Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Showing posts with label செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு. Show all posts
Showing posts with label செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு. Show all posts

Friday, May 6

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு பகுதி-06


ஒரு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு மறுப்புத்தொடர்.... இதில் சின்ன வித்தியாசம். அது என்ன? நாம் யாரை விமர்சனம் செய்வதாக இருந்தாலும் அதை நாம் விமர்சனம் செய்பவருக்கு அறிவிப்பதுதான் முதல் வேலை. நியாயமான செயல்! இதை நான் தவறாது கடைபிடித்துவருகிறேன். ஆனால் செங்கொடி, இத்தொடரை எனது கவனத்திற்கு கொண்டுவர மறந்துவிட்டார். வேறொரு சகோதரர் சுட்டிக்காட்டித்தான் இதை அறிந்துகொண்டேன். சரி, இனி தலைப்புக்குள் நுழையலாம்.

முதன்முதலாகவே செங்கொடி ஒரு விடயத்தை ஒப்புக்கொண்டார். அதாவது, ஓரிடத்தில் முஹம்மது நபி மரணித்து 15 ஆண்டுகளில் குர்ஆன் தொகுக்கப்பட்டு விட்டதென்றும் பிறிதோர் இடத்தில் 25 ஆண்டுகளுக்குப்பிந்தான் குர்ஆன் தொகுக்கப்பட்டது என்றும் முரண்பட்டு பேசியதை சுட்டிக்காட்டினோம். அதை செங்கொடி ஏற்றுக்கொண்டு தனது கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும் கூறி ஒப்புக்கொண்டார். அதை நாம் பாராட்டுகிறோம். ஆனாலும் ஏனையவற்றை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்று  புரியவில்லை! (அதை இதே தொடரில் விளக்கியுள்ளேன்)

பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின், முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும்.

இவர் சிந்தித்துதான் எழுதுகிறாரா? இக்கேள்விக்கு நாம் ஏற்கனவே தெளிவாக  பதிலளித்துவிட்டோம். அதைப்பார்த்தும் பார்க்காதவர் போல் மீண்டும் கேள்வியை கேட்கிறார். அந்த பதிலை ஒட்டுமொத்தமாக எமது நம்பிக்கை என்று ஒதுக்கித்தள்ளியும் விடுகிறார். எது தவறு என்பதைக்கூட விளக்கவில்லை! தவறு என்று நிரூபிக்க முடியுமாக இருந்தால் பதிலளித்திருக்க முடியும். நச் என்று எழுதிய பின்னர் எப்படி பதிலளிப்பது? நாம் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மழுப்பிய மழுப்பல்தான் இது!  முதலில் இந்த கேள்வியே எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை சிந்திக்க மறுத்துவிட்டார். அதை எமது முதல் மறுப்பில் சுட்டிக்காட்டத்தேவையில்லை என்று நினைத்தோம். ஆனால் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளார். முஹம்மது நபி முன்னின்று தொகுத்த குர்ஆன் என்று கூறுவதே மிகப்பெரும் அபத்தம்! ஏன்? முஹம்மது நபிக்கு எழுதவோ, எழுதியதை படிக்கவோ தெரியாது! பின்னர் அவரே முன்னின்று தொகுத்ததாக எப்படி கூறுவது? இதைக்கூடவா சிந்திக்க தவறுவது? முஹம்மது நபி குர்ஆன் என்று கூறியவை எல்லோர் மனதிலும் நன்றாக பதிந்திருந்தது! அதை வேறு ஓர் வடிவமாக, எழுத்துவடிவமாக மாற்றும் வேலைதான் எழுத்து வடிவில் எழுதப்பட்டது! இதை செங்கொடிக்கு புரிய வைக்க ஓர் எளிய உதாரணத்தையும் எடுத்துக்காட்டியிருந்தோம். ஆனால், எங்களுக்கு உதாரணம் தேவையில்லை நாங்கள் சாதாரணமாகவே புரிந்து கொள்வோம் என்றுவிட்டு இவர் ஓர் உதாரணத்தை கூருகிறார்.

ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார். அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது. நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது. ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள், அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார். மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார். இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா? வேறு ஆதாரங்கள் வேண்டாமா?

உதாரணம் கூறுவதென்றால் பொருத்தமாக இருக்க வேணும்! நாம் எதை தவறு என்கிறோமோ அதையே உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். இதை பிரிதொரு இடத்திலும் விளக்கியுள்ளார். இதில் அவர் சொல்ல வருவது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் அந்த ஹதீஸ் பலவீனம்!ஏற்கமுடியாதது! நாம் ஏற்காத ஒன்றை எமக்கெதிராக காட்டுவது முறையல்ல என்று குறிப்பிட்டோம். அதற்கெதிராக கொதித்தெழுந்தவர்,

ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார். முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது? எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ்? 

முஸ்லிமில் இடம்பெற்றுவிட்டால் அது சரியானதுதான் என்று இவருக்கு யார் சொன்னது? ஒருவர் பலவீனம் என்று தீர்ப்பளித்தவைதான்  பலவீனம் என்று எந்த விதியில் உள்ளது? இவை இவருக்கு யார் சொன்னது? ஒரு ஹதீஸ் சரியானதா? அல்லது தவறானதா? என்பதை அறிய இரண்டு அளவுகோளகள் உள்ளன. ஒன்று அந்த ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கு நேரடியாக மோதுவதாக இருந்தால் அது பலவீனம். இரண்டாவது அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் குறை இருந்தால் அதுவும் பலவீனம். செங்கொடி முஸ்லிமில் வருவதாக காட்டும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்பதால் ஏற்றுக்கொள்ளக்கூடாது! அது ஆதாரமற்றது! இதுபற்றி அடுத்த தொடரில் விளக்குவேன் என்று குறிப்பிட்டது இதைத்தான். ஆனால் செங்கொடியோ இந்த ஹதீஸைப்பற்றித்தான் விளக்குவேன் என்று புரிந்துகொண்டார் போலும்! அதுதான், விளக்குவேன் என்று சொல்லியும் விளக்கவில்லையே என்று கேட்கிறார். இந்த ஹதீஸ் தொடர்பான விளக்கம் ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? எனும் நூலில் அழகாக, விரிவாக விளக்கப்பட்டுள்ளது! இதுமட்டுமல்லாமல், எவை எவையெல்லாம் குர்ஆனுக்கு முரண்படுகிறதோ அவற்றின் ஒரு பகுதியும் அந்த நூலில் இடம்பெற்றுள்ளது அதன் லிங்கை கொடுத்த்திருந்தும் அவர் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் இத்தொடரில் மீண்டும் குறிப்பிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்!

புஹாரியிலும், முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல. 

மேற்குறிப்பிட்ட நூலில் ஒரு பகுதி ஹதீஸ்கள் உள்ளன. பார்த்துக்கொள்ளவும்! பிரச்சினை எழுந்ததும் சரியானதைக்கூட தவறு என்று ஒதுக்கிவிட்டூச்சென்றால் எங்கள் மக்களே எங்களை கொன்றுவிடுவர்! நாம் இதை எப்போதோ கூறி வருகிறோம்! முஸ்லிம்களுடன் குறிப்பாக தமிழக முஸ்லிம்களுடன் தொடர்பில்லாமல் வந்துவிட்டு இங்கு எமக்கு நேர்மை பற்றி க்ளாஸ் எடுக்கிரார்.

செங்கொடி இதில் மற்றுமோர் அறியாமையையும் கட்டவிழ்த்துவிடுகிறார். அல்லாஹ் குர்ஆனில் நாமே இதைப்பாதுகாப்போம் என்று கூறினாலும் மனித முயற்சியினால்தான் இது பாதுகாக்கப்பட்டது எனும் தோரணையில் சிலவற்றை குறிப்பிடுகீரார். இவர் அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் அல்லாஹ்வே நேரில் வந்து அதை ஏதாவது செய்து பாதுகாப்பான் என்று நினைத்துக்கொண்டு கேட்கிறார். அல்லாஹ் பாதுகாப்பான் என்றால் எப்படி பாதுகாப்பான் என்று சொல்லியுமிருக்கிறான். இந்த குர்ஆன் கல்வியாளர்களின் உள்ளத்தில் பாதுகப்படும் என்று இறைவன் கூறுகிறான். இதுதான் அந்த பாதுகாப்பு ஏற்பாடு! அவன் கூறியபடி மக்களின் உள்ளத்தில் எந்த தவறுமின்றி பாதுகாக்கப்பட்டது! ஆனால் எழுத்தில் பாதுகாக்கப்பட்டது மனித சிந்தனைதான்! அதனால்தான் சில எழுத்துப்பிழகளும் காணப்பட்டன. அதைக்கூட மனன சக்தியால் திருத்திவிட்டனர்! இப்போது இறைவன் எப்படிப்பாதுகாத்தான் என்று புரிகிறதா? அல்லாஹ் செல்வத்தை வழங்குவான் என்றால் அவனே நேரடியாக வந்துதருவான் என்று புரிந்துகொள்வார் போலும்.

அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன்? வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை.

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே பதிலளித்துவிட்டோம்! மீண்டும் மீண்டும் பழைய பல்லவிய பாடிக்கொண்டிருக்கிறார்! அதற்கு நாம் தயாரில்லை! அதை மீண்டும் ஒருதடவை நன்றாக வாசித்துப்பார்த்தால் மூளையுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள்.

அடுத்து ஒரு விடயத்தை குறிப்பிடுகிறார். இவரது ஐந்தாவது தொடரில் ஒரு குர்ஆன் வசனம் முகம்மது நபிக்கு பிறகு வந்ததாகத்தான் இருக்கும் என்று கண்டுபிடித்து (?) கூறினார்! அது எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் என்பதை எமது மறுப்பில் எழுதியும் கூட முக்கியமானதை தவிர்த்துவிட்டு அடுத்த ஸ்டெப்புக்கு பாய்ந்து ஓடிவிட்டார்! ஏனென்றால் அதற்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு உளறிக்கொட்டியிருந்தார்! இவர் சரியான ஆளாக இருந்திருந்தால் அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்திருக்க் வேண்டும். அதை விட்டுவிட்டு எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால், நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது. நாம் கேட்பது வேறு இவர் சொல்வது வேறு என்று பல்டி அடிக்கிரார்! சரி, இதன்பிறகாவது வாய்திறந்தாரா என்றால் அதை முகர்ந்து கூட பார்க்கவில்லை! அந்தளவுக்கு உளறிய விடயம் அது! அது என்ன? குர்ஆனில் அவர் குறிப்பிட்ட அந்த வசனத்த்ல் எழுதுகோல் என்று வருவதற்கு எழுதும் தாள் என்று அர்த்தம் செய்து தனது அதிமேதாவித்தனத்தை காட்டியிருந்தார்! அதற்கு பதிலளிப்பார் என்றுபார்த்தால் அதை விட்டுவிட்டு அதை கண்டே கொள்லாம அது எழுதுகோல் எனும் அர்த்தத்திற்கு தாவி மை விடயத்திற்கு பல்டி அடிக்கிரார்! சரி, அதிலாவது ஒழுங்காக இருக்கிறாரா என்று பார்த்தால் அதிலும் அதே உளறல்தான்.

முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான். ஆம், முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு. மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம். வெளிப்படையாக கேட்டால், நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி?

ஆஹா! இந்தளவுக்கு இவருக்கு ஞானம் இருக்கிறது என்பதை என்ணி மிகுந்த ஆச்சர்யமாக இருக்கிறது! முஹம்மது நபியின் காலத்தில் மை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார் அது தவறு மை பயன்படுத்தியிருக்கிறார் என்றதும் அது மதீனாவில் பயன்படுத்தினார் என்று சமாளிக்கிறார். நபியவர்கள் வாழ்ந்த மதீனா வாழ்க்கையும் மக்கா வாழ்க்கையும் என்ன கற்கால்த்துக்கும் கம்பியூட்டர் காலத்துக்கும் இடையிலிருந்த வேறுபாடா? முகம்மது நபி மதீனாவில் கடிதம் எழுதும் தேவை இருந்ததால் மையைப்பயன்படுத்தினார். அதனால் மக்கவில் வாழ்ந்த போது மை பயன்பாட்டில் இல்லையென்றாகிவ்டுமா? தோல்களில் குர்ஆனை எழுதியதாக வருகிரது! தோல்களில் மை இல்லாமல் வேறு எதைப்பயன்படுத்தி எழுத முடியும்? அறிவுடந்தான் எழுதுகிராரா? மக்கீ மதனீ என்று வாதாட ஆரம்பிக்கிரார் அந்த அத்தியாயம் மக்கீ என்றிருப்பதால் அந்த வசனமும் மக்கீ என்றாகிவிடாது! மக்கீ மதனீ என்பது பல அத்தியாயங்களில் ஆதாரமில்லாமலும் தவறான அளவுகோளின் படியும் எழுதப்பட்டது! மக்கிக்கு என்ன ஆதாரம் மதனிக்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர் இப்போது இது மக்கீ மதனீ என்று வாதிட்கிறார்! இவரை அல்லாஹ் எந்த நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிட்டான்  என்று பாருங்கள்.

இவர் முரண்பட்டு பேசியவைகளையும் ஒரு கேள்வியாக கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கும் சமாளிப்புப்பதிகளை பார்த்தால் தலை சுற்றும் அளவிற்கு உள்ளது.

இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது? இதில் அபூபக்கர் காலத்திலா, உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை. மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும், வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால்; முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது.

முகம்மது நபி மரனித்ததன் பின் பல விதங்களில் குர்ஆன் நடமாடத்துவங்கியது என்பது முரண்! பச்சைப்பொய்! என்று எழுதியிருந்ததற்கு சமாளிக்கிரார்! ஆனால் இது சரியா? பொதுவாக கூறுவது பொருத்தமானது என்பதால் எழுதினாரா? நிச்சய்மாக இல்லை! 

முகம்மதின் மரணத்திற்குப்பின் அவரவர்கள் மனப்பாடம் செய்துவைத்திருந்ததற்கு ஏற்றார்ப்போல் இது தான் மெய்யான குரான் என்று பலவடிவங்களில் குரான் உலவத்தொடங்கியது. இதனால் ஆட்சிப்பொறுப்பேற்றிருந்த அபூபக்கர் தனக்கு அடுத்த நிலையிலிருந்த உமரின் ஆலோசனையுடன் குரானை தொகுக்கும் ஏற்பாடு தொடங்கப்பட்டது.  என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்! எனவே இவர் பொதுவானது என்று கதையளப்பது இவர் எனக்கு அளிக்கும் மறுப்பல்ல! இவர் இவருக்கே அளிக்கும் மறுப்பு! அதாவது முரண்!

அடுத்து இன்னொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்டியிருந்தோம்! அதையும்  சமாளித்திருக்கிறார்!

அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது. இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது. முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும், பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே. 

விலக்கப்படாவிட்டால் அது முகம்மது அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் மசூதியாகப் பாதுகாக்கப்படுகிரது என்பது சரியாகிவிடுமா? பிற்காலத்தில் உள்வாங்கப்படடது எப்படி அவரது பாதுகக்கப்பட்ட மசூதியாக முடியும்? வரலாறு தெரியாமல் உளறியுள்ளர் என்பதுதான் உண்மை! அதை  ஒத்துக்கொண்டால் கேவலம் என்றுதான் இப்படியெல்லாம் சமாளிக்கிறார்! இவர் தவறைதிருத்திக்கொள்பவரா? இதனால்தான் முன்னராகவே ஓரே ஒரு தவறி நான் திருத்திவிட்டதாக பிதற்றுகிறார்!
இதை நுணுகிப்பார்க்க தேவையில்லை என்பது ஏன் தெரியுமா? நுணுகிப்பார்த்தால் அந்தளவுக்கு குப்பை உள்ளது! வார்த்தைக்கு வார்த்தை பிடித்தால் மாட்டிக்கொன்டுவிடுவோம் என்று எண்ணியவர் இதயெல்லாமா  பார்ப்பது என்று கெஞ்சுகிறார்!

சரி, இதையெல்லாம் எதற்காக கூறினார் தெரியுமா? அதையும் அவரே சொல்கிறார்,

முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது, அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது, அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது. ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது. அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது? அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா?

இதற்கு எமது முதல் மறுப்பிலேயே அதன் ஆரம்பத்திலேயே பதில் உள்ளது! முஹம்மது நபி முன்னின்று தொகுத்ததுதான் அபூபக்கர் காலத்திலும் உஸ்மான் காலத்திலும் தொகுக்கப்பட்டது! இதில் எந்த கூடுதல் குறைவோ  இருக்கவில்லை! இதை திருப்பித்திருப்பிக்கேட்டு எனக்கு புரியும் திறன் குறைவு என்று தெளிவு படுத்துகிரார்.

இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார்.

நான் குறிப்பிட்ட வரிசை எது? இவர் குறிப்பிடும் வரிசை எது என்று புரியும் திறன் கூட இல்லை! வசன எண்கள்தான் இல்லை! வசன வரிசை சரியாக இருந்தது! அத்தியாய வரிசைதான் மாறுபட்டது! அதுவும் முகம்மது நபி காலத்திலிருந்து அபூபக்கர் காலத்தில் எழுதப்பட்த்ததில் அத்தியாய வரிசை இல்லை! ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறாக இருந்தது! இதை உதாரணத்துடன் தெளிவு படுத்தியும் புரியுமளவிற்கு சக்தியில்லாமல் இருக்கிறார்.

கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார். கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. மாறாக அது சரியானது என அவர் நினைத்தால், கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும், பதிலளிக்க நாம் தயார்.

இந்த தொடரில் இவர் அடிக்கும் கூத்துகளே சொல்லி மாளாது! இதில் கம்யூனிசத்தைப்பற்றி தொடர் ஆரம்பித்தால் நிலமை இதை விட மோசமாகும்! இவருக்கு திராணியிருந்தால் நேரடி விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும்! நாம் விடுக்கும் அழைப்பு இன்னும் காத்துக்க்ண்டுதான் இருக்கிறது! இவர் விட்டாலும் நாம் விடப்போவது இல்லை! இவருடைய உளரலுக்கு ஒரு முடிவு கட்டியாகவே வேண்டும்! நேரடி விவாதத்தில்தான் அது சாத்தியம்!

இந்த தொடரை பார்த்தால் மண்டையே காய்ந்துவிடும் போல் உள்ளது! அந்தளவிற்கு முன்னுக்குப்பின் முரண்,உளரல்,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை! இவருடைய கருத்துக்கு இவரே முரண்பட்டு பேசுவது.... அப்பப்பபா! இவர் ஆரம்பத்தில்  இரண்டு முக்கியமான கேள்வி என்று கேட்டார்! அவையிரண்டுக்கும் பதிலளிக்கப்பட்டுவிட்டது!. அதில் இரண்டாவது கேள்விக்கு நாம் அளித்த பதிலுக்கு வாயே திறக்கவில்லை! ஏனையவற்றிற்கு அதும் எவற்ரையெல்லாம் மழுப்ப முடியுமோ அவற்றுக்கு மட்டும் மழுப்பியுள்ளார். இன்னும் அவர் கேட்ட கேள்விகல் பலவற்றிற்கு அளிக்கப்பட்ட பதிலுக்கு வாய் திறக்கவில்லை! எனவே இதில் பலவற்றை அவர் ஒப்புக்கொண்டார் என்பதே யதார்த்தம்! எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்.

இவரது சப்பைக்கட்டுகள் தொடரும் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்

Thursday, March 24

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு 

பகுதி- 05

குரானின் சவாலுக்கு பதில் என்ற பெயரில் செங்கொடி உளறியதற்கு நாம் அளித்த பதிலை மறுக்க முடியாமல் ஏதோ எழுதி மானத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது பதிலுக்கு பதில் போட்டிருக்கிறார். அதில் இவர் கையாண்ட தில்லாலங்கடி வேலையை மீண்டும் தோலுரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உள்ளது.

அடைப்புக்குறிக்கு ஒரு தத்துவத்தை கூறினார். அடைப்புக்குறிக்குள் விளக்கம் போடாவிடின் குர்ஆனில் முரண்பாடுகளும் தவறுகளும் நிறைய கிடைக்கும் என்றார். அதற்கு ஒரு வசனத்தையும் எடுத்துக்காட்டினார். அதை நாம் மறுத்து எழுதியிருந்தோம். அதற்கு பதிலளிக்கப்புகுந்தவர், அடைப்புக்குறி இலகுவாக விளங்குவதற்காக போடப்படவில்லை. ஏனென்றால், அதில் அதிகமான அடைப்புக்குறிகள் போடப்பட்டுள்ளன! ஏனைய எந்த நூல்களையோ,  பத்திரிகைகளையோ மொழிபெயர்க்கும் போது அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார். இந்த அடைப்புக்குறி ஒரு மேட்டரே இல்லை.  அடைப்புக்குறி குர்ஆனின் மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதற்கு குர்ஆனின் தவறுதான் காரணம் என்பது தவறு. இதற்கு முழு முதற்காரணம் மொழிபெயர்ப்பாலர்கல்தான். எந்தவொரு மொழியாக இருந்தாலும் அதனை வேறு மொழிக்கு மாற்றம் செய்யும் போது அந்த மொழியின் நடைக்கேற்பவே மற்றம் செய்ய வேண்டும். இதை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் கவனிக்கத்தவரியுள்ளனர். ஆனால், இந்த குறைகளை அறிஞர் பி.ஜே மொழிபெயர்த்த தமிழாக்கத்தில் காண இயலாது. அது எவ்வளவுக்கு அடைப்புக்குறிகளை தவிர்க்க இயலுமோ அவ்வளவுக்கு தவிர்க்கப்பட்டு எளிய மொழி நடைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து இன்னொரு விளக்கத்தையும் கூறுகிறார்கள். அதுவும் தவறு என்கிறார்.  அந்த விளக்கம் என்ன? ஏனைய விடயங்களை மொழிபெயர்ப்பது போல் குர்ஆனை மொழி பெயர்ப்பது கிடையாது. அதை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அதிகம் அடைப்புக்குறிகள் இடப்படுகின்றது. இதுவும் தவறு என்கிறார். இந்த விளக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதால் அடைப்புக்குறி அதிகம் இடம்பெறுகிறது என்பது தவறு! ஆனாலும் இதற்கு இவர் அளிக்கும் மறுப்பையும் எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. எந்தவொன்றையும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க இயலாது. அப்படி செய்தால் குழப்பம் வரும்; இலக்கணம் விடாது! எனவே, குர்ஆன் கருத்தைத்தான் மொழிபெயர்த்துள்ளனர் என்கிறார். வேண்டுமென்றால் நாம் இப்போது சவால் விடுகிறோம். குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தைதான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது! இதை நாங்கள் நிரூபிக்கத்தயார்! செங்கொடி தயாரா? வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் இலக்கணம் விடாதாம். சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தால் இலக்கணம் அங்கீகரிக்கும்! மாறாக அந்த மொழியின் நடைக்கேற்பவே வேறு மொழியில் பெயர்த்தால்தான் இலக்கணம் சிக்கலை ஏற்படுத்தும்! இதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு இடையில் குரான் வாக்கியங்கள் தமிழுக்கியைந்த கோர்வையுடன் இருப்பதால், குரான் அப்படி சொல்லுக்குச்சொல் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் இருக்க முடியாது. மட்டுமல்லாது, பல்வேறு தமிழ் குரான் மொழிபெயர்ப்புகள் ஒரேமாதிரியான வாக்கிய அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை என்கிறார். அரபு மொழிக்கும் தமிழுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன! அதன் இலக்கனத்திலிருந்து, மொழி நடையிலிருந்து, சொல்லுருவாக்கம் உட்பட வேற்றுமைகள் உள்ளன என்பதை செங்கொடி மறந்துவிட்டார். குர்ஆன் மொழிபெயர்ப்புகளிடையே வார்த்தை அமைப்புகளில் வித்தியாசம் இருப்பதால் குர்ஆன் தவறாகிவிடுமா? ஒரு சொல்லுக்கு பல ஒத்த கருத்துச்சொர்கள் இருக்கும். அதை மாற்றி மாற்றி யூஸ் பண்ணால் அது முரண்பாடா?

ஏற்கனவே எடுத்துக்காட்டிய அதே வசனத்தை இத்தொடரிலும் எடுத்துக்காட்டி அதன் முரண்பாட்டை (?) விளக்குகிறார்.

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட வசனத்தையே (குரான் 2 :178 ) எடுத்துக்கொள்வோம். "சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை" என்பதன் பொருள் என்ன? சுதந்திரமான ஒருவன் கொல்லப்பட்டால் அதற்கு பகரமாக சுதந்திரமான ஒருவனும், அடிமை ஒருவன் கொல்லப்பட்டால் அதற்குப் பகரமாக அடிமை ஒருவனும் என்று நேரடியாகவும், அடிமை ஒருவனை சுதந்திரமான ஒருவன் கொலை செய்தால் அதற்குப்பகரமாக கொலை செய்த சுதந்திரமானவனின் அடிமை ஒருவன் என்று மறைமுகமாகவும் பொருள் வருகிறது. இப்படி எதிர்மறையான வகையில் யாரும் பொருள் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் "சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை" என்று "கொலை செய்த" என்பதை அடைப்புக்குறிக்குள் இட்டு பயன்படுத்துகின்றனர். ஜான் ட்ரஸ்ட் வெளியீட்டிலும் இதே வசனத்தில் இதே அடைப்புக்குறி சில சொற்கள் தள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மொழியியல் சிக்கல்களுக்காக மட்டுமே அடைப்புக்குறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஏற்கத்தக்கதன்று.

எந்த ஒரு வசனத்தை விமர்சிப்பதாக இருந்தாலும் அந்த வசனத்தை முழுசாக போட்டு விளக்க வேண்டும். இதை எனது மறுப்பில் கூட "முழுசா போட்டு விளக்கியிருந்தால் புட்டு வெளியாகியிருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தேன். அதை கவனத்தில் கொள்ளாது மீண்டும் அதே கயமைத்தனத்தை இங்கும் நிலை நாட்டியுள்ளார். இவர் சுட்டிக்காட்டிய வசனம் பழிவாங்குவது தொடர்புடையது. இதை அவரும் ஒத்துக்கொள்கிறார். பழிக்குப்பழி என்பது கொலை செய்தவனை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் பழி தீர்ப்பதை குறிக்கும். இந்த அடிப்படையை விளங்கிக்கொண்டவர்கள் அடைப்புக்குறி இல்லாமல் வாசித்தால் கூட சுதந்திரமானவனுக்கு சுதந்திரமானவன் என்றால் கொலை செய்தவனைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொள்வர். ஏன்? பழி வாங்குதல் என்றால் யாரை கொலை செய்தானோ அவனைப் பழிவாங்குவது என்றுதான் அர்த்தம்! அதுதான் நியதியும் கூட! இதை புரியும் திறனற்ற செங்கொடி போன்றவர்களுக்காக "கொலை செய்த" என்று அடைப்புக்குள் போட்டிருக்கும். எனக்கு அடைப்பு இல்லாமல் விளங்கும் என்று கூறிவிட்டு அடிப்படை அறிவு கூட இல்லாமல் விமர்சிக்க கிளம்பியுள்ளார். இந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை!

நான் இங்கு அடைப்புக்குறி என்றுதான் பயன்படுத்தியுள்ளேன்.(செங்கொடியும் அவ்வாறுதான்) ஆனால், அடைப்புக்குறியில் குறிப்பிடும் விளக்கம் என்றுதான் குறிப்பிட வேண்டும். அடைப்புக்குறி என்றால் அதன் விளக்கம் தான் என்று புரிந்து கொள்ளும் செங்கொடி இதற்கு மட்டும் இப்படி அடம்பிடிப்பது வீம்புக்காக என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்து நேரடி முரண்பாட்டை இரண்டு வசனங்களை குறிப்பிட்டு முதல் வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும் அடுத்த வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முரண்பாடில்லையா? என்று துள்ளிக்குதித்தார். இதற்கு நாம் பதிலளித்திருந்தோம். அதற்கு இவர் கூறும் விளக்கம் இதோ:

அடுத்து முரண்பாடான வசனத்திற்கு வருவோம். கட்டுரையில், ஒரு வசனத்தில் முதலில் வானம் பின்னர் பூமி என்றும், வேறொரு வசனத்தில் முதலில் பூமி பின்னர் வானம் என்றும் இருக்கிறது, இது முரண்பாடில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நண்பர், \\பூமியைப்படைத்தான்; பின்னர் வானத்தைப்படைத்தான்; பின்னர் அதை விரித்தான். இதில் எந்த முரண்பாடுமில்லை// என்று எழுதியுள்ளார். குறிப்பிட்ட கட்டுரைக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை கவனித்துப்பார்த்தால் இதே கருத்தை வேறொரு நண்பர் ஏற்கெனவே கூறியிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் அவர் வானத்தை இரண்டு முறையாகவும் பூமியை ஒரு முறையாகவும் குறிப்பிட்டார். நண்பர் இஹ்சாஸ் பூமியை இரண்டு முறையாகவும் வானத்தை ஒரு முறையாகவும் குறிப்பிடுகிறார். இவைகளெல்லாம் அந்த முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதற்காக சொல்லப்படும் விளக்கங்கலேயன்றி வேறில்லை.

விளக்கம் தவறு என்றால் தவறு என்பதை நிரூபிக்க வேண்டும்! அதை விடுத்து, இதுபோல்தான் இன்னொருவரும் கமண்டில் கூறினார். அதில் வானம் இரண்டு தடவையும் பூமி ஒரு தடவையும் என்று குறிப்பிட்டார். நான் பூமி இரண்டு தடவையும் வானம் ஒரு தடவையும் என்று கூறி முரண்பாட்டை நீர்த்துப்போக வைப்பதாக அசடு வழிகிறார். குறிப்பிட்ட கமண்டில் சொன்ன விளக்கத்துக்கு பதில் அளித்தது போன்று நமது விளக்கத்துக்கும் பதில் அளித்து விட்டு இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எமது விளக்கத்துக்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை! தவறு என்று நிரூபிக்கவில்லை. இவரது இயலாமையை பதிலாக அவிழ்த்து விடுகிறார். அத்தோடு நிறுத்தாமல் இன்னொரு முரண்பாடு அதாவது பூமி படைக்கப்பட்ட நாட்களின் என்னிக்கையிடையே வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டு சரிகட்டிவிடுகிறார். இதே வாதத்தை இவர் வேறு ஒரு தொடரில் முன்வைத்துள்ளார். அதற்கு பதில் வெளியிடப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.! இந்த இடத்தில் இது திசை திருப்பும் கருவியாக தனது இயலாமையை மூடி மறைக்கும் கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்.

குர்ஆனில் ஒரு வசனத்திற்கு மாற்றீடாக ஒரு குறளை குறிப்பிட்டு மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்!! என்று முழங்கினார். அதற்கு பதில் சொல்லப்பட்டிருந்தும் எவ்வாறெல்லாம் திருகுதாளம் போடுகிறார் என்பதை வாசிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அதற்கான நமது மறுப்பை பார்க்கும் முன் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். அதாவது, ஒரு குறளை குறிப்பிட்டு இதை குர்ஆன் வசனமொன்றிற்கு மாற்றீடாக பயன்படுத்துவீர்களா என்று கேட்பவர் எந்த வசனத்திற்கு மாற்றீடாக பயன்படுத்த வேண்டும். அந்த வசனம் இக்குறளை விட எந்தவகையில் கீழானது என்று குறிப்பிடவே இல்லை.!

 அவரது சப்பைக்கட்டை பாருங்கள்:

நோய் என்னதென்று தெரிந்து, அந்த நோய் வந்ததற்கான காரணத்தை அறிந்து, அதை என்ன முறைமையில் போக்குவது என்பதை அறிந்துகொண்டு, செய்வதற்கு வயப்பட்டதை செய்ய வேண்டும். என்பது அந்தக்குறளின் பொருள். இதை வெறுமனே நோய் வந்தால் மருத்துவம் பாருங்கள் என்பதாக குறுக்கி விட முடியாது. குறள் கூறும் மருத்துவத்திற்கான இந்த இலக்கணம் இன்றுவரை பொருத்தமானதாக இருக்கிறது, எதிர்காலத்திலும் இது பொருத்தமானதாகவே இருக்கும்.

குறள் கூறும் மருத்துவத்திற்கான இலக்கணம் இன்று வரை பொருத்தமாவதாக குறிப்பிடுகிறார். இதனால் அந்த குறள் குர்ஆன் வசனத்திற்கு மாற்றீடாக குறிப்பிட்டு விட முடியுமா? வள்ளுவர் இதை கூறும் முன்போ கூறும் கால கட்டத்திலோ மருத்துவத்திற்கு வேறு இலக்கணமா இருந்தது? இதுவெல்லாம் சாதாரண விடயம்! பசித்தால் சாப்பிடு! தூக்கம் வந்தால் தூங்கு! மழை பெய்தால் குடை பிடி! என்று ஏதாவது ஓரிடத்தில் இருந்து அதை எவனாவது பார்த்தீர்களா! இதெல்லாம் எங்கள் வேதத்தில் உள்ளது! இது இக்காலத்திற்கும் பொருந்துகிறது! எனவே இது இறைவேதம் என்று கூறினால் எப்படியோ அப்படி உள்ளது இந்த வாதம்!

இதைக்கூருவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். அலிப், லாம், மீம் என்று பொருளற்ற அசைச்  சொற்களை எல்லாம்  குர்ஆனில் வசனமாக இடம்பெற்றிருக்கிறது என்பதை நண்பர் மறந்துவிட்டாரா? பொருளற்ற அசைச்சொர்களை வசனமாக கூறமுடிந்த கடவுளுக்கு பொருளுடன் கூடிய ஒரு கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் தேவையின்றிப் போகமுடியும்? நண்பர் நம்பும் கடவுளே கொசுவையோ அதற்கும் அட்பமானதையோ உதாரணம் கூற தயங்கமாட்டேன் என்று கூறியிருக்கும் போது மருத்துவம் குறித்த ஒன்றை கூறுவதற்கு கடவுள் எதற்கு என்கிறார். இதுதான் என்ன வகை ஒப்பீடோ?

அலிப், லாம், மீம் போன்ற பொருளற்ற வசனங்கள் இருப்பது ஒரு உயர்ந்த இலக்கிய நயத்திற்காக என்பதை சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். ஏன் வள்ளுவர் கூட உயிரளபடையை பயன்படுத்தியிருக்கிறார் ஓசை நயத்திற்காக! அதை தனியே எடுத்தால் ஒரு பொருளும் இராது! ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டுமெனில் அதற்கான தேவை இருக்க வேண்டும்! பிரித்தறிவிக்க வந்த வேதத்தில் நோய் வந்தால் மருத்துவம் செய்! என்று எதற்காக குறிப்பிட வேண்டும்? என்ன அவ்வளவுக்கு மருந்து செய்ய தெரியாமலா இருந்தார்கள்? கொசுவை உதாரணமாக குறிப்பிட அல்லாஹ் வெட்கப்பட மாட்டான் என்று எதற்காக குறிப்பிடுகிறான். அது பொருத்தமா? இல்லையா? என்பதை வாதமாக எடுத்து வைக்க வேண்டும்! போகிற போக்கில் தடவி விட்டு செல்லக்கூடாது! பதில் தெரியாவிட்டால் இப்படியெல்லாம் அலட்டுவது இவர்களின் வாடிக்கை போலும்!

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வகையில் குறிப்பிட்ட அக்குறளுக்கு அறிவியல் முன்னறிவிப்பு கொடுக்கிறார்!

இந்தக்குறளில் நோய் குறித்த முன்னறிவிப்பு இல்லையா? நோய் நாடி அதன்முதல் நாடி தணிக்கும் முறைனாடி அதைச்  செய்வது என்று மட்டும் கூறியிருந்தால் அதில் முன்னறிவிப்பு ஒன்றுமில்லை. ஆனால், அதில் வாய்ப்பச் செயல் என்றும் கூறப்பட்டிருக்கிறது. நோயைத் தணிக்கும் முறையை அப்படியே செய்துவிடாமல் அதில் வாய்ப்பானதை செய்ய வேண்டும் என்பதன் மூலம் ஒவ்வாமை என்னும் நோய் குறித்த முன்னறிவிப்பு அங்கு வருகிறது. நோய்க்கான மருந்தேயானாலும் அந்த மருந்தை உட்கொள்ளும் உடல் அந்த மருந்தை ஏற்றுக்கொள்கிறதா என்பதையும் கண்டறிந்து அதன் பின்னரே மருத்துவம் செய்ய வேண்டும் எனும் விவரணத்தை பெறலாம். அந்த வகையில் அது, ஒவ்வாமை எனும் நோய் குறித்த முன்னறிவிப்பாக இருக்கிறது.

என்னே விவரணம்! முன்னறிவிப்பு என்றால் குறிப்பிடும் அக்காலத்தில் இல்லாத ஒன்று எதிர் காலத்தில் வரும் என்பதை குறிக்க பயன்படும். ஒவ்வாமை என்பது என்ன பத்து அல்லது இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பா? அக்காலத்தில் மட்டுமல்ல! எக்காலத்திலும் உள்ளதுதான்! இன்னும் சொல்லப்போனால் இதில் ஒவ்வாமை பற்றி இருக்கிறது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை! ஒவ்வாமை என்றால் நம் உடலுக்குத்தேவையான, நாம் சாப்பிடும் சாப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஒரு நிலை! இது அரிதானது! குறளில் உள்ளது வாய்ப்பச் செயல்! வாய்ப்பச் செயல் என்றால், அந் நோய்க்கேற்ற வகையில் என்பது அர்த்தம்! மருந்து செய்யும் போது அவரது உடலுக்கும் நோயின் தன்மைக்கும் ஏற்ப மருந்து அளிப்பதுதான் மரபு! மரபைத்தான் சொல்லியிருக்கிறார்! இதில் ஒவ்வாமையும் கிடையாது! முன்னறிவிப்பும் கிடையாது! நல்ல வேலை, இது எயிட்சிலிருந்து காத்துக்கொள்ள காண்டம் யூஸ் பண்ண சொல்லியிருக்கிறார் என்று சொல்லாமல் விட்டாரே!

குறளையும் குரானையும் இலக்கிய நயத்தில் எப்படி ஒப்பிட்டுப்பார்த்தார் என்பதை நண்பர் குறிப்பிடவே இல்லை. வெறுமெனே அட்ரஸ் இல்லாமல் போய்விடும் என்கிறார். எப்படி என்பதையும் விவரிப்பார் என எதிர்பார்க்கிறேன். இலக்கிய நயம் மட்டுமல்ல இலக்கணக் கட்டும் கொண்டது குரல். அதன் யாப்பை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் 1330 குறட்பாக்களில் எந்த ஒரு குரலும் தளை தட்டாது. அதன் எல்லாக் குறளும் முச்சீர் ஈறாக எழுசீர் விருத்தமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் குர்ஆனில் இருக்கும் இலக்கிய, இலக்கண நயங்களில் ஒன்றிரண்டை நண்பர் எடுத்துவிட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

எமது மறுப்பைக்கூட முழுசாகப்படிக்கவில்லை! இவருக்கு குர்ஆனின் உயர்ந்த இலக்கிய நடை மட்டுமல்ல குர்ஆன் என்றாலே என்னவென்று தெரியாது என்பதை அவருடைய கட்டுரையிலிருந்து சுட்டிக்காட்டி மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்பதற்காக சில விடயங்களை குறிப்பிட்டிருந்தேன்! அதை வாசித்தும் வாசிக்காதது போல் கேட்கிறார். எனவே அதை மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

இதைப்போல் என்பதற்கு எந்த வரையறையும் கூறாததால் அதன் உள்ளடக்கம், பொருள், ஓசை நயம், வடிவமைப்பு என்பவற்றை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை கொண்டுவருமாறுதான் கூறுகிறது. ஏனெனில் குர்ஆன் என்பதே இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தொகுப்புதான். எனவே, இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை இயற்ற வேண்டும் அல்லது கொண்டுவர வேண்டும்!.

பொதுவாக ஒரு உயர்ந்த இலக்கியப்படைப்பை இயற்ற வேண்டுமெனில் நிறைய பொய்களையும், மிகையான உவமை, உருவகம் போன்றவையும் பயன்படுத்துவர்! ஆனால் குர்ஆன் இவை அனைத்தும் இன்றி உண்மையை மட்டும் கொண்டே அமைந்துள்ளது. மேலும் ஒரு படைப்பானது எந்தளவுக்கு உயர்ந்த தரத்தை கொண்டுள்ளதோ அந்தளவுக்கு பாமர மக்களை விட்டும் தூரமாகும்! ஆயினும் குர்ஆன் அப்படிப்பட்டதல்ல! கவிஞர்களுக்கு  விளங்கியது போல் பாமர மக்களுக்கும் விளங்கியது! (ஆனால் திருக்குறள் அப்படிப்பட்டதல்ல! அது தமிழ் மொழியில் இருந்தாலும் அதை அதே மொழியில் மொழியாக்கம் செய்தே பாமரர்களுக்கு கூற வேண்டும். இல்லையெனில் விளங்காது.) இவைதவிர இன்னுமுள்ளன. இவ்வளவும் போதும்.

இதற்கு மேலதிகமாக இத்தொடரில் யாப்புகளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்! எனவே, அது சம்பந்தமாகவும் சில விடயங்களை குறிப்பிடலாம். தமிழை பொறுத்தவரை கவிதை, பாடல் போன்றவற்றை இயற்றுவதற்கு சில யாப்பு விதிமுறைகளை அமைத்திருப்பார். அது குறிப்பிட்ட செய்யுளின் இலக்கிய தரத்தை கூட்டுபவனவாகவும் இருக்கும். இந்த வகையில் தமிழில் இவர் குறிப்பிடும் யாப்பு உட்பட பல உள்ளன! இதல்லாமல் புதுக்கவிதையைப்போன்று இயற்றினால் இலக்கிய நயம் அவ்வளவாக இராது. ஆனால், குர்ஆனில் இது போன்ற எந்த யாப்பையும் காண இயலாது! சில அத்தியாயங்கள் அதிக வசனங்களை கொண்டதாகவும் இன்னும் சில குறைந்த வசனங்களை கொண்டதாகவும் இன்னும் பலவாறான வடிவில் இருந்தும் அதம் ஓசை நயம் மிகுந்த ஆச்சரியத்திற்குரியது! இதுபோல் எந்த ஒரு யாப்பை பயன்படுத்தாமலும் அதுவும் ஓசை, இலக்கிய நயங்களோடு ஒரு புத்தகம் இருக்குமெனில் காட்டலாம்! இவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலும் சொதப்பாமல் பதில் சொல்லவும். வேண்டுமென்றால் இலக்கியத்தரத்தில் எது உயர்ந்தது என்பதை மட்டும் கருப்பொருளாக  வைத்து வைத்து விவாதிக்கத்தயாரா? வேறு எதையும்  குறிப்பிடத்தேவையில்லை. எழுத்து விவாதத்தில் இவர் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை! நேரடியாக அழைக்கிறேன்.

ஒரு உயர்ந்த இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டுமென்றால் மிகையான உவமைகளும், உருவகங்களும், பொய்களும், புனைவுகளும் இருக்க வேண்டும் என்கிறார். ஆம் உலக இலக்கியங்களில் இவை இடம்பெற்றிருக்கின்றன. அதே நேரம் குரானிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன. உவமைகள் இருக்கின்றன, உருவகங்கள் மிகைப்படுத்தல்கள் இருக்கின்றன. பொய்கள் இருக்கின்றன. நாங்கள் நம்புகிறோம் அதனால் அத்தனையும் சரி, நாங்கள் நம்பாததால் அத்தனையும் பழுது என்பது சரியான ஒப்பீடல்லவே.

குர்ஆனில் பொய்யான உவமைகள், மிகைப்படுத்தல்கள் இருக்கிறது என்கிறார்! இதை இவர் நிரூபிக்க வேண்டும். நாங்கள் நம்புகிறோம் அதனால் சரி என்று நான் இதுவரை விவாதிக்கவில்லை! முடிந்தளவுக்கு அறிவுபூர்வமாகத்தான் நமது வாதங்களை எடுத்து வைக்கிறோம். பதில் சொல்ல திராணியிலாமல் சமாளிக்கக்கூட முடியாமல் ஏதாவது ஒன்றைக்கூறி எமது வாதத்தை நிலை நாட்ட முற்படுவோம் என்ற குருட்டுச்சிந்தனையில் உதித்த முத்துக்கள்தான் இவை. எங்கள் நம்பிக்கை சரியாக உள்ளது என்பதால் வாதிக்கிறோம். தவறு என்பவர்கள்தான் இது எங்கள் நம்பிக்கை என்று ஒதுங்கிவிடுவர்! நாம் அவ்வாறு சொல்லவுமில்லை! செய்யவுமில்லை!

உயர்ந்த தரமுள்ள படைப்புகள் பாமர மக்களை விட்டு விலகும், ஆனால் குரான் அப்படியல்லாமல் உயர்ந்த தரமாகவும், பாமர மக்களுக்கு அணுக்கமாகவும் இருக்கிறது என்கிறார் நண்பர். ஒருவருக்கு ஒன்று எளிமையாய் இருப்பதும் கடினமாய் இருப்பதும் அதில் அவர் காட்டும் ஈடுபாட்டிலேயே இருக்கிறது. குறளில் எளிமையனவையும் இருக்கின்றன. கடினமானவையும் இருக்கின்றன. இது எல்லா இலக்கியங்களுக்கும் பொதுவானதுதான். குரானும் இதற்கு விதி விலக்கில்லை.

ஒன்றின் மீதுள்ள ஈடுபாட்டினால் விளங்குவது என்பதற்கும் சாதாரணமாக விளங்குவதற்குமிடையில் வித்தியாசம் இருக்கிறது. குர்ஆனை விளங்குவதற்கு எந்த ஈடுபாடும் தேவையில்லை! குர்ஆன் மூலம் கவரப்பட்டவர்கள் அதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததில்லை! கவரப்பட்ட பின்புதான் அதில் ஈடுபாடு காட்டினர்! இந்த வித்தியாசம் கூட சென்கொடிக்கு விளங்கவில்லை. குறளில் எளிமையானது இருந்தால் எடுத்துக்காட்டுங்கள் திருக்குறள் தெரியாத நன்கு தமிழை மட்டும் தெரிந்திருக்கும் ஒருவரிடம் போய் கேட்போம். அவர் அதன் கருத்தை சொல்கிறாரா இல்லையா என்று பார்ப்போம்!

அரபு தெரிந்த ஆனால் குரான் தெரியாத குரான் குறித்து அறிமுகமில்லாத ஒருவரிடம் குரானை வாசித்துக்காட்டி பொருள் கூறச்சொன்னால் அது அவருக்கு கடினமாகத்தான் இருக்கும். ஏன் அரபு தெரிந்த முஸ்லீம்களுக்கு கூட விரிவுரைகள் இல்லாமல் குரானை விளங்கிக் கொள்வது கடினம் தான்.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் இருந்த நபித்தோழர்கள்  என்னவோ  இதை பின்பற்றுவதற்காக வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் பேசுகிறார். குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் குர்ஆன் என்னவென்று தெரியாதவர்கள்தான் அதன் போதனையை கேட்டு இஸ்லாத்தை தழுவினர். இவருடைய வாதத்தில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. இக்காலத்தில் கூட அதுதான் நிலை! வேண்டுமென்றால் பரீட்சித்துப்பார்க்கலாம். ஒரு காலத்தில் விரிவுரை அவசியம் என்ற கருத்து நிலவியது. இப்போதும் உள்ளது! இது தேவையில்லை என்றுதான் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். தமிழர்களுக்கே தேவையில்லை எனும் போது அரபிகளுக்கு தேவையா?

அவ்வளவு ஏன்? முகம்மது குரானை கூறிக்கொண்டிருக்கும் கால கட்டங்களில் கூட மக்களுக்கு புரியாத இடங்களில் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். முகம்மதுவும் விளக்கியிருக்கிறார். அது ஹதீஸ்களாக பதிவு செய்யப்பட்டும் இருக்கிறது. மட்டுமல்லாது முஸ்லீம்கள் எல்லோருக்கும் குரானும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்பட்டிருப்பது போல், தமிழர்கள் அனைவருக்கும், குறளும் அதன் கருத்தும் பரவலாக்கம் செய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவைகளையெல்லாம் தெரிந்து கொண்டே பாமரர்களுக்கு புரியும்படி இருக்கும் இலக்கியம் குரான் என்பது பரிசீலனைய்ற உயர்வுனவிற்சியாக மட்டுமே இருக்க முடியும்.

இவர் கொஞ்சம் கூட சிந்தனையற்றவராகத்தான்  இத்தொடர் முழுவதையும் எழுதியிருக்கிறார். முகம்மது நபியிடம் விளக்கம் கேட்டவர்கள் அர்த்தம் புரியாமல் கேட்டார்களா? அர்த்தம் புரிந்ததால்தான் இதுக்கு என்ன விளக்கம் என்று கேட்டார்கள். ஒரு பொருளின் விளக்கத்தை கேட்பதற்கும் அதன் அர்த்தத்தை கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு! அரபு தெரியாத முஸ்லிம்களுக்கு அதன் கருத்துடன்தான் பரவ விட வேண்டும். அரபு தெரிந்த முஸ்லிம்களுக்கு இது தேவையில்லை! ஆனால் திருக்குறள் தமிழில் இருந்தாலும் அதற்கு தமிழிலேயே விளக்கம் கூற வேண்டும். வேற்றுமை புரிகிறதா? இவர் பரிசீலிக்கும் லட்சணம் இதுதான்! இதற்குள் எமக்கு பரிசீலனை அற்றவர்கள் என்ற பட்டம் கொடுக்கிறார்!

இவர் குறிப்பிடும் முரண்பாடோ, குறளோ எந்த வகையிலும் குர்ஆனுக்கு பொருந்தாது என்பதை இரண்டாவது தடவையும் நிரூபித்துள்ளோம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நீண்ட நாள் இடைவெளியில் யோசித்து எழுதியும் பலனில்லை. குர்ஆனின் சவாலுக்கு பதில் எனும் தொடரில் இவர் மதவாதிகளே! முஸ்லிம்களே! பதில் சொல்லுங்கள்! சிந்தியுங்கள்! என்று முழங்கியவர்  இதில் சுருதி இறங்கி அடக்கி வாசிப்பதை இரண்டையும் ஒப்பிடும் போது புரிந்து கொள்ளலாம்.

இனியாவது முயற்சிப்பாரா? ஆவலுடன்....!

இவரது சப்பைக்கட்டு தொடரும் வரை சவுக்கடியும் இடி போல் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: குர்ஆன் விடுக்கும் சவாலை விரைவில் ஏற்றுக்கொள்ளுமாறு அதற்கு பதிலளிக்குமாறு அவரது தளத்தில் நம் சகோதரர்கள் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.




Saturday, February 12

செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு

பகுதி-04

விதி பற்றிய முரண்பட்ட தன்மையச் சுட்டிக்காட்டி செங்கொடி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நமது பதிலைத் தெளிவாகக் குறிப்பிட்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார். விதியில் முரண்பாடு உள்ளதை நாம் மறுக்கப் போவதில்லை. அதை விளங்கிக் கொள்ளும் அளவிற்கு எமக்கு அறிவு இல்லை என்பது தான் எமது பதில். ஆயினும் இதன் மூலம் மனித குலத்திற்கு மாபெரும் நன்மை உள்ளது. அது என்ன என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாக்கியுள்ளோம். அதை மறுக்கப் புகுந்தவர் விதி ஒரு சுமை தாங்கி என்பது மேம்போக்கானது! ஆனால் தமக்கேற்பட்ட தவறைத் திருத்திக்கொள்ள விதியை மறுக்க வேண்டும். இதை முஸ்லிம்கள் நம்பிக்கையளவில் தான் கொண்டுள்ளனர் என்கிறார். ஒரு இழப்பிலிருந்து பாடம் பெறுவதற்கு முன் அதன் தாக்கத்திலிருந்து விடுபடுவது அவசியம். அதை நிறைவேற்றும் விதிக்கொள்கை மேம்போக்கானது என்பது சமாளிப்புத் தான். ஒருவன் பாடம் பெறுவதற்கு விதியை மறுக்க வேண்டியதில்லை. அதை நம்பிக் கொண்டு படிப்பினையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு இழப்பிலிருந்து பாடம் பெறுவது கூட விதியாக இருக்கலாம்.

நமது மறுப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:
விதி உள்ளதெனில் நான் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எவ்வாறு பொறுப்பேற்பது என்ற கேள்வியும் விதி இல்லையெனில் நான் என்ன செய்வேன் என்று தெரியாதவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழும்

இதற்கு செங்கொடி இப்படி பதிலளிக்கிறார்:

கடவுளை நம்புபவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை இது. கடவுளின் இருப்பையே அசைத்துப் பார்க்கிற இந்தக் கேள்விக்கு விடை கூற முடியாது என்பதாலேயே முகம்மது இது பற்றி தர்க்கிக்காதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார். அங்கும் இல்லாத, இங்கும் இல்லாத இரட்டை நிலையை மேற்கொண்டிருக்கிறார். இஸ்லாத்தை நம்புகிறவர்களுக்கு விதிக் கொள்கை போதுமானது. ஆனால் அதை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கும் அந்த நம்பிக்கையையே பதிலாக கூறுவீர்களென்றால், அது எல்லாருக்கும் பொதுவான மனிதனின் தோல்வியாக இருக்காது. மதத்தை கடவுளை நம்புகிறவர்களின் தோல்வியாக இருக்கும். முரண்பாடான இருவேறு நிலையை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு இல்லை என்றெல்லாம் நீட்டிமுழக்க முடியாது.

கடவுளை நம்பாதவர்களிடம் கடவுள் நம்பிக்க அடிப்படையில் பதில் சொல்லக் கூடாது என்ற இவரது வாதத்தில் இவர் உண்மையாளராக இருந்தால் இவர் கடவுள் இருக்கிறாரா என்பது குறித்த விவாதத்தில் இறங்கி கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் மற்ற நம்பிக்கைகள் பற்றி கேள்வி கேட்க வேண்டும். இஸ்லாம் குறித்து இவர் கேட்கும் கேள்விகளுக்கு இஸ்லாமிய நம்பிக்கை அடிப்படியில் தான் பதில் கூற வேண்டும்.
இப்படி நாம் பதில் சொல்லும் போதெல்லாம் கடவுளையே நான் நம்பவில்லையே என்ற பதிலைச் சொல்லி தப்பித்துக் கொள்ளக் கூடாது என்றால் முதலில் கடவுள் இருக்கிறாரா என்பதை பகுத்தறிவு பூர்வமாக விவாதிப்பது அவசியமாகிறது. கடவுள இல்லை என்று வாதிடுவது பகுத்தறிவற்றவர்களின் கருத்து என்றூ நாங்கள் நம்புவதால் இவரது இந்த வாதத்தை நிராகரிக்கீறோம்.

இவரது அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடு எனும் தொடரின் இறுதியில் எம்மைப்பார்த்து "உங்கள் நம்பிக்கைக்குள்ளிருந்து பதிலளியுங்கள்" என்றார். நாமும் எமது நம்பிக்கை வழியில் பதிலளித்தால் ஏன் உங்கள் நம்பிக்கையை பதிலாகக் கூறுகின்றீர்கள் என்கிறார்! முரண்பாட்டை விளக்க இப்படி முரண்பட வேண்டுமா? கடவுளின் இருப்பை உண்மைப்படுத்த பல சான்றுகள் உள்ளன. எதை விளங்க முடியாதோ சொன்னாலும் புரியாதோ அதை காட்டி ஒட்டுமொத்த இஸ்லாத்தையே கடவுள் நம்பிக்கையயே தவறு என்பதுதான் பகுத்தறிவா?

விதியை நம்பினால் மனிதன் சிந்திப்பதை மறுக்க வேண்டுமா? விதியில் உள்ளபடிதான் மனிதன் சிந்திப்பதும் கூட நடக்கும் என்று கொள்ள முடியாதா? இன்னுமொன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விதியை நம்மால் அறிந்து கொள்ள இயலாத அதே சந்தர்ப்பத்தில் விதியை இறைவன் மற்ற மாட்டான் என்று கருதக் கூடாது. அவன் நினைக்கும் போது விதியை மாற்றுவான்.

(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது. (13:39)

இதனால் கூட நடக்கவிருப்பதற்கு விதியை நினைத்து சோம்பேறியாகக் கூடாது என்று இஸ்லாம் விதித்திருக்கக் கூடும்.

விதி பற்றிய கேள்விகளை புதிதாக இவர்கள் தான் கண்டுபிடித்து கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது நபிமார்களின் காலத்திலும் இருந்து வந்தது தான். ஆனாலும் நியாய சிந்தனையுள்ள எந்த பகுத்தறிவுவாதியும் கடவுளை மறுக்க ஆயுதமாக தூக்க மாட்டான். இஸ்லாத்தை தவறு என்று நிரூபிக்க இந்த வாதத்தைத் தவிர வேறு எதையும் உறுப்படியாக வைக்கவும் மாட்டார்கள்.

மீண்டும் சொல்கிறோம், விதியில் உள்ள முரண்பாட்டை அறிய எம்மால் முடியாது! அது மறுமையில் தான் அறிய முடியும். ஆனால் விதியை நம்புவதால் எமக்கு நன்மை இருக்கிறது! இவர்கள் இக்கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும் இது தான் பதில்!. ஏனைய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் விடமாட்டோம்.! இன்ஷா அல்லாஹ்.

அடுத்து, பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன் இறைவன் எங்கிருந்தான் என்று கேட்டார். அதற்கு பதிலாக பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு முதல் என்ன நிலை என்பதை எந்த அறிவியலாலும் அறிய முடியாது; அது நமக்குத் தேவையுமில்லை; அவ்வாறு கேட்பதும் அறிவிலித்தனம் என்று குறிப்பிட்டிருந்தோம். இதை மறுக்கப்புகுந்தவர், அறிவியலில் இன்றைய நிலையில் சொல்ல முடியாது; இனி கண்டுபிடித்து சொல்வோம்! என்கிறார்.
அறிவியலில் கூட ஓர் எல்லை உண்டு! அந்த எல்லைக்கு மீறி எந்தவொன்றையும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் அறிவியலாளர்களின் கருத்து. அந்த அடிப்படையில் பிரபஞ்சத்திற்கு முந்திய நிலை பற்றியும்  அறிய முடியாது! ஏனெனில், பெருவெடிப்பின் வினோதத்தன்மை எமது அனைத்து அறிவியல் விதிகளுக்கும் அப்பாற்பட்ட விடயம் என்பதை அறிவியலுலகம் கூறுகிறது. இவர் கண்டுபிடிப்போம் என்பது இவருடைய கற்பனைக் கோட்டை தான்! அறிவியலாளர்களுடையதல்ல! இதனால் இவருடைய இந்த இரண்டு கேள்வியும் அடிபட்டு அடிப்படையற்றுப் போகிறது.

பெருவெடிப்பு கொள்கையை சோதிப்பதற்காக நடாத்திய கொலைடர் சோதனை வெற்றியடைந்து பெருவெடிப்பு சாத்தியம் என்பதை அறிந்துள்ளனர்!. இதை தகவலுக்காக குறிப்பிடுகிறேன்!

இந்த கேள்விகள் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கப்பாற்பட்டு கேட்பது என்று இதையொட்டித்தான் குறிப்பிட்டோம். அதை விளக்க மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார் செங்கொடியார். இஸ்லாம் இல்லாததை இஸ்லாமல்ல என்று சொன்னால் மட்டும் விட்டு விடப்போகிறாரா? நான் கூறியதை எப்படியும் நியாயப்படுத்தி ஆவேன் என்று சுற்றி வளைத்து மூக்கைத்தொட்டு விட மாட்டார்? அதைத்தான் நாமும் பார்த்தோமே!

அல்லாஹ் அவனது வல்லமைகளை எந்த இடத்தில் குறிப்பிட வேண்டுமோ அந்த இடத்தில் தான் குறிப்பிடுகிறான். பொதுவாக ஒரு விடயத்த்தின் முக்கியத்துவம் கருதி அதை பல தடவை குறிப்பிடுவது ஒன்றும் தவறல்லவே!

இவரின் சப்பைக்கட்டுகள் தொடரும் வரை நம் சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்


இது தொடர்பான இடுகைகள்



Sunday, January 30


செங்கொடியின் மறுப்புக்கு மறுப்பு
பகுதி-03

செங்கொடியார் இஸ்லாம்: பிறப்பும் இறப்பும் ஓர் எளிய அறிமுகம் எனும் தலைப்பில் இஸ்லாத்தை அறிமுகம் செய்யப்புகுந்தார். அதில் அடிப்படையிலேயே தவறுவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம். அதை மறுக்கப்புகுந்தவர் எவ்வாறெல்லாம் திருகுதாளாம்போடுகிறார் என்பதை பார்ப்போம்.

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது சைத்தான் உங்களுக்கு எதிரிஎன்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

அடேங்கப்பா! என்னே தத்துவம்! மனிதனுக்கு எதிரி என்றால் அதன் உள்ளர்த்தம் தனக்கு எதிரி என்பதுதானாம். இவர் இப்படி கூறுவார் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். அல்லாஹ் ஒரு இடத்தில் கூட தனக்கு சைத்தான் எதிரி என்று கூறவில்லை. மாறாக மனிதனுக்குத்தான் சைத்தான் எதிரி என்கிறான். இவன் மனிதனுக்கு எதிரியானதன் பின்னனி என்ன? அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை படைத்தபோது அவருக்கு பணிய கட்டளை பிறப்பிக்கிறான். இந்த கட்டளைக்கு சைத்தனைத்தவிர அனைவரும் அடிபணிகின்றனர். இவன் பெருமை கொண்டதன் காரணமாக இவன் அடிபணிய மறுக்கிறான். இதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகிறான். தான் இவ்வாறு உன்னுடைய சாபத்திற்கு உள்ளாகக்காரணமாயிருந்த ஆதமையும் அவரது சந்ததியையும் வழிகெடுக்க ஒரு வாய்ப்புக்கேட்கிறான்; வாய்ப்பளிக்கப்படுகிறது. இவர் கூறுவதுபோல் சைத்தான் அல்லாஹ்வின் எதிரியாயிருந்தால் ஏன் போய் தன் எதிரியிடம் வாய்ப்புக்கேட்டு பல்லிலிக்க வேண்டும்? அவனிடம் சவால் விடாமல் ஏன் அவகாசம் கேட்க வேண்டும்? எனது இழிவு நிலைக்கு காரணமான மனிதனைத்தான் அவன் இழிவுபடுத்த வேண்டும் என்று மனிதனின் எதிரியாகிறான். தன் நண்பனை எதிரி என்று அடையாளமிடமாட்டான். அல்லாஹ்வின் அடிமை சைத்தான் என்பதால் தன்னுடைய ஏனைய அடிமைகளுக்கு இவனை எதிரி என்று அடையாளமிடலாம். இவன் எதிரிதான். அல்லாஹ்வின் படைப்பினனகளிடையே வேறுபாடு உண்டு. ஆனால் அவனிடம் அனைத்தும் சமமே.

யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌மனிதனிடம்.

மனிதனின் கடவுளின் பிரதிநிதியல்ல. தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்.

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

சைத்தானின் தொழில் மனிதனை எதிர்ப்பது கிடையாது. அவனை வழிகெடுத்து நரகத்தில் கொண்டுபோய் சேர்ப்பதுதான் அவன் தொழில். அதற்காகத்தான் அவன் இன்பங்களையும், சொகுசுகளையும் தீமையையும், அசிங்கங்களையும் அழகாகக்காட்டி மனிதர்களை தன்வழிக்கு கொண்டுவருகிறான். எதிர்த்து சண்டையிடுபவனை விட இப்படி கூட இருந்து குழிப்பறிப்பவன் மோசமான எதிரியா இல்லையா? இதன் மூலம் பரிசுக்குப்பதிலாக தண்டணை வாங்கித்தருகிறான். ஒருவனை பிடிக்காதவன் அவனுக்கு கெட்ட விடயங்களை நல்லதாக காட்டி அவனை நாசமாக்கினால் அதைப்பார்க்கும் அவனது தந்தை அவ்விருவரையும் தண்டிப்பார். இதனால் கெடுத்தவன் தந்தைக்கு எதிரியாகிவிடமுடியுமா? இதுதான் இவரது சிந்தனத்திறனா? 5 ரூபாவை காட்டி  5 கோடியை கிடைக்காமல் செய்பவன் எமக்கு எதிரியா? அல்லது அந்த பரிசை வழங்குபவனுக்கு எதிரியா? ஒட்டுமொத்த உலகமும் ஒன்று சேர்ந்து அவனை வணங்குவதில்லை என்று முடிவெடுத்தாலும், அவனை வணங்குவதென்று முடிவெடுத்தாலும் அவனுக்கு ஒன்றும் கூடிவிடப்போவதுமில்லை; குறையப்போவதுமில்லை எனபதுதான் இஸ்லாதின் நிலை!

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி

ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்தது அவனது பெருமை! இதுதான் வினை. அதன் விளைவுதான் மனிதன் மீது அவன் கொண்ட கோபம்!. இறைவனை எதிர்துவிட்டு (ஒரு வாதத்திற்கு) எதற்காக அவனிடம் போய் கெஞ்ச வேண்டும்? இதற்கு செங்கொடி பதிலளிப்பாரா?

மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

அவன் பெருமையின் காரணமாகத்தான் இறைவனின் சாபத்திற்குள்ளாகிரான். இது எதிர்த்தல் என்பதல்ல. சைத்தானின் நோக்கம் என்னைவிட தாழ்ந்த ஒருவனை மதிக்கமாட்டேன் என்பதுதான். இறைவனை எதிர்ப்பதல்ல. ஆதலால், சைத்தான் மனிதனின் எதிரி என்பதுதான் மேலும் சரி என்று நிரூபனமாகிறது. ஆண்டவனின் எதிரி என்பது சிந்தனைக்குறைவுதான்.

இவர் கூறுவதில் லாஜிக் இல்லை என்று கூறியதற்கு அளிக்கும் விளக்கத்தை (?) பாருங்கள்:

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

மார்க்கம் என்பது ஒரு வாழ்க்கை நெறி அதைப்பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் அது மாறாது. அது அப்படியேதான் இருக்கும். மனிதனின் மனத்தில் அதைப்பற்றிய அலட்சியத்தை ஏற்படுத்தினால் அதை விட்டும் விலகி தான்தோன்றித்தனமாக இருப்பான். மனமும் மார்க்கமும் வேறு. மனதைகெடுத்தால் மார்க்கம் பின்பற்றப்படாதே ஒழிய மார்க்கம் மாறாது.

அடுத்த தவறாக இஸ்லாத்தை ஆதாரபூர்வமாக இதுவரை யாரும் நிரூபித்ததுகிடையாது. இவரைப்போன்று உளரல்தான் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அவர்,

இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு.

குர்ஆனில் இதற்கு மேல் தர்கிக்கவேண்டாம் என்று யாருக்கு எப்போது கூறப்பட்டுள்ளது என்பதை பார்க்கவில்லையோ! மூடர்களோடு விவாதம் செய்ய வேண்டாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. பயந்துபோயல்ல! இன்னும்சொல்லப்போனால், குர்ஆன் மாற்றுக்கருதுடையவர்களிடம் தாராளமாக விவாதம் செய்ய அழைக்கிறது, அவர்களுடைய கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறது, அவர்களுக்கெதிராக சவால் விடுகிறது. விமர்சனம் செய்பவர்களை தாக்கக்கூடாது. எனினும் அறிவில்லாமல் சிலர் செய்கின்ரனர். இதனால் இது இஸ்லாம் அனுமதித்துள்ளது என்பதல்ல.

இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.. உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன்.

இஸ்லாம் அடக்குமுறைக்குட்படுத்துகிறது எனும் தோரணையில் எழுதியதால் கம்யூனிசம்தான் இதை செய்கிறது என்பதை எடுத்துக்காட்டவே கம்யூனிசத்தின் அராஜகங்களை எடுத்துக்காட்டப்பட்டது. இது தவறு என்றால் பதிலளித்திருக்கலாம். தனித்தொடர் அமைத்தால்தாம் பதில் என்பதன் பின்னனி என்ன? இப்போதைக்கு பதில் கிடையாது. யோசிக்க டைம் வேணும் என்பதற்காகவா? பரவாயில்லை. யோசித்து இதற்கும் இவரது பாணியில் பதில் என்று ஜல்லியடிக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

இஸ்லாம் மாத்திரமே சரியானது என்ர முன் முடிவினை தவிர்த்துவிட்டுவந்தால்தான் விவாதம் செய்ய வருவேன் என்று மேற்படியார் விரும்பினார். சரி, இதை ஒத்துக்கொண்டு இவரை அழைப்போம் என்பதற்குத்தான் அவ்வாறு எழுதப்பட்டது. இப்ப என்ன அடிமடியில் கை வைத்துவிட்டீர்கள் என்று கரடிவிடுகிறார். இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையில்லை என்பதுதான் எமது நிலை. இஸ்லாத்தில் எதையும் யாரும் மாற்ற முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. தவறு தவறு என்று கூப்பாடுபோடாமல் துணிவிருந்தால் எடுத்துக்காட்டுங்கள் மாற்றிக்கொள்கிறோம் என்று கூறியது அப்போதாவது இவர்கள் வருவார்களா என்பதுதான்.

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

இவர் நாம் எழுதிய மறுப்புத்தொடரை ஒழுங்காகப்படிக்கவில்லை என்பது இதன்மூலம் புலனாகிறது. உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவதி இயல்பு என்று குறிப்பிட்டதை படித்தவர் முழுமையாக படிக்கவில்லை. இதை உண்மைக்குத்தான் ஒப்பிட்டோம். உளறல்களுக்கல்ல. இவர் சுட்டிக்காட்டியவர்கள் உளறியவர்கள்தான். அதை தவறு என்று நிரூபிப்பதற்குப்பதிலாக தாக்கியது மக்களது அறியாமை. இதை நாம் வேறு வேறு என்று தெளிவாக்கிய எமக்கே அதன் வித்தியாசத்தை விளக்கும் மேதாவித்தனத்தை என்னவென்பது!. இஸ்லாத்தை ஒருவர் விமர்சித்தால் அதை சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எந்த நியாயவானுக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இவர்கள் உளறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. தக்கலை றசூலின் கேள்விக்கு தெளிவான பதில் உள்ளது. அதை இவருக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது தவறுதான். இஸ்லாம் தவறு என்பவனை எதற்காக இஸ்லாத்தினுல் வைத்திரூக வேண்டும்? எதற்காக தவறு என்பதில் இருக்க வேண்டும்? விலகிவிடுவதுதான் நேர்மை. இஸ்லாம் தனது கொள்கையை மறுப்பவனையோ விமர்சிப்பவனையோ எதிர்ப்பது கிடையாது. இதில் தாராளமாக விட்டுக்கொடுக்கிறது. விரும்பியவர் ஏற்கலாம்; விரும்பாதவர் செல்லலாம். இதை விமர்சிப்பதற்கு தாராளமாக அனுமதியுள்ளது. விமர்சனம் என்ற பெயரில் உளறல்களை வாந்தியெடுப்பதற்கல்ல! என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம்.

தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பானமை இவருக்கு கிடையவே கிடையாது என்பதை இவருடைய இந்த மறுப்பு எனும் சமாளிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இவருடைய சப்பைக்கட்டு தொடரும்வரை சவுக்கடியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.

இதுதொடர்பான இடுகைகள்