Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 5

நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

செங்கொடியின் கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-18


நூஹின் கப்பல் நிறைய புரானப்புழுகுகள் எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.  

இத்தொடரில் செங்கொடி நோஹ் நபியின் கப்பல் தொடர்பான விடயங்களை குறிப்பிட்டு அதை மறுத்திருக்கிறார். அதற்கான நமது விளக்கத்தை பார்க்க முன் இவரது நோஹ் நபியின் கப்பல் தொடர்பான ஆய்வின் முடிவை வெளியிட முன் அவரது ஆய்வின் (?) ஆரம்பத்தில் ஒரு சில விடயங்களை குறிப்பிடுகிறார். அது இந்த இடத்திற்கு பொருத்தமற்றது என்று நாம் கருதுவதால் அதற்கு பதிலளிப்பதை விடுத்து முக்கியமான அதாவது நோஹ் நபியின் கப்பல் தொடர்பான விடயங்களுக்கு செல்லலாம்.

இந்த நோஹ் 950௦ ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருந்ததாக குரான் குறிப்பிடுகிறது. இவ்வளவு காலம் வாழும் அளவுக்கு மனிதன் இருந்தானா? மனிதனின் செல் அமைப்புகள் எலும்புகளின் ஆர்கானிக் பொருட்கள் இவ்வளவு காலம் தாங்கி நிற்கும் அளவுக்கு திறனுடன் மனிதனிடம் இருந்ததா? மனிதனின் வாழ்நாள் இப்போது இருப்பது தான் அதிகம். தோராயமாக ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழும் அளவிற்கு வலுவுடன் இருந்தார்கள் என்பதை எந்த அடிப்படையில் புரிந்து கொள்வது புரானக்குப்பைகள் என்பதல்லாது.

கடவுள் இருக்கிறான் என்றால் இதை நம்புவதற்கு பெரிய தயக்கம் தேவையில்லை! இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்.

அராரத் மலையில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது நோஹ் நபியின் கப்பலாக இருக்கும் என்று தகவல் வெளியிட்டனர். அந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய டேவிட் பசோல்ட் என்பவர் பின்னாளில் அது நோஹ் நபியின் கப்பல் அல்ல என்று தன் முடிவை வாபஸ் வாங்கியதாக அறிவிக்கிறார். இதை செங்கொடி மேற்கோள் காட்டி இதை உடைக்க முயன்றுள்ளார். இவற்றுக்கான பதிலை அறிந்து கொள்ள முன் முக்கியமான விடயம் ஒன்றை பதிவு செய்ய வேண்டும். இந்த கப்பல் தொடர்பான சேதி பைபிளிளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த கப்பலுக்கும் மற்றும் பெய்த மழை, வெள்ளம் போன்றவற்றிற்கான குர்ஆனில்  இல்லாத சில தடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த அடிப்படையை வைத்துக்கொண்டே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. டேவிட் பசோல்ட் என்பவர் பைபிளில் கூறப்படும் இந்த தகவலை நன்கறிந்த அதில் ஈடுபாடு மிக்கவர். இவரது ஆய்வின் பின்னர் இவர் அது நோஹ் நபியின் கப்பல் இல்லை என்று வாபஸ் வாங்குவதற்கும் அதுதான் காரணமாய் இருந்தது.எனவேதான் அதை மறுத்தார். இவர் இறுதி வரை இந்த நிலையில் இல்லை. இவரது கடைசி காலத்தில் அதாவது 1998ம் ஆண்டு காலத்தில் இவர் அது நோஹ் நபியின் கப்பல்தான் எனும் நிலைக்கு மீண்டும் வந்தார்.

அராரத் மலையில் உள்ளது கப்பல்தான் என்பதற்கு ஆதாரமாக அமைவது அங்கு  கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள்தான். அங்கு பலகைகளும் அதில் ஆணிகள் அடிக்கப்பட்ட தடயங்களும் காணப்படுகின்றன. மேலும் அது கப்பல் வடிவிலும் உள்ளது. செங்கொடி இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார்.

அராரத் மலை ஒரு எரிமலையாகும். கடைசியாக அது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக வெடித்திருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி வெடித்து வெளிவந்த லாவா குழம்பு ஒரு கப்பல் வடிவில் படிந்திருக்கிறது என்பதை தவிர அதில் ஒன்றுமில்லை.

லாவா குழம்புகள் கப்பல் வடிவில் படிந்திருக்கக்கூடும் என்பதே இவரின் முடிவு. குழம்புகள் பலகைகளாக மாறிய வினோதம் என்னவோ? இது இவரின் ஊகம்தான். இது அங்கு நடந்த ஆய்வின் முடிவு அல்ல என்பதை இவரது கூற்றிலேயே வெளிப்படுகிறது.

அடுத்து பைபிளின் குறிப்பிற்கு ஒத்ததாக அதன் நீள  அகலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கொரு சான்றாக குறிப்பிடுகின்றனர். அதன் அளவுப்படி பார்த்தால் ஒரு கப்பல் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்காது என்று கூறுகிறார்.  நாம் பைபிளில் கூறுவதை ஒரு போதும் நம்ப போவதில்லை. அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டாலும் அதில் பல கையாடல்கள் நடந்திருக்கின்றன. எனவே அதில் எது உண்மை என்று அறிந்து கொள்ள இயலாது.

அடுத்து நன்கூரத்தைப்பற்றியும் சில தகவல்களை குறிப்பிடுகிறார். அதை ஒரு சான்றாக முஸ்லிம்கள் கூறுவதில்லை. அந்த நிகழ்வுக்கு அத்தாட்சி கப்பல் மட்டுமே! மேலும் அதைப்பார்த்தாலே நங்கூரம் என்று கூற மாட்டார்கள். அதில் சிலுவை அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இடத்தில் அது நங்கூரம் இல்லை எனும் செங்கொடியின் கூற்றிற்கு முற்றிலும் உடன்படுகிறோம்.

இப்படி பூலோக ரீதியிலான ஒரு பிரளயம் வந்ததர்கான் சான்று என்ன என்ற கேள்வியுடன் முடிக்கிறார் செங்கொடி. இதற்கு சான்றே அந்த கப்பல்தான். ஏன்? இவ்வளவு பெரிய ஒரு மலையில் ஒரு கப்பல் எப்படி வரும்? அதைத்தூக்கிக்கொண்டு வைக்கும் அளவுக்கு ஏதாவது உபகரணம் இன்றைய காலங்களில் கூட உண்டா? எதுவும் இல்லை! ஆனால்  அங்கு கப்பலின் சிதைவுகள் உள்ளன. அப்படியாயின் அந்த அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான் வெள்ளம் வந்திருந்தால்தான் சாத்தியம். எனவே அந்த கப்பல் அமைந்திருக்கும் உயரமே வெள்ளம் வந்ததற்கான ஆதாரம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

3 comments:

Unknown said...

20:114. இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக

செந்தமிழ்ச்செல்வன் said...

//கடவுள் இருக்கிறான் என்றால் இதை நம்புவதற்கு பெரிய தயக்கம் தேவையில்லை! இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்//இதற்கு பதில் என்ன கூறுவீர்கள்...குரான் கூறும் அறிவியல்(!!!!!)(ஒரு ஒப்புக்காக கொள்வோம்) அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.அதனால் கடவுளின் இருப்பு உண்மை.எனவே அறிவியலை மறுக்கும் இது போன்ற மடத்தனங்களையும் நம்ப வேண்டும் என்று கூறுகிறீர்களா...ஒன்று மறுக்க வேண்டும் இல்லை ஒத்துப்போக வேண்டும்.வேண்டிய இடங்களில் அறிவியல் உங்களுக்கு தேவை,முரண் படும் இடங்களில் அறிவியலையே கேலி பேசி மறுப்பீர்கள். எனக்கு ஒரு கேள்வி அதெப்படி கடவுள் பாதி வசனங்களை அறிவியலுக்கு ஒத்துப்போகும்படியும் மீதி வசனங்கள் அறிவியலுக்கு முரண்படும் படியும் இறக்கியுள்ளான்.இப்படி ஒன்னும் இல்லாத வசனங்களில் ஏன் அறிவியலை ஏற்றி பாமர இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறீர்கள்.ததஜ வால் கல்லா கட்ட முடியாதென்று பயப்படுகிறீர்களா? எனக்கு தெரிந்து இஸ்லாமிய பற்று கொண்ட எல்லா இளைஞர்களும் இஸ்லாமிய அறிவியலை நீங்கள் (ததஜ) கூறியது போன்றே கூறிக்கொண்டே திரிகிறார்கள்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்கள் கேள்வி ஒதூமொத்ஹமாக உளறலின் வெளிப்பாடு போல தோன்றுகிறது. குர்ஆன் பாதி வசனனங்கள் அறிவியலுக்கு ஒத்துப்போவதாகவும் மீதி வசனங்கள் மறுப்பதாகவும் சொல்கிறீர்கள். அது என்ன என்னவென்று பட்டியல் போட முடியுமா? உங்களால் முடிந்தால் காட்டுங்கள். மேலும் எமது வாதங்களுக்கு பதில் சொல்லாமல் சொன்னதையே திருப்பித்திருப்பு சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. அஎதொ அனைத்து முஸ்லிம்களும் இதேபோல்தான் அறிவியளைப்பேசுகிரார்கள் என்று நக்கல் பாணியில் எழுதியுள்ளீர்கள். அனைவரும் சேர்ந்து ஒன்று போல் சொன்னால் தவறாகுமா? அப்படியானால் அனைத்து நான்த்திகர்களும் இதே வாதத்தைத்தான் வைக்கிராகள் என்பதால் உங்கள் வாதம் தவறு என்று நாம் ஒதுக்கிவிட முடியுமா? சற்று சிந்தித்து அறிவுபூர்வமாக எழுதுங்கள். ததஜ ஏதோ கல்லா கட்டுவதாக சொல்கிறீர்கள் எவ்வாறு என்று உங்களுக்கு முயந்தால் நிரூபியுங்கள். மேலும் எனது புதிய பிளாக் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்துக்கொண்டிருக்கிறது. www.mohamedihsas.blogspot.com

Post a Comment