Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, February 20

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே


தொடர்-11

குரானின் மலையியல் மயக்கங்கள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியிடப்படுகிறது.

குர்ஆனில் மலைகள் பற்றிய அறிவியல் சான்றுகளாக முஸ்லிம்கள் குறிப்பிடும் விடயங்களை மறுப்பு என்ற பெயரில் மழுப்பியுள்ளார்.

முதலாவதாக மலைகளை குர்ஆன் முளை என்றும் மலைகள் இருப்பதால்தான் பூமி எம்மை அசைத்துவிடாமல் பாதுகாக்கிறது என்று குர்ஆன் கூறுகிறது. இவற்றை மறுக்கப்புகுந்த செங்கொடி, மலைகள் முளைகளாக பூமியின் அடுக்குகளை இணைத்துவைத்திருக்கிறது என்பது மதவாதிகளின் அசட்டுத்துணிச்சல் என்கிறார். மலைகள் முளைகள் என்பது எமது அசட்டுத்துணிச்சல் என்றால் EARTH எனும் புத்தகத்தில் DR. Frank Press என்பவர் மலை முளையின் தொழிற்பாட்டைத்தான் மேற்கொள்கிறது என்று குறிப்பிடுகிறார் (பக்கம் 435) இதுவும் அசட்டுத்துணிச்சல்தாமோ?

அதுமட்டுமல்ல. பூமியில் இவ்வாறு மலைகள் இருப்பதனால்தான் எம்மை அசையாதிருக்கிறது என்று குறிப்பிடுவது இவருக்கு மயக்கம் தருகிறதாம். ஏன்? பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதில்லையா? என்ற அற்புதமான (?) கேள்வியை கேட்டு தனது அறிவின் திறன் இவ்வளவுதான் என்பதை அழகாக விளக்குகிறார். பூமியில் மலை முளைகளாக இருப்பதற்கு காரணம் பூமியின் அடுக்குகளை ஒன்றாக சேர்ப்பதற்குத்தான். இவ்வாறில்லையெனில் பூமி பூமியாகவே இருக்காது என்று மேற்படி புத்தகத்திலும் உள்ளது. நில நடுக்கம் ஏற்படுவது கண்டத்தட்டுக்கள் உரசுவதால். இதை தடுப்பது மலையின் வேலையல்லவே! நாம் கூறுவதற்கு பதிலளிக்காமல் வேறு எதற்கோ முடிச்சுப்போடிகிறார்.

அடுத்ததாக பூமியில் மலையின் உயரத்துக்குக்கூட செல்ல முடியாது என்று குர்ஆனில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறார். இதில் காமெடி என்னெவென்றால் இதில் மறுப்பதற்கு அறிவியல் ரீதியில் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் நைஸாக குர்ஆன் தமிழாக்கத்திற்கு தாவி குர்ஆனில் அப்படியில்லை இவர்கள்தான் திரித்துவிட்டார்கள் என்கிறார்.
இதை இவ்வாறு விளக்குகிறார்:

“பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள்.

ஜான் ட்ரஸ்ட் என்பது அண்மைக்கால மொழிபெயர்ப்பு அல்ல. அதில் நாமே சுட்டிக்காட்டுமளவிற்கு தவறாக பல இடங்களில் மொழி பெயர்த்துள்ளனர். மேலும் அவர்கள் அறிவியல் விடயங்களையும் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு தர்ஜமாவை இவர் தேடிப்பிடித்து எழுதுவது இவருடைய பலவீனத்தையே சுட்டிக்காட்டுகிறது. உலகில் மிகக்குறுகிய உயரத்தையுடைய மலையின் உயரம் கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர். மனிதன் சென்றிருப்பது 3 கிலோ மீட்டர். குறைந்த அளவிற்குக்கூட செல்ல முடியாது என்பது குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு மிகப்பெரிய சான்று.

இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வகையில் எந்த சரக்குமில்லை. அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுமிடத்தில் அதிக விளக்கம் இடெம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும். குர்ஆனில் குறைகாண இயலாது என்பதற்காக தமிழாக்கங்களுக்கிடயிலுள்ள வேறுபாட்டை கையிலெடுத்தது இவருடைய இயலாமையை மேலும் தெரியப்படுத்துகிறது. இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் அரபு இலக்கண ரீதியில் இது தவறு என்றுதான் இதை மறுக்க வேண்டும்! அதற்கு தயாரா? (இவருக்கு அரபு தெரியாது என்பதை தேனி பற்றிய விடயத்தில் குறிப்பிடுவோம்.) குர்ஆனில் மலையியல் மயக்கம் என்பது இவரது மதிமயக்கம்தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

விதி ஒரு வரையாவிலக்கணம்                     
தொடர்: 3
விதியும் நாத்திக வாதமும்

விதியைப் பற்றி முஸ்லிம்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் செய்யும் வாதத்தையும் அதற்கான விளக்கத்தையும் கடந்த இதழில் கண்டோம்.
நாத்திகர்களாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்களின் வாதங்களை இனி பார்ப்போம்.
இஸ்லாத்தின் விதி நம்பிக்கையில் தர்க்க ரீதியான விளக்கம் கிடையாது என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யானது என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவ்விஷயத்தை நாம் சற்று விரிவாகவே விளங்க முனைவோம்.
அண்ட சராசரங்களின் அனைத்து விஷயங்களையும் தனது சிற்றறிவால் விளங்கிட முடியும் என்ற இறுமாப்பில் தான் விஞ்ஞான உலகம் இன்னும் உள்ளது.
முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலவும் உதவும்  என்பது உண்மை தான். ஆனால் அதுவே மனிதனை, உலகில் எதையும் சாதித்து விடலாம் என்ற அளவுக்கு இட்டுச் செல்லும் என்று நம்புவது மடமையிலும் மடமை.
மனிதனது புலன் உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளப்படும் 5 அறிவுடன் சேர்த்து 6வதாக அவனுக்கே உரிய பகுத்தறிவுடனும் இவ்வுலகில் இயங்குகிறான்.
கண் எனும் புலன் உறுப்பின் மூலம் பார்த்து அறியும் அறிவைப் பெற்றுள்ளான். பார்த்து அறியும் அறிவு என்பது மனிதனுக்கு ஒரு குறித்த வரையறைக்குள் தான் இருக்கிறது. உலகிலுள்ள எல்லாவற்றையும் பார்த்து அறியும் அறிவை மனிதன் இயற்கையாகப் பெறவில்லை.
மனிதன் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி பார்த்து அறியும் அறிவின் எல்லையை விசாலமாக்கியுள்ளான். நுண்ணோக்கி,  தொலைநோக்கி இன்னும் பல நவீன கண்டுபிடிப்புகள் மூலம் காலத்துக்குக் காலம், பார்த்து அறியும் அறிவுத் திறன் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒரு காலத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்து விடலாம் என்று விஞ்ஞான உலகம் இறுமாப்புக் கொள்வதும் இதனால் தான். இதே போலத் தான் கேட்டு அறியும் அறிவு, நுகர்ந்து அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு, உணர்ந்து அறியும் அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் தனது பகுத்தறிவின் மூலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். இவ்வாறு அதிகரித்துச் செல்லும் மனித அறிவு வரையறுக்கப்பட்டது தானா?
மனித அறிவுக்கு ஏதாவது எல்லை இருக்குமா?
இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடை கண்டோமேயானால் விதி பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
ஆறறிவுடன் திகழும் மனிதனுடன் ஏராளமான பலவீனங்களும் சேர்ந்தே தான் இயற்கையில் அமைந்துள்ளது.
மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன.
இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இந்தப் பலவீனம் எதுவுமே இல்லாத இலட்சிய புருஷர்கள் யாராவது வாழ்ந்தால் அவருக்கு மாத்திரமே எல்லையில்லா அறிவுண்டு என வாதிட முடியுமே தவிர எந்த மனிதனாலும் தன் அறிவு எல்லையற்றது என வாதிட முடியாது.
தன் வாழ்நாளில் ஒரு பிழையேனும் செய்யாத ஒரு மனிதரைக் கூட நம்மால் காண முடியாமைக்கு இதுவே காரணம்.
அத்தனை விஞ்ஞானிகளும் தனது ஆய்வுகளில், ஆராய்ச்சியில், கண்டுபிடிப்புகளில் பாதிக்கு மேல் பிழை செய்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
புத்திக் கூர்மையின் தந்தை எனப் போற்றப்படும் அல்பட் ஐன்ஸ்டைன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இவர் உருவாக்கிய ஊ=ம்ஸ்ரீ2 எனும் சமன்பாடு ஊ=ம்ஸ்ரீ2-ல என்று தற்போது திருத்தப்பட்டுள்ளது.
மனிதனின் முதல் ஐந்து அறிவுகளுக்கும் எல்லை உண்டு என்பது போலவே சிந்தனா சக்தியாகிய பகுத்தறிவிற்கும் எல்லை உண்டு.
அந்த எல்லையை மிஞ்சிய அறிவு தான் விதி பற்றிய அறிவு என்று விளங்கிக் கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.
கோள்கள் அனைத்தும் ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றோடொன்று மோதி இவ்வுலகமும் மனித இனமும் அழியும் என்ற (மறுமைக்) கோட்பாட்டை விஞ்ஞான உலகம் சொல்கிறது.
எத்தனையோ கேள்விகளுக்கான விடைகள் இதனால் மனித குலத்திற்குத் தெரியாமல் போக வாய்ப்புள்ளது என்பதை விஞ்ஞானமே தன்னையும் அறியாமல் ஒத்துக் கொள்ளத் தான் செய்கிறது.
மனிதனால் அறியப்பட்ட எல்லா விஷயங்களுக்கும்  அதன் உண்மை நிலை உணர்த்தப்படவேண்டும் என்ற கட்டாயம் ஒரு போதும் இல்லை.
எனவே மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் எத்தனையோ விஷயங்கள் கூட உண்மையாக இருக்கலாம். இப்படி மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் உண்மைகளில் விதி என்றொரு கோட்பாடும் இருப்பதாக நம்புவது ஒன்றும் பகுத்தறிவிற்கு முரணானதல்ல.
விடை தெரியாத விதி பற்றிய நம்பிக்கை அறிவுப்பூர்வமானது தான் என்பதை இன்னொரு உதாரணத்தின் மூலமாகவும் விளங்கலாம்.
10 கோடி ரூபாய் பணத்துடன் யாரென்றே தெரியாத இரண்டு பேருடன் தனிமையில் பயணித்து ஒரு அறையில், தனிமையில் உறங்குவதற்கு யாராவது முன்வருவார்களா?
அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு மனிதனுடைய பகுத்தறிவும் என்ன சொல்லும்? இத்தனை பெரிய தொகையுடன் இவர்களோடு தூங்கலாமா? இவர்கள்  கள்வர்களாக மாறி விட்டால்? பணத்தாசை பிடித்தவர்களாக இருப்பார்களா? என்னைக் கொன்று பணத்தைக் கொள்ளையடிப்பார்களா? என்று சிந்தித்து, தூங்கக் கூடாது என்ற முடிவையே பகுத்தறிவு சொல்லும். பகுத்தறிவு வழங்கிய இந்த முடிவு சரியானது தான்.
இதே நேரம் தனது தாயுடனும் தந்தையுடனும் இதே போன்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மேலே உள்ளது போல் தான் நமது பகுத்தறிவு நமக்குச் சொல்லுமா?
அல்லது நமது பெற்றோர் இவ்வளவு காலமும் நம்மோடு நடந்து கொண்ட விதம், சிறு வயது முதல் அவர்கள் நம்மீது காட்டிய அக்கறை, நம்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு, பாசம் இதையெல்லாம் வைத்து, தைரியமாகத் தூங்கு என்று சொல்லுமா?
பணத்தாசை எந்த மனிதனையும் எப்படியும் மாற்றி விடலாம். எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் அவர்களை நம்புவது தான் பகுத்தறிவு.
இதுவரை சந்தித்துள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் துளியேனும் நம்மீது  தீங்கு நினைத்திராத அவர்களை இந்த ஒரு விஷயத்திலும் அட்வான்ஸாக நம்புவது அறிவுள்ள செயல் தான் என்பதை மறுக்க முடியாது.
இப்படித் தான் ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும் நடந்து கொண்டு இருக்கிறான். இதே போன்று தான் இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடாகட்டும்; சட்ட திட்டங்களாகட்டும்; வணக்க வழிபாடாகட்டும்; அறிவியல் சம்பந்தப் பட்ட விஷயமாக இருக்கட்டும்; இன்ன பிற அம்சமாகட்டும். எதுவும் அறிவுப்பூர்வமானது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களும் அறிவுப்பூர்வமாக, கண் முன்னாலேயே நிரூபிக்கப்பட்டு இருக்கும் போது, விதியை மாத்திரம் வைத்து மொத்த இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பிழையெனத் தள்ளுவது எவ்வாறு பகுத்தறிவு வாதமாக அமையும்?
இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களையும் அல்லாஹ் அறிவுப் பூர்வமாகத் தந்து விட்டு விதியை மட்டும் நமது அறிவுக்குச் சிக்காமல் வைத்திருப்பது நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகத் தான்.
எல்லாவற்றையும் சரியாகவே சொன்ன இறைவன் விதியையும் சரியாகத் தான் சொல்லியிருப்பான் என்று மனிதன் நம்புகிறானா? அல்லது விதியை மாத்திரம் வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் மறுக்கிறானா? என்று மனிதனை சோதித்துப் பார்க்கக் கூட விதியை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கலாம்.
எதையுமே விட்டு வைக்காமல் எல்லா விஷயங்களையும் அறிவுப் பூர்வமாகத் தந்தால் மனிதனை சோதித்துப் பார்க்க என்ன இருக்கிறது? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குக் கீழிருப்பவன் தன்னைக் கண்மூடி நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் போது, படைத்த ரப்பு ஒரு விஷயத்தில் மாத்திரம் நாம் அவ்வாறு நம்ப வேண்டுமென எதிர்பார்ப்பது எந்தப் பகுத்தறிவிற்கு முரணானது?
முதலாளி சொல்லும் ஒவ்வொரு வேலையையும் அறிவுப்பூர்வமாக அவர் நிரூபித்தால் தான் அதைச் செய்வேன் என்று அவனது வேலைக்காரன் சொல்வது எவ்வாறு பைத்தியக்காரத் தனமானதோ அவ்வாறு தான் இதுவும்.
ஒரு மனிதன், தான் கட்டளையிடும் எந்த ஒரு விஷயத்தையும் தனக்குக் கீழிருப்பவன் காரணம் கேட்காது செயல்பட வேண்டும் என நினைக்கும் போது, விதியைத் தவிர்த்து அத்தனை அம்சங்களையும் காரணத்தோடு இறைவன் சொல்லியிருப்பது அவனது தயாள குணத்தையே காட்டுகிறது
நம்மைப் படைத்துவிட்டு இறைவன், "நீ விரும்பியவாறெல்லாம் வாழ்ந்து கொள்' என்று நம்மை விட்டு விடவில்லை. சில செயல்களை செய்யக் கூடாது என்று நமது செயல்களுக்குக் கடிவாளம் இட்டிருக்கிறான். செயல்களுக்குக் கடிவாளம் இட்டது போன்றே சிந்தனைக்கு அல்லாஹ் இட்ட கடிவாளம் தான் விதி பற்றி சர்ச்சை செய்யக் கூடாது என்பது.
விதியினால் உண்டாகும் நன்மை
விதியினை நம்புவதால் மனித குலத்துக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
மனிதன் தனது வாழ்க்கையில் ஏராளமான இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றான்.
ஒரு மனிதன் தனது முழு முயற்சியையும் பிரயோகித்து ஒரு காரியத்தைச் செய்கிறான். அது கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகிறவன், "நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?' என நினைத்து உடனே சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். "இவ்வளவு பாடுபட்டும் கைக்கூடவில்லையே' என்று புலம்பியே வாழ்க்கையை அழித்து விடுவான்
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் தடுக்கும் கேடயமே விதி.
திடீரென மனிதனுக்கு இலாபம் கிடைத்துவிடும் போதும் அவனுக்குத் தலை கால் புரிவதில்லை. விதியை நம்பிய மனிதன் அல்லாஹ்வின் நாட்டப்படி கிடைத்தது என்று நினைக்கும் போது அவனது கர்வம், பெருமை, திமிர் போன்றவை ஒழிகின்றன.
இது தான் விதியினால் ஏற்படும் நன்மை என்பதைக் குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தி உள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
 அல்குர்ஆன் 57:23
இறுதியாக,
விதியை நம்பி முடங்கிக் கிடக்க வேண்டும் என்று மற்ற மதங்கள் கூறுவது போன்று இஸ்லாம் கூறவில்லை. மனித முன்னேற்றத்திற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாத வகையில் தான் விதியை நம்புமாறு இஸ்லாம் கூறுகிறது.
இந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ அது தான் நமது விதி என்று நமக்குத் தெரியும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.
"எது நடந்து முடிந்து விட்டதோ, விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ அந்த விதியை நம்பி ஆறுதல் படு. எது நடக்கவில்லையோ அதில் நீயாகத் திட்டமிட்டுச் செயல்படு'' என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.
விதி பற்றிய தெளிவையும் அதைப் புரியும் அளவுக்கு உள்ள அறிவையும் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் தருவான். அதுவரை அல்லாஹ்வால் ஏவப்பட்டதை அப்படியே செய்யவும் அவனால் தடுக்கப்பட்டதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் முயற்சிப்பதே அறிவுடமை!

Saturday, February 19

விதி ஓரு வரையாவிலக்கணம்                       

தொடர்:

வஹீயில் முரண்பாடு வரலாமா?

வஹீயில் முரண்பாடு வரலாமா?
இந்தக் கேள்வி நியாயமானது தான்.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை அதன் கொள்கைகளாகட்டும்! அதன் சட்ட திட்டங்களாகட்டும்! அவை அனைத்தும் அறிவுப் பூர்வமானவையே! தர்க்க ரீதியாக சரியென்று நிரூபிக்கத் தக்கவைகளே! இஸ்லாத்தின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்குத் தர்க்க ரீதியான பதில் உண்டு.
ஆனால் விதி பற்றிய முரண்பாட்டிற்கு இஸ்லாம் தர்க்க ரீதியான பதிலைத் தரவில்லை.
ஏனெனில் அதை விளங்கும் அளவிற்கு அறிவை அல்லாஹ் மனித சமுதாயத்திற்குத் தரவில்லை. இதை நானாகச் சொல்லவில்லை. எந்த அல்லாஹ் இதைக் குர்ஆனில் சொன்னானோ அதே அல்லாஹ் தான் அதே குர்ஆனில் இதை விளங்குமளவிற்கு நமக்கு ஞானமில்லை என்பதையும் கூறுகிறான்.
"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக! 
அல்குர்ஆன் 6:148 
"உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா?'' என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் இது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டான்.
எது பற்றிய அறிவு நம்மிடம் இல்லை என்பதை அல்லாஹ்வே அறிவித்து விட்டானோ அது பற்றி தீர்வு சொல்லி அல்லாஹ்வுக்கே ஆசானாகும் பாவத்தைச் செய்ய ஒரு போதும் நாம் தலைப்படக் கூடாது. மக்கள் நம்மை மடையர்களாகச் சித்தரித்தாலும் சரியே! மடையர்களும் விதியில் கேள்வி கேட்டு, தாம் அறிவாளிகளென தம்பட்டம் அடிப்பதும் இதனால் தான்.
இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒவ்வொருவரும் தானே முதலில் இதைக் கண்டுபிடித்தது போல நினைக்கிறார்கள்
இது 1400 ஆண்டுக்கு முன்னதாகவே கேட்கப்பட்ட கேள்வி.
நாங்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களின் முகம் சிவக்குமளவுக்கு  அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் கோபமடைந்தார்கள். "இப்படித் தான் நீங்கள் கட்டளையிடப் பட்டுள்ளீர்களா? இதைத் தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாகக் கொண்டு வந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத் தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன்'' என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: அஹ்மது 6381,
இப்னுமாஜா 82, திர்மிதி 2216
இந்த ஹதீஸிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? உலகத்திலேயே இஸ்லாத்தைப் பூரணமாக அறிந்து வைத்துள்ள நபிகளாரே இந்த முரன்பாட்டிற்கு விளக்கம் தராத போது நாம் எம்மாத்திரம்? மேலும் விதி பற்றி சர்ச்சை செய்வதை அவர்கள் தடுத்துள்ள போது நாம் அதற்கு விளக்கம் சொல்ல முனைவது அறிவீனம்.
எதைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லையோ அது சம்பந்தமாக கேள்வி கேட்பதும் மடமை. பதில் கூறுவதும் மடமை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமையினால் தான் விதி பற்றிக் கேள்வி கேட்கும் மேதாவிகளும் பதில் கூறும் மேதாவிகளும் உருவாகியுள்ளனர்.
உதாரணத்திற்கு எப்பாயிரெவாடிலா என்ற ஒன்று உண்டு. இதைப் பற்றி யாருக்குமே தெரியாது என்று வைத்துக் கொள்ளோம். இதைப் பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் அது மடமை. அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் அது மடமை.
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யென்றாகி விடுமா?
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பது தான் உண்மையில் அறிவுப்பூர்வமானது என்பதை நிரூபிப்பது தான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
விதி பற்றி சர்ச்சை எழுப்புவோரை இரண்டு பிரிவினராகப் பிரித்து, அவர்களின் வாதங்களுக்குப் பதிலளிக்க முனைவோம்.
1.             முஸ்லிம்களாக இருந்து அல்லாஹ்வை நம்பிக் கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
2.             நாஸ்திகவாதிகளாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்கள்
முஸ்லிம்களாக இருந்து கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
இப்பிரிவினரைப் பொறுத்த வரை எதிர்காலத்தை விதியின் மீது போட்டு அமல் செய்யாமல் இருப்பதற்கே அவர்கள் விதியில் சர்ச்சை செய்கின்றனர். "அல்லாஹ் நாடினால் எனக்குச் சுவர்க்கம் கிடைக்கும். நான் என்ன அமல் செய்தாலும் அல்லாஹ் நாடிய படியே நடக்கும். அல்லாஹ் நாடினால் தான் எனக்கு அமலே செய்ய முடியும்'' என்று கூறி விதியின் மீது பழியைப் போட்டு விட்டு அமல் செய்யாமல் இருந்து விடுகின்றனர்.
இவர்களின் இந்தக் கேள்வி கூட ஏற்கெனவே ஸஹாபாக்களினால் கேட்கப்பட்டு நபி (ஸல்) அவர்களால் பதிலளிக்கப்பட்ட பழைய கேள்வி தான்.
எனவே இவர்களின் கேள்விக்கு நபிகளாரின் கூற்றையே பதிலாகத் தருகிறோம்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் பொது மைய வாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் "சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்கüல் இல்லை'' என்று சொன்னார்கள். 
அப்போது மக்கüல் ஒருவர் "அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டு விட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடலாமா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் "இல்லை. நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லவர், கெட்டவர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எüதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறி விட்டு, பிறகு "எவர் (இறைவழியில்) வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்'' எனும் (92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்:  அலீ (ரலி)
நூல்:  புகாரி 6605
ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம் (தெரியும்)'' என்று சொன்னார்கள். அவர் "அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஒவ்வொருவரும் "எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது "எ(தை அடைவ)தற்கு வாய்ப்பüக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலüத்தார்கள்
அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 6596
இவ்வாறு கேள்வி கேட்பவர்களிடம் சென்று, அல்லாஹ்வை நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டுப் பாருங்கள். உடனே ஆம் என்ற பதிலையே தருவார்கள்.
அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பியிருந்தால் விதி பற்றியும் சேர்த்தே இவர்கள் நம்பியுள்ளார்கள் என்பதை ஏன் தான் விளங்க மறுக்கிறார்களோ?
இறைவனை நம்புவதாக இருந்தால் அவனுக்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாம் தெரியும் என்று நம்புவதே சரியானது. அறிவுப்பூர்வமானது.
அப்படித் தெரியாதவன் இறைவனாக இருக்கவே லாயக்கற்றவன்.
உதாரணத்திற்கு, நாளை நீங்கள் வெளி நாடு செல்லவிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இது இறைவனுக்குத் தெரியுமா? என்று கேட்கும் போது, தெரியாது என்று நீங்கள் சொன்னால் அப்படிப்பட்ட ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நமக்கு எவ்வாறு நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்றாகிறது.
நாளை நான் வெளிநாடு செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
எனவே அண்ட சராசரங்களின் எதிர்காலம் பற்றிய அறிவு, ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர் காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது? அவன் சுவனம் செல்வானா? நரகம்  செல்வானா? என்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்று நம்பினால் விதியையும் சேர்த்து நம்பியவர்களாகிறோம்.
மேலும் இவர்கள் உலக விஷயங்களைப் பொறுத்த வரை விவரமானவர்களாக இருக்கின்றனர். அல்லாஹ் நாடியது தான் கிடைக்கும் என்று தொழில் செய்யாமல் இருப்பதில்லை. நோய் வந்தால் அல்லாஹ் நாடியபடி நடக்கும் என்று வீட்டில் இருப்பதில்லை.
அல்லாஹ் எழுதியிருந்தால் சுவர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்று அமல் செய்யாமல் இருந்தது போன்று தொழில் செய்யாமல், வைத்தியரிடம் செல்லாமல் இருங்களேன். அல்லாஹ் எழுதி வைத்தது தானே கிடைக்கும் என்று இவர்களிடம் கேட்டுப் பாருங்கள். திரு திரு என்று முழிப்பார்கள்.
நமக்கு எது அளக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. எனவே தான் நாம் முயற்சி செய்கிறோம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கு இல்லை.
உலக நடப்பைப் போன்றே ஆகிரத்திலும் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.
எனவே நமது வேலை, எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவது தான் என்று செயல்பட்டால் சரியாகி விடும்.
உலக பாக்கியங்களைப் பொறுத்த வரை அல்லாஹ் எல்லாம் விதிப்படியே என்று கூறி விட்டான். இதில் மாற்றுக் கருத்து குர்ஆனில் இல்லை. ஆனால் மறுமையில் நமது நிலை என்ன என்பது பற்றிக் குர்ஆன் இரு வேறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளது. இதை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் (இவ்வுலகைப் பொறுத்த வரை) எல்லாம் விதிப்படியே நடக்கும் என்ற தெளிவான விஷயத்தில் இவர்கள் விதி இல்லாதது போல் செயல்படுவார்களாம். இரு விதமாகக் கூறப்பட்டுள்ள மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு, குர்ஆனின் ஒரு பகுதியை மறுத்து எல்லாம் விதிப்படியே என்று வணக்கம் புரிய மாட்டார்களாம். என்னே இவர்களின் ஞானம்?
ஒரு வாதத்திற்காக, ஒவ்வொருவரின் விதியும் அவரவருக்குத் தெரியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் இறக்கப் போகும் ஒரு மனிதனுக்குத் தனது விதி தெரியும் என்றால் என்ன நடக்கும்? நாளை விபத்தொன்றில் சிக்கப் போகும் ஒருவனது விதி அவனுக்குத் தெரியும் என்றால் அவனது நிலையைச் சிந்தித்துப் பாருங்கள். விதி தெரிந்த எந்தவொரு மனிதனாலும் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் சீராக இயங்க வேண்டும் என்பதற்காகக் கூட விதியை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)
இஸ்லாமிய வரலாற்றில் விதியில் சர்ச்சை செய்து இரண்டு சாரார் வழிகெட்டனர்.
1.             கத்ரியாக்கள்
2.             ஜபரிய்யாக்கள் 
இந்தக் கூட்டங்கள் வழிகெட்டுச் செல்ல அடிப்படைக் காரணமே விதியில் சர்ச்சை செய்தது தான்.
அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுள்ள நாம் உலகின் அனைத்து அம்சங்களும் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவதன் மூலமே நமது ஈமான் பூர்த்தியடையும்.
முஸ்லிம்களாகிய நாம் விதியைப் பொருந்திக் கொண்டு அதில் சர்ச்சை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோமாக!
இறுதித்தொடரை நாளை எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்...

Friday, February 18

விதி ஒரு வரையாவிலக்கணம்



(விதி ஒரு வரையாவிலக்கணம் எனும் பெயரில் ஏகத்துவத்தில் வெளியான ஒரு தொடர் ஆய்வுக்கட்டுரையை தேவை கருதி வெளியிடுகிறோம்)


இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகி விட முடியாது; அதில் ஆழமான நம்பிக்கையையும் வைக்க வேண்டும்.
அல்லாஹ்
மலக்குமார்கள்
நபிமார்கள்
வேதங்கள்
இறுதி நாள்
விதி
ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவது தான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றை நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும்.
எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ அதில் ஓரம்சம், மீதமுள்ள 5 அம்சங்களையும் பொய் என்று பறை சாற்றுவது போன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும். அது தான் விதி பற்றிய நம்பிக்கை.
எல்லாம் விதிப்படியே நடக்கிறது, அல்லாஹ் எழுதி வைத்த பிரகாரம் தான் இறுதித் தீர்ப்பு உள்ளது நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று  நம்பினால்...
அல்லாஹ் ஏன் எம்மைப் படைக்க வேண்டும்? நாம் ஏன் அவனை வணங்க வேண்டும்? பிரார்த்தனை என்பதற்குக் கூட வேலையே இருக்காது. என்ன தான் செய்தாலும் சுவர்க்கம், நரகம் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றால் அல்லாஹ் நீதியாளன் கிடையாது என்ற நிலை ஏற்படும். (நஊதுபில்லாஹ்). நீதியில் எள்ளளவு கூட தவறுபவன் கடவுளாக இருக்க முடியாது. எனவே விதி பற்றிய நம்பிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை ஆட்டம் காணும்.
மனிதன் செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்ய, நன்மையின் பக்கம் தூண்ட என பல்வேறு வேலைகளின் நிமித்தம் மலக்குகள் இருப்பதும் கேள்விக்குரியதாகி விடும்.
எல்லாம் விதிப்படி என்றால் அத்தனை நபிமார்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களும் அதன் போதனைகளும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை.
தீர்ப்பு நாள் விசாரணை என்பதெல்லாம் ஒரு நாடகம் என்றாகி தீர்ப்பு நாளும் பொய்யாகி விடும்.
எனவே விதியை எவ்வாறு நம்புவது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக விளங்கி வைத்திருக்க வேண்டும். இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்களுக்கும், கேள்வி கேட்டு பதிலளிப்பவரை மடக்கி, தான் ஓர் அறிவாளி என காட்டிக் கொள்பவர்களுக்கும் வணக்கம் புரிய முடியாத சோம்பேறிகளுக்கும் விதி என்பது பெரிய பாக்கியம் தான்.
இதன் காரணமாகவும் விதி பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றிருப்பது அவசியம்.
விதியை அல்குர்ஆன் இரண்டு விதமாகப் பிரித்து அணுகுகின்றது.
1.             இவ்வுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
2.             மறுவுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
இவ்வுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்
இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் அனைத்துப் பாக்கியங்களும் அல்லாஹ் ஏற்கெனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே ஆகும் என குர்ஆனை ஆராயும் போது தெரிகின்றது.
அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (2:212)
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். (13:26) 
(மேலும் பார்க்க: 3:27, 3:37, 9:28, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19)
இவ்வசனங்கள் இவ்வுலகில் நாம் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று கூறுகின்றன.
தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். (2:247)
"அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (7:128)
இங்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவது அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று விளங்குகிறது. மேலும் நமக்கு மத்தியில் நிலவும் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள், மனிதனுக்குக் கிடைக்கும். கண்ணியம், இழிவு உட்பட அனைத்து இன்ப துன்பங்களும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கும். இதில் மனித முயற்சியால் எதையும் அடைந்து விட முடியாது. (பார்க்க: அல்குர்ஆன் 2:253, 4:90, 3:26, 5:48, 11:118, 16:93, 42:8)
இது போன்ற  உலகின் அனைத்துக் காரியங்களும் விதிப்படியே நடக்கும் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக உள்ளன.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கட-லும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (6:59)
வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை (10:61)
மேலே நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களிலும் இவ்வுலகத்தில் கிடைக்கும் பாக்கியங்கள் அனைத்தும் விதியின் அடிப்படையில் வந்து சேருபவையே என்று கூறப்படுகின்றது. மனிதன் முயற்சி செய்தால் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அல்லாஹ் எங்குமே குறிப்பிடவில்லை.
மேலும் இது ஈமானுக்குப் பங்கம் விளைவிக்குமளவு சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றும் அல்ல! இவ்வுலக சுக போகங்கள் என்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை அற்பமானதே!
மறுவுலக பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுதல்
மறுமை பாக்கியங்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில்  குறிப்பிடும் போது இரண்டு வேறுபட்ட விதமாகக் குறிப்பிடுகிறான்.
அதில் முதல் வகை, சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ மனிதன் அடைவதென்பது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது. தானாக ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைய முடியாது. மனிதனுக்கு நல்வழி காட்டுவதும் வழிகெடுப்பதும் அல்லாஹ்வின் பாற்பட்டது என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள்  கூறுகின்றது.
உதாரணமாக
அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (2:272)
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு (3:176)
எனவே அல்லாஹ் நாடுவதால் தான் ஒருவன் நரகத்தை அடைகிறான் என்பதை இவ்வசனங்களும் கீழே குறிப்பிடும் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப் படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (5:41)
"நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழி கேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. (11:34)
மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 4:94, 4:88, 4:143, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57,  22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31
இங்கு நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே என்பதை அல்லாஹ்  ஆணித்தரமாகக் கூறுகிறான்
விதி சம்பந்தமாக ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கும் மூஸா (அலை)  அவர்களுக்கும் நடைபெற்ற ஓர் உரையாடலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறார்கள்
(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்கüடம் மூசா (அலை) அவர்கள் "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) 
எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்தி-ருந்து எங்களை வெüயேற்றி விட்டீர்கள்'' என்று சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "மூசாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள்,  அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீர்களா?'' என்று கேட்டார்கள். "(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்; தோற்கடித்து விட்டார்கள்'' என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6614
ஆனால் இதைவிட அதிகமான வசனங்களில் இதற்கு மாற்றமாக மனிதன் மறுமையில் சந்திக்கப் போகும் விளைவுகளுக்கு அல்லாஹ் பொறுப்பாளியல்ல. மனிதனே அதைத் தீர்மானிக்கிறான் என்று அல்லாஹ் குறிப்பிடுபிறான்.
உதாரணமாக
"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (10:108)
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை. (17:15)
மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர் வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல. (39:41)
மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள் ஐயத்திற்கிடமின்றி சொல்கின்றன.
இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார். (73:19)
எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (3:25)
மேலும் பார்க்க: அல்குர்ஆன் 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129,  7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101,  13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24
மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி என்பதை இவ்வசனங்கள் பறைசாற்றுகின்றன.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். (7:20)
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (17:64)
அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான். (25:29)
மேலும் பார்க்க: அல் குர்ஆன் 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 16:63, 17:27, 19:58, 20:120, 27:24
மேலே உள்ள வசனங்கள், வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை என்று கூறுகின்றன.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று ஒரு வகையான வசனங்கள் கூறுகின்றன.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் தானாக தேடிக் கொள்வது அல்லது ஷைத்தான் வழிகெடுப்பது தான் காரணமே தவிர அதற்கு இறைவன் பொறுப்பாளியல்ல என்று வேறு சில வகையான வசனங்கள் சொல்கின்றன.
இங்கு தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. இரண்டு வகையான வசனங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருப்பது உண்மை தான்.
இப்போது நாம் என்ன செய்வது? முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதம் தான் என்பதற்கு பெரிய சான்று அது முரண்பாடுகள் அற்றதாக இருப்பது தான் என அல்லாஹ்வே கூறுகிறான்
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)
குர்ஆனைப் பற்றி குர்ஆனே இவ்வாறு சான்று பகரும் போது, மேலே எடுத்துக் காட்டிய விதியைப் பற்றிக் கூறக் கூடிய அத்தனை வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருப்பது ஏன்?
மிகுதி நாளை எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்...

Sunday, February 13

கடமை மறந்த பெற்றோர் 
A.Mohamed Ihsas

இஸ்லாம் ஓர் அழகிய வாழ்க்கைத்திட்டம். அது ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியது. அதை முழுமையாக பின்பற்றும் போது இவ்வுலகிழும் மறுமையிலும் ஈடேற்றம் பெற முடியும். இஸ்லாத்தில் ஒவ்வொறுவரது கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொருவரும் சரிவர நிறைவேற்றியே ஆக வேண்டும். இல்லையேல் மறுமையில் குற்றவாளியாக நேரிடும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 3733
                                                                        
ஒரு ஆட்சித்தலைவன் அவனது பொறுப்பு குறித்தும், ஒரு குடும்பத்தலைவன் அவனது பொறுப்பு குறித்தும் இதுபோல் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார்கள். தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மறுமை நாளின் கேள்விக்கு பயந்து ஒருவர் சரியாக நிறைவேற்றினால் அது அவருக்கு வெற்றியளிக்கும். இல்லையேல், கைசேதம்தான்.

தாயின் கடமை

இந்தவகையில் ஒரு தாய் தமது பிள்ளைகள் குறித்து  மறுமை நாளில் விசாரிக்கப்படுவாள். ஏனெனில் ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதில் தந்தையின் பங்களிப்பை பார்க்கிலும் தாயின் பங்களிப்பே அதிகம் உள்ளது. பெரும்பாலும் தந்தை என்பவர் பொருளாதார தேவைகள் கருதி உழைக்க சென்றுவிடுவார். இதனால் வீட்டில் தாயின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் வளர வேண்டியிருக்கின்றன. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விடயத்தில் பெண்களை முன்னுரிமைப்படுத்துகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்திற்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 3733

ஒருவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ வளர்த்தெடுப்பதில் தாயின் பங்கே அதிகம் என்பது இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஆனால், இன்று அவர்கள் தமது கடமையை சரி வர நிறைவேற்றுகின்றனரா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கும்!

நஞ்சாகும் பிஞ்சு நெஞ்சங்கள்

தற்காலத்தில் பெண்களை ஆட்டிப்படைக்கும் ஒன்றாக சீரியல் (நாடகம்) திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான தாய்மார்கள் அடிமையாகிவிட்டனர் என்பது வேதனைக்குரிய விடயம். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் மாத்திரமின்றி வேலை செய்யும் நேரத்தில் கூட அதைப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருப்பதை ஏனோ அவர்கள் சிந்திக்க மறந்து விட்டனர்.

ஆம்! இவர்கள் மட்டும் இதைப்பார்ப்பது கிடையாது. தனது சிறு பிள்ளைகள் கூட சேர்ந்து பார்க்கிறது. இதனால் அதில் கூறப்படும் நச்சுக்கருத்துகள் பிஞ்சு நெஞ்சத்தில் நஞ்சாய்ப்படிந்து விடுகிறது. இறுதியில் அதன் படியே செயற்படத்துவங்கும் போது தலையில் கைவைக்கின்றனர். இன்று எமது சமுதாயத்தில் நடக்கும் கேடுகெட்ட செயல்கள் அனைத்தும் இதன் பின் விளைவுதான் என்பதை ஒவ்வொறு தாயும் உணர வேண்டும்! இதை விட்டும் விலக வேண்டும்! இல்லாவிடில் எமது மறுமை வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

மிரட்டும் பிள்ளைகள்; மிரளும் பெற்றோர்கள்

வீட்டில் தாய் கணவனுக்குத்தெரியாமல் ஒரு தவறு செய்கிறாள்; இதை பிள்ளை பார்த்துவிடுகின்றது. இதை தந்தையிடம் சொல்லக்கூடாது என்று பிள்ளைக்கு கூறுகிறாள். அதற்காக பிள்ளைக்கு அது கேட்கும் அனைத்தையும் வாங்கிக்கொடுத்து வாயடைக்கிறாள். பிரிதொரு காலத்தில் அக்குழந்தை தவறை செய்து விடும்போது தடுக்க முற்பட்டாலோ அல்லது தண்டிக்க முற்பட்டாலோ அக்குழந்தை நீ செய்த தவறை சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறது; இவளும் மிரண்டு விடுகிறாள். இறுதியில் அவன் ஒரு மாபாதகச்செயலை செய்தால் கூட வாய் திரக்க முடியாத நிலையில் ஊமையாகிறாள். இதற்குக்காரணம் அவள்தான் என்பதை சிந்திக்க மறந்து விடுகிறாள். கணவனிடம் தவறை மறைத்தாலும் படைத்த இறைவனிடம் மறைக்க முடியாது என்பதை அவள் உணர்ந்திருந்தால் இப்படியொரு நிலை ஏற்படாது.

அஞ்சத்தகுதியானவன் அல்லாஹ்வே!

சிறுவயது முதலே தன் குழந்தைக்கு அல்லாஹ்வைப்பற்றியும் அவனது வல்லமை, கருணை, தண்டனை பற்றி சொல்வதோடு என்னிலையிலும் அவன் எம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான். அவ்னுக்குத்தெரியாமல் எந்தவொன்றையும் எம்மால் செய்ய முடியாது என்பதை உணவோடு ஊட்டி ஊட்டி வளர்த்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுவான். அவன் யாரும் இல்லாவிட்டாலும் கூட தவறை செய்ய பயப்படுவான். கடமையான தொழுகைகளையும் நிறைவேற்றுவான்.
ஆனால் இன்று தனக்கும், தந்தைக்கும் ஏனைய அதிகாரமுள்ள்வர்களைப்பற்றிக்கூறி அவனை பயப்பட வைக்கின்றனர். இதனால் அவனும் இவர்களுக்கு பயந்து ஒழுங்காக நடக்கிறான். ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியதும் பெற்றோரிடமுள்ள பயம் விலகிவிடுகிறது. தான் நினைத்ததைச்செய்து வருகிறான் அவனை தண்டிக்கக்கூட முடியாத அளவுக்கு நிலமை கைமீறிப்போய் விடுகிறது. நீ எங்களை மிரட்டி விடலாம், அடக்கி விடலாம். ஆனால் அல்லாஹ்வை உன்னால் எதுவும் செய்ய முடியாது. அவன் உன்னை தண்டிப்பதை உன்னால் தடுக்கவும் முடியாது; அதிலிருந்து தப்பிக்கவும் இயலாது. என்று கூறி வளர்த்தால் இந் நிலை ஏற்பட்டிருக்குமா? அஞ்சத்தகுந்தவன் அல்லாஹவே என்பதை நாம் அவனுக்கு சரியான முறையில் போதித்த்ருந்தால் இவ்வாறான நிலை ஏற்படாது.

சமூகத்தில் நடந்துவரும் பல தீமைகளுக்கும், சீரழிவுகளுக்கு பெற்றோரின் குறிப்பாக தாயின் வளர்ப்புமுறை சரினதாக, இஸ்லாத்துக்கு ஏற்றதாக இல்லமையே என்பதை உணர்ந்து எமது பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துபவர்களாகவும், அவர்களை ஒழுங்கான முறையில் வளர்த்து எமது கடமைகளை நிறைவேற்றுபவர்களாகவும் வாழ்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!