கும் உயிரினினம் என்பதால் பரிணாமம் மெதுவாகவே நிகழும்.

மனிதன் பரிணாமம் அடைவான் அதற்கு லேட் ஆகும் என்றால் இதை கண்டுகொள்ளத்தேவையில்லை! ஆனால் அப்படி தாமதவாதற்கு இவர் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல! அதிலுள்ள தவறை கண்டுபிடிக்க முடியாத வகையில் வார்த்தை ஜாலம் காட்டியுள்ளார்! அதுதான் மனிதன் தனக்கேற்ப சூழலை மாற்றிக்கொள்பவன் எனும் வாசகம்! இது சரியா? பரிணாமம் அடைவதற்கு இயற்கைத்தேர்வு முக்கியம். அந்த இயற்கையைத்தான் சூழல் என்கிறார்! சூழலை மாற்றலாம்! இயற்கையை மாற்ற இயலாது! இதை அறிந்த செங்கொடி சூழல் எனும் வார்த்தையை சூட்சுமமாக பயன்படுத்தியுள்ளார்! எனவே இந்த வாசகம் சரியாகவும் உண்மையாகவும் எப்படி வர வேண்டுமெனில், மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்பவன் என்றுதான் வரவேண்டும்! செங்கொடி எழுதியதற்கு அர்த்தமும் அதுதான்! ஒரு மனிதன் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால் பரிணாமம் நிகழுமா? நிச்சயமாக இயலாது! ஏன்? மனிதன் பல செல் பிராணி! அவனுடைய ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி கட்டமைப்புக்கள் கானப்படகின்றன. ஆனால், மனிதனின் மூதாதையான (?) ஒரு செல் பிராணிகள் தமது அனைத்துத்தேவைகளையும் ஒரு செல்லின் மூலமே நிகழ்த்திக்கொண்டன! நிகழ்த்திக்கொண்டும் இருக்கின்றன. எனவே பரிணாமம் என்பது எப்படி சாத்தியம்? சாத்தியமே இல்லை! ஒரு செல்லின் மூலமே அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்றால் எதற்காக பல செல்லின் தேவை ஏற்பட்டது? பரிணாமத்திலுள்ள தவறு புரிகிறதா? எனவே இவரது வாதப்படி பார்த்தால் கூட மனிதன் லேட்டானாலும் பரிணாமம் அடைய மாடான்! இதற்கு முதலும் பரிணாமம் அடைந்திருக்க முடியாது! இப்படியில்லை என்றால், இவரது மேலோட்டமான வாதப்படி, சூழல் அதாவது இயற்கையை மாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு வாதிடலாம்.

நாம் பரிணாமம் தவறு என்பது இவர்கள் சில ஆதாரங்களை காட்டுவர். நகங்கள் வளர்ச்சியடைவது குறைவு, முடி வளரும் வீதம் குறைவு போன்ற சில ஆதாரங்களை பரிணாமத்திற்கு சான்றாக எடுத்துக்காட்டுவர். இது பரிணாமம் என்றால் அதை மறுக்கப்போவது இல்லை. இவை சரியானது. நிரூபிக்கப்பட்டது. ஆனால், ஒரு இனம் இன்னொரு இனமாக மாறுவதற்கு இந்த ஆதாரத்தில் எந்தச்சான்றும் கிடையாது!

அடுத்து நாம் கேட்கும் ஒரு கேள்வியை திரித்து கூறுகிறார். நாம் மனிதன் மண்ணிலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக மனித உடலிலுள்ள பெரும்பாலான தனிமங்கள் மண்ணிலுள்ளவைதான் என்று கூறுகிறோம். ஆனால் செங்கொடி, இதை அறிவியல் நிரூபித்துவிட்டதாக நாம் கூறுவதாக கூறுகிறார். அப்படி கூறுவதில்லை! ஆனால், இவர் கொடுக்கும் பதிலும் சரியில்லை!
மனிதனின் உடலிலுள்ள 58 தனிமங்கள் மண்ணிலிருந்து வந்தது. ஆனால் அந்த மண்ணிற்கே அடிப்படை 108 தனிமங்கள்! இதை நாம் திரிப்பதாக கூறுகிறார்.

மனித உடலில் இருக்கும் தனிமங்கள் என 58 வகை தனிமங்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள் அறிவியலாளர்கள். இதை களிமண்ணிலிருந்து மனிதனை படைத்ததாக கூறும் குரானின் கூற்றை மெய்ப்படுத்துவதாக கூறமுடியாது. மென்டலீப் எனும் வேதியியலாளர் சுமார் 108 தனிமங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார். பூமியிலுள்ள எந்தப் பொருளானாலும் அவற்றுக்கு இந்த தனிமங்கள் தான் அடிப்படை. ஆனால் மனித உடலிலிருக்கும் தனிமங்களுக்கு மண்தான் அடிப்படை என மதவாதிகள் திரிக்கிறார்கள். மண் ஒரு பொருள் அந்தப் பொருளுக்கும் மேற்கண்ட தனிமங்களே அடிப்படை என்பது தான் உண்மை.

இவரது வாதம் சரியா? மண் 108 தனிமங்களால் ஆனவை என்பதால் மண்னிலிருந்து மனிதன் படைக்கப்படவில்லை என்றாகிவிடுமா? இது ஒரு வாதமா? கதிரை ப்ளாஸ்டிக்கினால் ஆனது என்று கூறினால், அந்த பிளாஸ்டிக் ரப்பரிலிருந்து உருவாகிறது. அதற்கு ரப்பர் மரம் அடிப்படை! இவர் திரிக்கிறார் என்று ஒருவன் கூறினால் எவ்வாறிருக்குமோ அவ்வாறிருக்கிறது இவரது பதில். பாமரன் கூட இப்படிக்கேட்க மாட்டான்.

மனிதன் மட்டுமல்ல உல‌கின் அனைத்துப் பொருட்களும் மேற்கண்ட தனிமங்களினால் ஆனவையே. ஆனால் குரான் மனிதனை மட்டும் சிறப்பாக களிமண்ணினால் படைத்ததாக கூறுகிறது. மனிதன் உட்பட உலகின் அனைத்துப் பொருட்களுக்குமே மேற்கண்ட தனிமங்களினால் ஆக்கப்பட்டிருக்க குரான் மனிதனை மட்டும் களிமண்ணால் படைத்ததாக கூறுவதிலிருந்தே அதற்கும் அறிவியலுக்கும் உள்ள பொருத்தம் எளிதில் விளங்கும்.

ஒன்றை மறுக்க வேண்டும் என்பதற்காக எத்தனை விடயங்களில் விளையாடுகிறார்! எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை ஒரு செல்தான்! இது எல்.கே.ஜி! ஆனால், உண்மை அதற்கும் அடிப்படை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் அணு. செங்கொடியின் வாதம் இவ்வாறுதான் அமைந்துள்ளது!

மட்டுமல்லாது மனிதன் பூமியிலுள்ள களிமண்ணிலிருந்து படைக்கப்படவில்லை. சொர்க்கம் அல்லது வேற்று கிரகத்திலுள்ள ஒருவகை களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் மனிதனின் உடலிலுள்ள தனிமங்கள் அனைத்தும் பூமியிலுள்ளவையே. பூமியில் இருக்கும் தனிமங்கள் வேற்று கிரகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றாலும் பூமியில் இல்லாத ஒன்றிரண்டு தனிமங்களாவது மனிதனின் உடலில் இருந்தாக வேண்டுமல்லவா? அப்படி எந்த தனிமமும் இல்லை என்பதிலிருந்தே மனிதன் முழுக்க முழுக்க பூமியின் தயாரிப்பு என்பது உறுதியாகிறது.

இஸ்லாம் என்ற பேரில் எதையாவதொன்றை விட்டு அடிப்பது இவரது வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. மனிதன் பூமியிலுள்ள மண்ணிலிருந்து படைக்கப்படவில்லை என்கிறார். இதற்கு இவர் ஆதாரத்தைக்காட்ட வேண்டும். எந்த குர்ஆன் வசனத்தில் அல்லது எந்த ஹதீஸில் ஆதம் (அலை) சுவர்க்கத்து மண்ணினால் படைக்கப்பட்டார் என்றுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும்.

அடுத்து ஒரு கேள்வி,

பலமான விலங்கே உயிர்வாழும் என்று பரிணாமவியல் கூறுகிறது. பலமான விலங்கான புலியை அரசு தனியாக நிதி ஒதுக்கி பாதுகாக்க வேண்டியுள்ளது, பலவீனமான ஆடு பல்லயிரம் கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா டார்வின் தத்துவம் ஏற்கமுடியாத ஒன்று என்பது?

இதற்கு ஓர் அற்புதமான சூப்பரான பதிலளிக்கிறார்.

தகுதியான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும், பலமான விலங்கு உயிர்வாழும் என்பதற்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. சூழ்நிலையின் வினைப்பாட்டை தாக்குப்பிடித்து நீடிக்கும் விலங்கே உயிர்வாழும் தகுதியைப் பெறும். டைனோசர்கள் வாழும் காலத்தில் அவற்றைவிட பலசாலியான வேறு விலங்குகள் எதுவும் பூமியில் இல்லை. ஆனால் ஒரு குறுங்கோள் பூமியை தாக்கியபோது அதை தாக்குப்பிடித்து வாழும் வலிமையை பலசாலியான அந்த விலங்குகள் பெற்றிருந்திருக்கவில்லை என்பதால் அவை அழிந்துபோயின. ஆடுகளுடன் ஒப்பிடுகையில் புலிகள் வலிமையானவை தான். ஆனால் மனிதனின் உணவுத்தேவையே ஆடுகளை கோடிகளில் வாழவைத்திருக்கிறது. புலிகளிடம் இவ்வாறான தேவை எதுவும் மனிதனுக்கில்லை. ஒருவேளை புலிகளை மனிதன் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தால் அதும் எண்ணிக்கையில் அதிகம் இருந்திருக்கக் கூடும். அதேநேரம் ஆடுகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பது வெள்ளாடு, செம்மறியாடு எனும் இரண்டு வகைதான். இந்த இரண்டும் மனிதனின் உணவுத்தேவையை பூர்த்தி செய்கின்றன. இதே ஆட்டினத்தில் வரையாடு என்றொரு வகை உண்டு. தமிழ்நாடு அரசின் விலங்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வரையாடுகள் அரசின் நிதி ஒதுகீட்டிற்கும், பராமரிப்புக்கும் பிறகும் கூட எண்ணிக்கையில் குறைந்துகொண்டே செல்கின்றன. இது ஏன் என சிந்திப்பவர்களுக்கு அந்தக் கேள்வியிலுள்ள பித்தலாட்டம் புரியவரும்.

இந்த பதில் பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லை! ஒரு விலங்கு அதிகமாக வேட்டையாடப்பட்டால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமாம்! என்ன லாஜிக் இது? துளியும் இதில் உண்மை அல்லது பகுத்தறிவு இருக்கிறதா? வெங்காயத்திற்கு அதிக டிமாண்ட் இருந்தால் அதன் எண்ணிக்கை அதிகரிக்குமா? குறையுமா? எது அதிகமாக சாப்பிடப்படுகிறதோ அது அதிகரிக்கிறது! எது சாப்பிடப்படுவதில்லையோ அது குறைகிறது. இது எப்படி சாத்தியம்? பகுத்தறிவு இந்த இடத்தில் தவறிழைக்கும்! ஏன்? இது நேர்மாற்றமான விளைவு! இது கூட இறைவன் இருக்கிறான் என்பதற்கான சான்றுதான். கூட, வரையாடு குறைகிறது என்கிறார் அது இக்கேள்வியின் பித்தலாட்டத்தை புரிய வைக்கும் என்கிறார். ஆனால், அது செங்கொடிக்கு எதிரான வாதம் என்பதைக்கூட செங்கொடி சிந்திக்கவில்லை! வரையாடு சாப்பிடப்படுவதில்லை! இதனால் குறைகிறது.  ஆக, இவரது பதில் துளி கூட பகுத்தறிவுக்கு ஒப்பானதல்ல! இவ்வளவுதான் இத்தொடரின் சாரம்.

பரிணாமவியல் பற்றிய வாதங்கள் மிக ஆழமாகவும் விரிவாகவும் பேசப்படவேண்டியவை! இது எழுத்தில் விவரிப்பதை விட நேரடி விவாதத்தில்தான் சாத்தியம். அதனால்தான், மிகவும் சுருக்கமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செங்கொடியோ இத்தொடரை இதே தலைப்பின் கீழ் இன்னும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன் "இத்தொடரை முடிக்கவில்லை! இன்னும் வரும்! கேள்விகளுக்கான பதிலின் பின் மீண்டும் தொடர்வேன்..." என்று கூறி முடிக்கிறார். ஆனால், இது முறையானதல்ல!  இவை ஆழமான விடயம் என்பதால் நேருக்கு நேர், உடனுக்குடன் பதிலில்தான் தெளிவு கிடைக்கும்! அதில்தான் அழகாக விவரிக்கவும் முடியும் என்பதால் நாம் இது தொடர்பான விடயத்துக்கும் இன்னும் செங்கொடி இதுவரை பேசிய விடயங்களுக்கும், இன்னும் எவையெல்லாம் பேசப்பட வேண்டுமென்கிறாரோ, அவற்றுக்கும் நேரடி விவாதம் மிக மிக ஏற்புடையது என்பதால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமாஅத் சார்பாக நாம் செங்கொடியை நேரடி விவாதத்திற்கு மீண்டும் அழைக்கிறோம்! செங்கொடி பயப்படாமல், மழுப்பாமல், பல்டி அடிக்காமல் வருவார் என்று எதிர்பார்க்கிறோம். இத்துடன் எமது "செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே..." எனும் தொடரை முடிக்கலாம் என எண்ணுகிறேன். எமது முடிவுரையில் மீதி விடயங்களையும் இம்முடிவிற்கான காரணங்களையும் சகோதரர்கள் அறிந்துகொள்ளலாம்.

முடிவுரையை நாளை மறுதினம் எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்

Monday, May 9

ஸம் ஸம் நீரும் செங்கொடியின் சல்ஜாப்பும்


செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-31

ஸம் ஸம் நீரூற்றும் குரானும் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அரைப்பதற்கு எந்த சரக்கும் மாட்டாததால் தேடிப்பார்த்து எதையாவது ஒன்றை அரைக்கவேண்டியதுதான் என்று முடிவுகட்டிய செங்கொடி இப்போது ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறார். எழுதித்தள்ளியிருக்கிறார் என்றதும் கேள்விகள் கொத்துக்கொத்தாக உள்ளன என்று நினைத்துவிட வேண்டாம். கேள்வி எங்கே என்று தேடிப்பார்க்கவே சில நிமிடங்கள் தேவை! அந்தளவுக்கு அற்புதமாக அறிமுகம் செய்திருக்கிறார். வழக்கம்போல கேள்வியைவிட அறிமுகமே மிக அதிகம்! எனவே ஆங்காங்ககே கேட்ட ஓரிரு கேள்விகளை மாத்திரம் கவனத்தில் கொள்வோம்.

முதலாவதாக கேட்பது இது 4000 ஆயிரம் வருடங்களாக நீரை தந்துகொண்டிருக்கிறது தவறு என்கிறார். ஏன் தெரியுமா? அதுபற்றிய குறிப்புகள் வரலாற்றில் இல்லையாம் எனவே, அது தவறு என்கிறார். வரலாற்றில் குறிப்பு இல்லாவிட்டால் அந்த நீரூற்று பழமையானது என்பது தவறா? அது நீரை தந்துகொண்டிருப்பது தவறா? என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதால் அதன் பின்னே ஒரு ஆதாரத்தை தூக்கிப்போடுகிறார். அந்த ஆதாரம் என்ன தெரியுமா? இப்பொழுது நாம் ஸம்ஸம் நீரூற்று என்பது அப்துல் முத்தலிப் கட்டிய கிணறாம்!

இப்போதிருக்கும் ஊற்று முகம்மதுவின் காலத்திற்கு சற்றுமுன் முகம்மதின் பெரிய தந்தையான அப்துல் முத்தலிப் என்பவர் குறைஷிகளின் நீர்த்தேவையை தீர்ப்பதற்காக தோண்டிய கிணறு. 

அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையா? என்னே ஓர் ஆய்வு! இவர் வரலாற்றை ஆய்வு செய்யும் லட்சணத்தைப்பார்த்தால் இவருக்கு PhD பட்டம் கொடுக்க அரசு முடிவெடுத்துவிடும். அப்துல் முத்தலிப் என்பவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாத்தா! அவருடைய பெரிய தந்தையல்ல! இந்த லட்சணத்தில்தான் ஸம்ஸம் நீரூற்றைப்பற்றி எந்த வரலாற்றுக்குறிப்பும் இல்லை என்று கூறுகிறார். சரி அது போகட்டும்! அப்துல் முத்தலிப் கட்டியதுதான் இந்த கிணறு என்பதற்கு ஏதாவது ஆதாரத்தை காட்டினாரா? முன்பெல்லாம் எதை குறிப்பிடாலும் ஹதீஸ் எண் தொடக்கம் அறிவிப்பவரின் பெயரையும் சேர்த்துக்குறிப்பிடுபவர் இதற்கு எதையுமே கூறவில்லையே! ஒரு வேளை இதற்கு மறுப்பு என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எழுதி இழுத்தடிக்க வேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தவிர்த்துவிட்டாரா? ஒன்றும் புரியவில்லை. வரலாறு என்ற பேரில் புழுகியுள்ளார்! இவரது கயமைத்தனம் முன்பை விட அதிகமாகவே இப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவர் இதற்கு ஆதாரத்தைக்காட்ட வேண்டும் இல்லையெனில் இவர் பொய்யர் என்பதை இவர் ஒப்புக்கொள்ளாவிட்டலும் மக்களுக்கு புரிந்துவிடும்.

4000 ஆண்டுகளாக அது நீடித்து நிற்கிறது என்பதை மறுத்து அற்புதம் இல்லை என்கிறார். ஆனால் 1500 ஆண்டுகளாக அது வற்றாத நீருற்றாக இருந்து வருவதை அவரே ஒப்புக் கொண்டு இது அதிசயம் தான் என்பதை  ஏற்றுக் கொள்கிறார். கால அளவில் தான் இவருக்கு கருத்து வேறுபாடு உள்ளதே தவிர அது அற்புதம் எனதில் அல்ல என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்

1971ல் எகிப்திய மருத்துவர் ஒருவர் இந்தக் கிணறு குறித்து ஐயம் எழுப்பியதாகவும் அதைத் தீர்ப்பதற்கு மன்னர் பைசல் நீர் மற்றும் விவசாய அமைச்சரவையிடம் இது குறித்து விசாரிக்குமாறு பணித்ததாகவும், அவர்களால் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரிக் ஹுசைன் என்பவர் அந்தக் கிணற்றின் ஆழம் தோராயமாக ஐந்து அடி இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் அந்தக் கிணற்றின் ஆழம் 30 மீட்டர் என்று சௌதி அரசின் இணைய தளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படித்தான் அந்த நீரின் புனிதம் குறித்து கதைகள் கட்டி பரப்பப்படுகிறது. அதுவே மதத்துடன் தொடர்புடையது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிவிடுகிறது.

ஒருவர் ஐந்து அடி என்று குறிப்பிடுவதையும் மற்றவர் 30 மீட்டர் என்பதையும் இணைத்து முரண்பாடு எனும் தோற்றத்தை காட்ட முற்படுகிறார். ஐந்து அடி என்பது அந்த கிணற்றில் உள்ள தண்ணீரின் ஆழம்! ஆனால் அதை கிணற்றின் ஆழம் என திரிக்கிறார். அல்லது எந்த தளத்தில் இருந்து அக்கிணற்றின் ஆழம் ஐந்து அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை செங்கொடி காட்ட வேண்டும். அத்தோடு சவூதி இணையதளங்களில் 30 மீட்டர் என்றுள்ளதாக குறிப்பிடுகிரார். அந்த தளத்தையும் சேர்த்து செங்கொடி காட்ட வேண்டும்.

இந்த நீரில் இருக்கும் தனிமங்களின் செரிவு குறித்தும், இது புனித நீராக இருப்பதால்தான் இவ்வாறு இருக்கிறது என்பதாகவும் பிரதாபிக்கின்றனர். ஆனால் இதை விட பழமையான ஊற்றுகளெல்லாம் இதுபோல தனிமங்களின் செரிவுற்றதாக இருந்திருக்கிறது. சீனாவில் லிசான் மலையில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெப்ப நீரூற்று மருத்துவ தன்மை கொண்டதாக பயன்பாட்டில் இருக்கிறது.

லிசான் மலையில் உள்ளது போன்றதா ஸம் ஸம் நீரூற்று? அல்லது அதன் தனிமங்களை போன்றதா லிசான் மலையிலுள்ள நீரூற்று? அந்த நீரூற்று எந்த மாசும் ஏற்படாமல் இப்போதும் பயன்பாட்டில்தான் உள்ளதா? எதை எதோடு முடிச்சுப்போடுகிறார். ஒரு பாலைவனத்தில் எந்தவிதமான நீர்முதலின் துணையுமில்லாமல் இருப்பது ஸஸம் நீரூற்று! லிசான் மலையிலுள்ள கட்டப்பட்ட நீரூற்றும் அவ்வாறுதானா? அங்கு கட்டுவதென்றால் கூட சாத்தியப்படலாம்... ஆனால், ஒரு பாலைவனத்தில் இது சாத்தியமா? நிச்சயமாக இல்லை!

இந்த கிணற்றிலிருந்து எவ்வளவு நீரை இறைத்தெடுத்தாலும் இதன் நீர்மட்டம் குறைவதில்லை என்றும் ஒரு கருத்து உலவுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சௌதி அரசு ஏன் அந்த கிணற்றை யாரும் அணுக முடியாதபடி பாதுகாத்து வைத்திருக்கிறது என்பதில் இருக்கிறது.

அடடா! என்ன அறிவார்த்தமான பதில்! சவூதி அரசாங்கம் அதை ஒரு புனிதச்சின்னமாக கருதுகிரது! இதனால் அதைப்பாதுகாக்கிறது. அதைப்பாதுகாப்பதால் அவ்வாறு நீர் தரவில்லை என்பதா? எவ்வளவு நீர் எடுத்தாலும் குறைவதில்லை என்பது தவறு என்றால் தெளிவாக நச் என்று ஆதாரத்தை போட வேண்டும். அதை விடுத்து இப்படி அசடு வழிவது விமர்சனம் இல்லை! சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

சவூதி அரசு கிணற்றை யரும் அணுக  முடியாத படி பாதுக்காத்து வருவதால் தினமும் குறைந்தது 20 லட்சம் மக்கள் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதும் சொந்த ஊருக்கு எடுத்து வருவதும் பொய்யா? அப்படியானால் அந்த தண்ணீர் நைல் நதி சுரங்கப் பாதை வழியாக மக்கவுக்கு கொண்டு வரப்படுகிறது என்றோ அல்லது இது போல் தண்ணீர் எப்படி வருகிறது என்ற  வழியை எடுத்து கூறி மறுக்க வேணடும்
 

இவ்வளவுதான் அவரது தொடரிலுள்ள கேள்விகள். (?) இது மட்டுமில்லாமல் ஒரு முரண்பாடும் உள்ளது ஒரு பந்தியில் ஸம் ஸம் நீரூற்றைப்பற்றி எந்த குறிப்பும் குர்ஆனில் இல்லை என்பவர் இறுதியாக முடிக்கும் போது குர்ஆனில் அப்துல் முத்தலிப் தோண்டிய கிணற்றுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனக்கேட்கிறார். தனக்குத்தானே முரண்பட்டு உளறுபவர் விமர்சனம் செய்ய தகுதியானவர்தானா? தொடரை எழுதும்போது அவதானம் வேண்டும். அதுவும் கடைசிக்கு முதல் பந்தியில் ஒருவாறும் கடைசிப்பந்தியில் இன்னொருவாரும் கேட்பது இவர் எந்தளவுக்கு கவனமாகவும், நிதானமாகவும் உள்ளார் என்பதை படம்பிடித்துக்காட்டுகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

Friday, May 6

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு பகுதி-06


ஒரு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு மறுப்புத்தொடர்.... இதில் சின்ன வித்தியாசம். அது என்ன? நாம் யாரை விமர்சனம் செய்வதாக இருந்தாலும் அதை நாம் விமர்சனம் செய்பவருக்கு அறிவிப்பதுதான் முதல் வேலை. நியாயமான செயல்! இதை நான் தவறாது கடைபிடித்துவருகிறேன். ஆனால் செங்கொடி, இத்தொடரை எனது கவனத்திற்கு கொண்டுவர மறந்துவிட்டார். வேறொரு சகோதரர் சுட்டிக்காட்டித்தான் இதை அறிந்துகொண்டேன். சரி, இனி தலைப்புக்குள் நுழையலாம்.

முதன்முதலாகவே செங்கொடி ஒரு விடயத்தை ஒப்புக்கொண்டார். அதாவது, ஓரிடத்தில் முஹம்மது நபி மரணித்து 15 ஆண்டுகளில் குர்ஆன் தொகுக்கப்பட்டு விட்டதென்றும் பிறிதோர் இடத்தில் 25 ஆண்டுகளுக்குப்பிந்தான் குர்ஆன் தொகுக்கப்பட்டது என்றும் முரண்பட்டு பேசியதை சுட்டிக்காட்டினோம். அதை செங்கொடி ஏற்றுக்கொண்டு தனது கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும் கூறி ஒப்புக்கொண்டார். அதை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் ஏனையவற்றை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று  புரியவில்லை! (அதை இதே தொடரில் விளக்கியுள்ளேன்)

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இவர் சிந்தித்துதான் எழுதுகிறாரா? இக்கேள்விக்கு நாம் ஏற்கனவே தெளிவாக  பதிலளித்துவிட்டோம். அதைப்பார்த்தும் பார்க்காதவர் போல் மீண்டும் கேள்வியை கேட்கிறார். அந்த பதிலை ஒட்டுமொத்தமாக எமது நம்பிக்கை என்று ஒதுக்கித்தள்ளியும் விடுகிறார். எது தவறு என்பதைக்கூட விளக்கவில்லை! தவறு என்று நிரூபிக்க முடியுமாக இருந்தால் பதிலளித்திருக்க முடியும். நச் என்று எழுதிய பின்னர் எப்படி பதிலளிப்பது? நாம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மழுப்பிய மழுப்பல்தான் இது!  முதலில் இந்த கேள்வியே எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சிந்திக்க மறுத்துவிட்டார். அதை எமது முதல் மறுப்பில் சுட்டிக்காட்டத்தேவையில்லை என்று நினைத்தோம். ஆனால் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளார். முஹம்மது நபி முன்னின்று தொகுத்த குர்ஆன் என்று கூறுவதே மிகப்பெரும் அபத்தம்! ஏன்? முஹம்மது நபிக்கு எழுதவோ, எழுதியதை படிக்கவோ தெரியாது! பின்னர் அவரே முன்னின்று தொகுத்ததாக எப்படி கூறுவது? இதைக்கூடவா சிந்திக்க தவறுவது? முஹம்மது நபி குர்ஆன் என்று கூறியவை எல்லோர் மனதிலும் நன்றாக பதிந்திருந்தது! அதை வேறு ஓர் வடிவமாக, எழுத்துவடிவமாக மாற்றும் வேலைதான் எழுத்து வடிவில் எழுதப்பட்டது! இதை செங்கொடிக்கு புரிய வைக்க ஓர் எளிய உதாரணத்தையும் எடுத்துக்காட்டியிருந்தோம். ஆனால், எங்களுக்கு உதாரணம் தேவையில்லை நாங்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்வோம் என்றுவிட்டு இவர் ஓர் உதாரணத்தை கூருகிறார்.

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

உதாரணம் கூறுவதென்றால் பொருத்தமாக இருக்க வேணும்! நாம் எதை தவறு என்கிறோமோ அதையே உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். இதை பிரிதொரு இடத்திலும் விளக்கியுள்ளார். இதில் அவர் சொல்ல வருவது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் அந்த ஹதீஸ் பலவீனம்!ஏற்கமுடியாதது! நாம் ஏற்காத ஒன்றை எமக்கெதிராக காட்டுவது முறையல்ல என்று குறிப்பிட்டோம். அதற்கெதிராக கொதித்தெழுந்தவர்,

ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? 

முஸ்லிமில் இடம்பெற்றுவிட்டால் அது சரியானதுதான் என்று இவருக்கு யார் சொன்னது? ஒருவர் பலவீனம் என்று தீர்ப்பளித்தவைதான்  பலவீனம் என்று எந்த விதியில் உள்ளது? இவை இவருக்கு யார் சொன்னது? ஒரு ஹதீஸ் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை அறிய இரண்டு அளவுகோளகள் உள்ளன. ஒன்று அந்த ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதாக இருந்தால் அது பலவீனம். இரண்டாவது அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குறை இருந்தால் அதுவும் பலவீனம். செங்கொடி முஸ்லிமில் வருவதாக காட்டும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது! அது ஆதாரமற்றது! இதுபற்றி அடுத்த தொடரில் விளக்குவேன் என்று குறிப்பிட்டது இதைத்தான். ஆனால் செங்கொடியோ இந்த ஹதீஸைப்பற்றித்தான் விளக்குவேன் என்று புரிந்துகொண்டார் போலும்! அதுதான், விளக்குவேன் என்று சொல்லியும் விளக்கவில்லையே என்று கேட்கிறார். இந்த ஹதீஸ் தொடர்பான விளக்கம் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் அழகாக, விரிவாக விளக்கப்பட்டுள்ளது! இதுமட்டுமல்லாமல், எவை எவையெல்லாம் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ அவற்றின் ஒரு பகுதியும் அந்த நூலில் இடம்பெற்றுள்ளது அதன் லிங்கை கொடுத்த்திருந்தும் அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் இத்தொடரில் மீண்டும் குறிப்பிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்!

புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. 

மேற்குறிப்பிட்ட நூலில் ஒரு பகுதி ஹதீஸ்கள் உள்ளன. பார்த்துக்கொள்ளவும்! பிரச்சினை எழுந்ததும் சரியானதைக்கூட தவறு என்று ஒதுக்கிவிட்டூச்சென்றால் எங்கள் மக்களே எங்களை கொன்றுவிடுவர்! நாம் இதை எப்போதோ கூறி வருகிறோம்! முஸ்லிம்களுடன் குறிப்பாக தமிழக முஸ்லிம்களுடன் தொடர்பில்லாமல் வந்துவிட்டு இங்கு எமக்கு நேர்மை பற்றி க்ளாஸ் எடுக்கிரார்.

செங்கொடி இதில் மற்றுமோர் அறியாமையையும் கட்டவிழ்த்துவிடுகிறார். அல்லாஹ் குர்ஆனில் நாமே இதைப்பாதுகாப்போம் என்று கூறினாலும் மனித முயற்சியினால்தான் இது பாதுகாக்கப்பட்டது எனும் தோரணையில் சிலவற்றை குறிப்பிடுகீரார். இவர் அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அல்லாஹ்வே நேரில் வந்து அதை ஏதாவது செய்து பாதுகாப்பான் என்று நினைத்துக்கொண்டு கேட்கிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் எப்படி பாதுகாப்பான் என்று சொல்லியுமிருக்கிறான். இந்த குர்ஆன் கல்வியாளர்களின் உள்ளத்தில் பாதுகப்படும் என்று இறைவன் கூறுகிறான். இதுதான் அந்த பாதுகாப்பு ஏற்பாடு! அவன் கூறியபடி மக்களின் உள்ளத்தில் எந்த தவறுமின்றி பாதுகாக்கப்பட்டது! ஆனால் எழுத்தில் பாதுகாக்கப்பட்டது மனித சிந்தனைதான்! அதனால்தான் சில எழுத்துப்பிழகளும் காணப்பட்டன. அதைக்கூட மனன சக்தியால் திருத்திவிட்டனர்! இப்போது இறைவன் எப்படிப்பாதுகாத்தான் என்று புரிகிறதா? அல்லாஹ் செல்வத்தை வழங்குவான் என்றால் அவனே நேரடியாக வந்துதருவான் என்று புரிந்துகொள்வார் போலும்.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே பதிலளித்துவிட்டோம்! மீண்டும் மீண்டும் பழைய பல்லவிய பாடிக்கொண்டிருக்கிறார்! அதற்கு நாம் தயாரில்லை! அதை மீண்டும் ஒருதடவை நன்றாக வாசித்துப்பார்த்தால் மூளையுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அடுத்து ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார். இவரது ஐந்தாவது தொடரில் ஒரு குர்ஆன் வசனம் முகம்மது நபிக்கு பிறகு வந்ததாகத்தான் இருக்கும் என்று கண்டுபிடித்து (?) கூறினார்! அது எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் என்பதை எமது மறுப்பில் எழுதியும் கூட முக்கியமானதை தவிர்த்துவிட்டு அடுத்த ஸ்டெப்புக்கு பாய்ந்து ஓடிவிட்டார்! ஏனென்றால் அதற்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு உளறிக்கொட்டியிருந்தார்! இவர் சரியான ஆளாக இருந்திருந்தால் அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்திருக்க் வேண்டும். அதை விட்டுவிட்டு எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நாம் கேட்பது வேறு இவர் சொல்வது வேறு என்று பல்டி அடிக்கிரார்! சரி, இதன்பிறகாவது வாய்திறந்தாரா என்றால் அதை முகர்ந்து கூட பார்க்கவில்லை! அந்தளவுக்கு உளறிய விடயம் அது! அது என்ன? குர்ஆனில் அவர் குறிப்பிட்ட அந்த வசனத்த்ல் எழுதுகோல் என்று வருவதற்கு எழுதும் தாள் என்று அர்த்தம் செய்து தனது அதிமேதாவித்தனத்தை காட்டியிருந்தார்! அதற்கு பதிலளிப்பார் என்றுபார்த்தால் அதை விட்டுவிட்டு அதை கண்டே கொள்லாம அது எழுதுகோல் எனும் அர்த்தத்திற்கு தாவி மை விடயத்திற்கு பல்டி அடிக்கிரார்! சரி, அதிலாவது ஒழுங்காக இருக்கிறாரா என்று பார்த்தால் அதிலும் அதே உளறல்தான்.

முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

ஆஹா! இந்தளவுக்கு இவருக்கு ஞானம் இருக்கிறது என்பதை என்ணி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது! முஹம்மது நபியின் காலத்தில் மை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார் அது தவறு மை பயன்படுத்தியிருக்கிறார் என்றதும் அது மதீனாவில் பயன்படுத்தினார் என்று சமாளிக்கிறார். நபியவர்கள் வாழ்ந்த மதீனா வாழ்க்கையும் மக்கா வாழ்க்கையும் என்ன கற்கால்த்துக்கும் கம்பியூட்டர் காலத்துக்கும் இடையிலிருந்த வேறுபாடா? முகம்மது நபி மதீனாவில் கடிதம் எழுதும் தேவை இருந்ததால் மையைப்பயன்படுத்தினார். அதனால் மக்கவில் வாழ்ந்த போது மை பயன்பாட்டில் இல்லையென்றாகிவ்டுமா? தோல்களில் குர்ஆனை எழுதியதாக வருகிரது! தோல்களில் மை இல்லாமல் வேறு எதைப்பயன்படுத்தி எழுத முடியும்? அறிவுடந்தான் எழுதுகிராரா? மக்கீ மதனீ என்று வாதாட ஆரம்பிக்கிரார் அந்த அத்தியாயம் மக்கீ என்றிருப்பதால் அந்த வசனமும் மக்கீ என்றாகிவிடாது! மக்கீ மதனீ என்பது பல அத்தியாயங்களில் ஆதாரமில்லாமலும் தவறான அளவுகோளின் படியும் எழுதப்பட்டது! மக்கிக்கு என்ன ஆதாரம் மதனிக்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர் இப்போது இது மக்கீ மதனீ என்று வாதிட்கிறார்! இவரை அல்லாஹ் எந்த நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிட்டான்  என்று பாருங்கள்.

இவர் முரண்பட்டு பேசியவைகளையும் ஒரு கேள்வியாக கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கும் சமாளிப்புப்பதிகளை பார்த்தால் தலை சுற்றும் அளவிற்கு உள்ளது.

இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

முகம்மது நபி மரனித்ததன் பின் பல விதங்களில் குர்ஆன் நடமாடத்துவங்கியது என்பது முரண்! பச்சைப்பொய்! என்று எழுதியிருந்ததற்கு சமாளிக்கிரார்! ஆனால் இது சரியா? பொதுவாக கூறுவது பொருத்தமானது என்பதால் எழுதினாரா? நிச்சய்மாக இல்லை! 

முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது.  என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்! எனவே இவர் பொதுவானது என்று கதையளப்பது இவர் எனக்கு அளிக்கும் மறுப்பல்ல! இவர் இவருக்கே அளிக்கும் மறுப்பு! அதாவது முரண்!

அடுத்து இன்னொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்டியிருந்தோம்! அதையும்  சமாளித்திருக்கிறார்!

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. 

விலக்கப்படாவிட்டால் அது முகம்மது அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் மசூதியாகப் பாதுகாக்கப்படுகிரது என்பது சரியாகிவிடுமா? பிற்காலத்தில் உள்வாங்கப்படடது எப்படி அவரது பாதுகக்கப்பட்ட மசூதியாக முடியும்? வரலாறு தெரியாமல் உளறியுள்ளர் என்பதுதான் உண்மை! அதை  ஒத்துக்கொண்டால் கேவலம் என்றுதான் இப்படியெல்லாம் சமாளிக்கிறார்! இவர் தவறைதிருத்திக்கொள்பவரா? இதனால்தான் முன்னராகவே ஓரே ஒரு தவறி நான் திருத்திவிட்டதாக பிதற்றுகிறார்!
இதை நுணுகிப்பார்க்க தேவையில்லை என்பது ஏன் தெரியுமா? நுணுகிப்பார்த்தால் அந்தளவுக்கு குப்பை உள்ளது! வார்த்தைக்கு வார்த்தை பிடித்தால் மாட்டிக்கொன்டுவிடுவோம் என்று எண்ணியவர் இதயெல்லாமா  பார்ப்பது என்று கெஞ்சுகிறார்!

சரி, இதையெல்லாம் எதற்காக கூறினார் தெரியுமா? அதையும் அவரே சொல்கிறார்,

முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே அதன் ஆரம்பத்திலேயே பதில் உள்ளது! முஹம்மது நபி முன்னின்று தொகுத்ததுதான் அபூபக்கர் காலத்திலும் உஸ்மான் காலத்திலும் தொகுக்கப்பட்டது! இதில் எந்த கூடுதல் குறைவோ  இருக்கவில்லை! இதை திருப்பித்திருப்பிக்கேட்டு எனக்கு புரியும் திறன் குறைவு என்று தெளிவு படுத்துகிரார்.

இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

நான் குறிப்பிட்ட வரிசை எது? இவர் குறிப்பிடும் வரிசை எது என்று புரியும் திறன் கூட இல்லை! வசன எண்கள்தான் இல்லை! வசன வரிசை சரியாக இருந்தது! அத்தியாய வரிசைதான் மாறுபட்டது! அதுவும் முகம்மது நபி காலத்திலிருந்து அபூபக்கர் காலத்தில் எழுதப்பட்த்ததில் அத்தியாய வரிசை இல்லை! ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறாக இருந்தது! இதை உதாரணத்துடன் தெளிவு படுத்தியும் புரியுமளவிற்கு சக்தியில்லாமல் இருக்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இந்த தொடரில் இவர் அடிக்கும் கூத்துகளே சொல்லி மாளாது! இதில் கம்யூனிசத்தைப்பற்றி தொடர் ஆரம்பித்தால் நிலமை இதை விட மோசமாகும்! இவருக்கு திராணியிருந்தால் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்! நாம் விடுக்கும் அழைப்பு இன்னும் காத்துக்க்ண்டுதான் இருக்கிறது! இவர் விட்டாலும் நாம் விடப்போவது இல்லை! இவருடைய உளரலுக்கு ஒரு முடிவு கட்டியாகவே வேண்டும்! நேரடி விவாதத்தில்தான் அது சாத்தியம்!

இந்த தொடரை பார்த்தால் மண்டையே காய்ந்துவிடும் போல் உள்ளது! அந்தளவிற்கு முன்னுக்குப்பின் முரண்,உளரல்,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை! இவருடைய கருத்துக்கு இவரே முரண்பட்டு பேசுவது.... அப்பப்பபா! இவர் ஆரம்பத்தில்  இரண்டு முக்கியமான கேள்வி என்று கேட்டார்! அவையிரண்டுக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது!. அதில் இரண்டாவது கேள்விக்கு நாம் அளித்த பதிலுக்கு வாயே திறக்கவில்லை! ஏனையவற்றிற்கு அதும் எவற்ரையெல்லாம் மழுப்ப முடியுமோ அவற்றுக்கு மட்டும் மழுப்பியுள்ளார். இன்னும் அவர் கேட்ட கேள்விகல் பலவற்றிற்கு அளிக்கப்பட்ட பதிலுக்கு வாய் திறக்கவில்லை! எனவே இதில் பலவற்றை அவர் ஒப்புக்கொண்டார் என்பதே யதார்த்தம்! எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இவரது சப்பைக்கட்டுகள் தொடரும் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்

Wednesday, May 4

மிஃராஜும் மிரளும் செங்கொடியும்

செங்கொடியின்கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-30

விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

மிஃராஜ் எனும் விண்வெளிப்பயணம் நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடைபெற்றதாக குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன. இதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியாக வேண்டும். இதுவும் நம்பிக்கை தொடர்பானதுதான். அதனால்தான் இதையும் ஒரு கருப்பொருளாக செங்கொடி எடுத்துக்காட்டுகிறார். இந்த தொடரில் வழக்கம்போல கேள்வியை விட அறிமுகமே விரிவாக உள்ளது. அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு இவரது கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

இதில் அவர் கேட்கும்  கேள்வி என்ன? முஹம்மது நபி ஓரிரவிற்குள் ஏழு வானங்களையும் கடந்து சென்றதாக குறிப்பிடுகிறோம். ஒரு பிரபஞ்சத்தின் அளவே 2500 கோடி ஒளியாண்டுகள். இது நொடிக்கு நொடி விரிந்துகொண்டே செல்கிறது. உலகில் ஒளியின் வேகத்தை விட அதிவேகமானது இல்லை! அப்படியிருக்கும் போது ஓரிரவினுள் ஒரு பிரபஞ்சத்தையே கடக்கமுடியாது எனும்போது எப்படி ஏழு வானங்களையும் கடந்து சென்றார்? என்று கேட்கிறார்.

ஒரு பிரபஞ்சத்தின் அளவு 2500 கோடி ஒளியாண்டுகள் என்பது அதன் விரிவை அதாவது அதன் நீளவாக்கில் அதன் விரிவைக்குறிப்பது! ஏழு பிரபஞ்சங்களும் சீடி போன்று தட்டையாக ஒன்றன்மேல் ஒன்று அடுக்கியது போன்று உள்ளது. அதற்கிடையிலான குறுக்கு நீளமும் 2500 கோடி ஒளியாண்டுகள்தானா? சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி சப்பைக்கட்டு கட்டுவதற்குப்பெயர்தான் இவரது மறுப்பு (?). ஒருவேளை 2500 கோடி ஒளியாண்டுகள் என்றே வைத்துக்கொள்வோம். இது இந்த காலத்து அளவு! 1400 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த அளவுதானா இருக்கும்? நிச்சயமாக இதை விட பல கோடி மடங்கு குறைவாகத்தான் இருக்கும். அடுத்து, ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தது போல உள்ளதே என்கிறார். ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகம் உலகில் இல்லை என்பது உண்மை! ஆனால், இதைவிட வேகமாக பயணிக்க வைக்க படைத்தவனுக்கு முடியும்! அவன் சர்வ சக்தியுள்ளவன். உதாரணமாக, விண்டோஸ் எனும் கம்பியூட்டர் ஒப்ரேட்டின்க் சிஸ்டத்தை உருவாக்கியவர் பில் கேட்ஸ். இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் சிஸ்டத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பாதுகாப்பானது! எந்தவொரு ஹேக்கரினாலும் அதை உடைக்க, ஹேக் செய்ய முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அது எந்தவடிவில் வருமோ அந்த வடிவில்தான் பயன்படுத்தமுடியும். நாமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவோ அதன் அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டினை மாற்றியமைக்கவோ, அதை கண்டுபிடிக்கவோ முடியாது. ஆனால் இதை உருவாக்கிய பில்கேட்சிற்கு முடியும்! அவர் நினைத்த நபருக்கு சொல்லிக்கொடுக்கவும் முடியும். அப்படி மாற்றும்போதோ வேறொரு நபருக்கு சொல்லிக்கொடுக்கும்போதோ இது சாத்தியமில்லை எனலாமா? முடியாது! அவ்வாறுதான் படைத்த இறைவனுக்கும். அவன்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தினையும் உருவாக்கினான். இதை ஒரு சிஸ்டமேடிக்காக இயங்க வைக்கிறான். இதனால் அந்த சிஸ்டத்திற்கு கடவுளும் விதிவிலக்கல்ல என கூற முடியாது! அப்படியிருக்கும்போது இந்த கேள்வி எந்தவகையிலும் அறிவுபூர்வமானது அல்ல! இன்னுமொன்றைப்புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இவ்வுலகில் ஒளியை மிகைத்த வேகம் இல்லை என்று கூறினாலும் பெருவெடிப்பு நிகழ்ந்த போது வெடித்துச்சிதறிய துகள்கள் சென்ற வேகம் ஒளியைவிட மிகைத்தது என்று கூறுகின்றனர்! அப்படியிருக்கும்போது இவை அசாத்தியம் என்று கூறமுடியாது! படைத்தவனுக்கு இவை சர்வசாதாரணம். இவையை மறுக்கவேண்டுமெனில் கடவுள் இல்லை என்றுதான் முதலில் வாதிட வேண்டும்.
இவரது தொடரில் கேட்ட ஒரே ஒரு கேள்வி இதுதான்.

ஆக நம்புவதற்கு கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறான் என்பவர்களுக்கு இது நம்புவதில் துளியும் சங்கடம் இல்லை! குர்ஆன் இறைவேதம் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன! அப்படியிருக்கும்போது இதுவும் சரிதான்! சாத்தியம்தான்! இதை நம்ப முடியாது என்றால் கடவுள் இல்லை என்று முதலில் நம்ப வேண்டும். இது தவறு! பகுத்தறிவுக்கு துளியும் சம்பந்தமில்லாத கருத்து என்பது எமது நிலை.
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிரிக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாகபல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்கும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பவர்கள் விலகிச் செல்லுங்கள். சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.

சென்கொடிக்கு இதை மறுக்க மிஞ்சி மிஞ்சிப்போனால் இவ்வாறுதான் கூறமுடியும். மாறாக கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாது! அந்த வினையால் உதிர்த்த முத்துக்கள்தான் இது! இவருடைய கையாளாகாத்தனத்தை எண்ணி பரிதாபப்படத்தான் முடியும்...! எனவே இதை கண்டுக்ள்ளத் தேவையில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ் 

 

Friday, April 29

அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-29

மீனின் வயிற்றில் மனிதனைப்பாதுகாத்த அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அல்லாஹ் யூனுஸ் நபியை கண்டித்த  விதம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது யூனுஸ் நபியை ஒரு மீன் விழுங்கியதாகவும் பின்னர் அவர் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரியதால் அவரை விட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். இதில் செங்கொடி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.
மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்... சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியாது என்றும் அளந்து விடுகிறார்கள்.

 அல்லாஹ்வை ஏதோ ஒஅர் அற்பனைப்போன்று நினைத்துக்கொண்டுதான் இக்கேள்வியைக்கேட்கிறார். அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன் என்பதை மறுக்கும் விதமாக கேட்கிறார். நாம் மீண்டும் சொல்கிறோம், அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை. இதுபோன்ற சம்பவங்களை மறுக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்பதை இவர் நிரூபித்தாக வேண்டும்! இதுவரை அவர் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது இப்படி கேட்பது இவரது இயலாமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்கள் இருப்பதென்பது தவறாம். என்ன மறுப்பு பாருங்கள். அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டும் அதை மறுக்க முடியாமல் உளறிக்கொட்டிக்கொண்டும் இருப்பவர் எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்! இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் முன்னறிவிப்புகள் உள்ள வசனங்கள் தவறாகிவிடுமா? என்ன எழுதுகிறோம் என்பதை சிந்தித்துதான் எழுதுகிறாரா?
இந்த சம்பவத்தை கூறும் வசனத்தில் மீன் என்று மொழிபெயர்க்கும் இடத்தில் 'ஹூத்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் திமிங்கிலத்தை குறிக்கும் சொல். நீலத்திமிங்கிலங்கள் பிரம்மாண்டமான உடலமைப்பைக்கொண்டவை. அவை ஒரே தடவையில் 50 பேரை  நாக்கில் வைத்திருக்கும் அளவுக்கு விசாலமானவை. 50 பேரை வைத்திருக்க முடியும் எனும் போது ஒரு நபரை அதனுள் வைக்க படைத்த இறைவனுக்கு முடியாதா? அவன் நம்மைப்போன்றவனா? எமது நம்பிக்கைக்குள் இருந்து விமர்சிக்காமல் வெளியே போய் விமர்சித்து தன அதிமேதாவித்தனத்தை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார் செங்கொடி. எப்படி விமர்சிப்பது எனும் அறிவு கூட இவருக்கில்லை.

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோள்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

இவரது உளறலுக்கு ஒரு அளவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த சம்பவத்தை விமர்சிப்பவர் அதன் பின்னுள்ள வசனங்களில் உள்ளதைக்குரிப்பிட்டாரா? அப்படி குறிப்பிடாவிட்டாலும் இதை அவர் விளக்கிக்கூறும் போதாவது குறிப்பிட்டாரா? இல்லை! யூனுஸ் நபி மீன் வயிற்றில் வசதியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமான பொய்!
அவற்றை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்.(37:145)

அவர் நோயுற்றவராக வெளியே எறியப்பட்டுள்ளார் என்றால் அவர் மீனின் வயிற்றினுள் சொகுசாக வாழ்ந்தார் என்று எப்படி புரிந்து கொள்வது? இவரது உளறலுக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு அளவில்லை எனும் அளவிற்கு இவரது தொடர் முழுவதும் கொட்டிக்கானப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் செறிவுள்ள அசிட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் நொதியங்களும் உள்ளதுதான்! ஆனால் இந்த மீனினுள்ளும் அப்படி உள்ளதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும் இந்த வசனம் தவறாகாது! அவர் நோயுற்றவராகத்தான் வெளியே எறியப்பட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு சமுதாயத்தை குரங்குகளாக மாற்றிய சம்பவத்தையும் செங்கொடி விமர்சிக்கிறார். இந்த சம்பவம் இரண்டும் விமர்சனத்திற்கு உரிய விடயமே இல்லை! இதை விமர்சிக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்று வாதிட வேண்டும்! அல்லது உலக விடயங்களில் குர்ஆன் தவறாக கூறியுள்ளது என்றாவது வாதிட வேண்டும்! எதையும் செய்யாமல் இவற்றை விமர்சிப்பது கையாளாகத்தனம்!

குரங்குகளின் மூதாதை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன்தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது குருட்டுவாதம்! அதை நாம் ஏற்கமாட்டோம்! ஆனால் இது அல்லாஹ் செய்வது. அவனுக்கு இது சிரமமல்ல என்பதுதான் எமது வாதம்! இதற்கெதிராக நாம் எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை! ஏன்? அவன் சர்வ சக்தன் என்று நாம் நம்புகிறோம்! அவ்வாறில்லை என்று நிரூபித்துவிட்டு வாதிட வேண்டும்.

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை  பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளை எல்லாம் ஒரு அளிப்பான் கொண்டு அளித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம்புகிறார்கள்! எப்படி என்று கேட்டால் அது இயற்கை என்கிறார்கள்! இயற்கைக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்புபவர்கள் அனைத்து ஆற்றலுள்ளவன் மனிதனை குரங்காக மாற்றினான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்! இவர்கள் ஒரு நிலையற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது! அதைக்கூட உருப்படியாக செய்யவில்லை!. அல்லாஹ் இல்லை என்பவர்களுக்கு இது கதைதான்! அல்லாஹ் இருக்கிறான்! அவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் என்பவர்களுக்கு இது உண்மைச்சம்பவம்! அல்லாஹ் இல்லை என்று நிரூபித்துவிட்டால் இதை நாங்கள் ஒதுக்குவதற்கு தயார்! செங்கொடி தயாரா?

வளரும் இன்ஷா அல்லாஹ்