Ads 468x60px

Pages

Flash News

இந்த தளம் பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துரைப்பகுதியில் சகோதரர்கள் தெரிவிக்கலாம்.

முக்கிய அறிவித்தல்

எனது ஜிமெயில் ஐடியான ibnuabdullah94@gmail.com எனும் முகவரியை எவனோ ஒருவன் ஹேக் செய்து விட்டான். அதை சரி செய்யும் வரையில் யாரும் அந்த முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், அதிலிருந்து வரும் எந்த விடயங்களுக்கும் பதில் அனுப்ப வேண்டாம். தொடர்புகொள்ள விரும்பும் சகோதரர்கள் mohamedihsas786@gmail.com எனும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, April 29

அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றலுடையவன்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-29

மீனின் வயிற்றில் மனிதனைப்பாதுகாத்த அல்லா எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

அல்லாஹ் யூனுஸ் நபியை கண்டித்த  விதம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதாவது யூனுஸ் நபியை ஒரு மீன் விழுங்கியதாகவும் பின்னர் அவர் திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரியதால் அவரை விட்டுவிட்டதாகவும் அல்லாஹ் கூறுகிறான். இதில் செங்கொடி பின்வருமாறு கேள்வி எழுப்புகிறார்.
மீனின் வயிற்றுக்குள் சென்ற ஒருவர் எப்படி உயிருடன் வெளியில் வந்தார்? அதுவும் மீனின் வயிற்றுக்குள்ளிருந்து நடந்தவைகளை அசைபோட்டு சிந்தித்து அல்லாவை வேண்டித் தொழுது பின்னர் வெளியேற முடிந்திருக்கிறது என்றால்... சிறு குழந்தைகள் கூட கேட்டால் சிரித்து விடக்கூடிய தன்மையில் இருக்கும் இந்தக் கதையை தங்கள் வேதத்தில் வைத்திருப்பவர்கள் தான் தங்கள் மதம் அறிவியல் மதம் என்றும் நாளை கண்டுபிடிக்கப்படவிருக்கும் அறிவியல் உண்மைகள் கூட தங்கள் வேதத்தை மீறி இருக்க முடியாது என்றும் அளந்து விடுகிறார்கள்.

 அல்லாஹ்வை ஏதோ ஒஅர் அற்பனைப்போன்று நினைத்துக்கொண்டுதான் இக்கேள்வியைக்கேட்கிறார். அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன் என்பதை மறுக்கும் விதமாக கேட்கிறார். நாம் மீண்டும் சொல்கிறோம், அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு எதுவும் சிரமமல்ல! தான் நாடியதைச் செய்பவன் என்பது எமது நிலை. இதுபோன்ற சம்பவங்களை மறுக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்பதை இவர் நிரூபித்தாக வேண்டும்! இதுவரை அவர் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது இப்படி கேட்பது இவரது இயலாமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்கள் இருப்பதென்பது தவறாம். என்ன மறுப்பு பாருங்கள். அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க முடியாமல் முழித்துக்கொண்டும் அதை மறுக்க முடியாமல் உளறிக்கொட்டிக்கொண்டும் இருப்பவர் எப்படி மறுக்கிறார் என்று பாருங்கள்! இந்த சம்பவம் இருப்பதால் அறிவியல் முன்னறிவிப்புகள் உள்ள வசனங்கள் தவறாகிவிடுமா? என்ன எழுதுகிறோம் என்பதை சிந்தித்துதான் எழுதுகிறாரா?
இந்த சம்பவத்தை கூறும் வசனத்தில் மீன் என்று மொழிபெயர்க்கும் இடத்தில் 'ஹூத்' எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொல் திமிங்கிலத்தை குறிக்கும் சொல். நீலத்திமிங்கிலங்கள் பிரம்மாண்டமான உடலமைப்பைக்கொண்டவை. அவை ஒரே தடவையில் 50 பேரை  நாக்கில் வைத்திருக்கும் அளவுக்கு விசாலமானவை. 50 பேரை வைத்திருக்க முடியும் எனும் போது ஒரு நபரை அதனுள் வைக்க படைத்த இறைவனுக்கு முடியாதா? அவன் நம்மைப்போன்றவனா? எமது நம்பிக்கைக்குள் இருந்து விமர்சிக்காமல் வெளியே போய் விமர்சித்து தன அதிமேதாவித்தனத்தை அடிக்கடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார் செங்கொடி. எப்படி விமர்சிப்பது எனும் அறிவு கூட இவருக்கில்லை.

ஒவ்வொரு உயிரினமும் உட்கொள்ளும் உணவை செரிப்பதற்காக பல்வேறு அமிலங்களை தங்கள் செரிமான உறுப்புகளில் சுரக்கின்றன. வெளிப்புற தோள்களில் பட்டால் அரித்துவிடக்கூடிய அளவில் நொதித் தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒரு மீனின் வயிற்றில் ஒரு மனிதன் சில நாட்கள் வசதியாக வாழ்ந்துவிட்டு வெளியில் வந்ததாக கதை சொல்கிறது குரான்.

இவரது உளறலுக்கு ஒரு அளவே இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று! இந்த சம்பவத்தை விமர்சிப்பவர் அதன் பின்னுள்ள வசனங்களில் உள்ளதைக்குரிப்பிட்டாரா? அப்படி குறிப்பிடாவிட்டாலும் இதை அவர் விளக்கிக்கூறும் போதாவது குறிப்பிட்டாரா? இல்லை! யூனுஸ் நபி மீன் வயிற்றில் வசதியாக வாழ்ந்தார் என்பது அப்பட்டமான பொய்!
அவற்றை நோயுற்றவராக வெட்டவெளியில் எறிந்தோம்.(37:145)

அவர் நோயுற்றவராக வெளியே எறியப்பட்டுள்ளார் என்றால் அவர் மீனின் வயிற்றினுள் சொகுசாக வாழ்ந்தார் என்று எப்படி புரிந்து கொள்வது? இவரது உளறலுக்கும் கயமைத்தனத்திற்கும் ஒரு அளவில்லை எனும் அளவிற்கு இவரது தொடர் முழுவதும் கொட்டிக்கானப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்தினுள்ளும் செறிவுள்ள அசிட்களும் தாக்கத்தை ஏற்படுத்தும் நொதியங்களும் உள்ளதுதான்! ஆனால் இந்த மீனினுள்ளும் அப்படி உள்ளதா? என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும். அப்படி இருந்தாலும் இந்த வசனம் தவறாகாது! அவர் நோயுற்றவராகத்தான் வெளியே எறியப்பட்டுள்ளார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு சமுதாயத்தை குரங்குகளாக மாற்றிய சம்பவத்தையும் செங்கொடி விமர்சிக்கிறார். இந்த சம்பவம் இரண்டும் விமர்சனத்திற்கு உரிய விடயமே இல்லை! இதை விமர்சிக்க வேண்டுமெனில் அல்லாஹ் இல்லை என்று வாதிட வேண்டும்! அல்லது உலக விடயங்களில் குர்ஆன் தவறாக கூறியுள்ளது என்றாவது வாதிட வேண்டும்! எதையும் செய்யாமல் இவற்றை விமர்சிப்பது கையாளாகத்தனம்!

குரங்குகளின் மூதாதை விலங்கு ஒன்றிலிருந்து படிப்படியாக பல லட்சம் ஆண்டுகளில் உருமாறி வந்தவன்தான் மனிதன் என பரிணாமம் கூறினால் அதற்கு எதிராக ஆயிரம் கேள்விகளை எழுப்பும் மதவாதிகள், இங்கே ஒரே நொடியில் மனிதனை குரங்காக மாற்றிய குரங்காக மாற்றிய இந்த கதைக்கு எதிராக ஒற்றை ஒரு கேள்வியையேனும் எழுப்ப முன்வருவார்களா?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது குருட்டுவாதம்! அதை நாம் ஏற்கமாட்டோம்! ஆனால் இது அல்லாஹ் செய்வது. அவனுக்கு இது சிரமமல்ல என்பதுதான் எமது வாதம்! இதற்கெதிராக நாம் எந்த கேள்வியும் கேட்க வேண்டிய அவசியமில்லை! ஏன்? அவன் சர்வ சக்தன் என்று நாம் நம்புகிறோம்! அவ்வாறில்லை என்று நிரூபித்துவிட்டு வாதிட வேண்டும்.

ஒரு விலங்கைவிட அறிவிலும், செயலிலும், நினைவிலும், பரிமாற்றத்திலும், கருவிகளை  பயன்படுத்துவதிலும் மேம்பாடு கொண்டவன் மனிதன். ஆனால் மனிதனின் இந்த மேம்பாடுகளை எல்லாம் ஒரு அளிப்பான் கொண்டு அளித்து விடுவதைப்போல் குரங்காக மாறிவிட்டார்கள் என கதை சொல்கிறது குரான்.
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று நம்புகிறார்கள்! எப்படி என்று கேட்டால் அது இயற்கை என்கிறார்கள்! இயற்கைக்கு ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்புபவர்கள் அனைத்து ஆற்றலுள்ளவன் மனிதனை குரங்காக மாற்றினான் என்றால் ஆச்சரியப்படுகிறார்கள்! இவர்கள் ஒரு நிலையற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இந்த தொடர் முழுக்க முழுக்க எமது நம்பிக்கைக்குள்ளிருந்து விமர்சிக்காமல் வேறொரு கோணத்தில்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது! அதைக்கூட உருப்படியாக செய்யவில்லை!. அல்லாஹ் இல்லை என்பவர்களுக்கு இது கதைதான்! அல்லாஹ் இருக்கிறான்! அவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன் என்பவர்களுக்கு இது உண்மைச்சம்பவம்! அல்லாஹ் இல்லை என்று நிரூபித்துவிட்டால் இதை நாங்கள் ஒதுக்குவதற்கு தயார்! செங்கொடி தயாரா?

வளரும் இன்ஷா அல்லாஹ் 

     

Sunday, April 24

சிந்தனைக்கும் உண்டு கடிவாளம்

செங்கொடியின் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே... தொடர்-28

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? எனும் தொடருக்கு மறுப்பாக இது வெளியாகிறது.

இந்த தொடரில் செங்கொடி 'ஜின்' மற்றும் தாப்பத் எனும் உயிரினத்தைப்பற்றியும் விமர்சித்திருக்கிறார். இது பற்றிய விமர்சனத்தை கிளப்பியதற்கு இவரது பலவீனமே காரணம் என நான் கருதுகிறேன். ஏன்? இவர் ஒரு வருட காலமாக மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தைப்பற்றி தப்பும் தவறுமாக விமர்சித்த்தது மட்டுமல்லாமல், இதற்கு பதில் சொல்லத்தயாரா என்று சவடாலும் விட்டுவந்தார். அப்போது சகோதரர் பி.ஜே அவர்களிடம் விவாதம் செய்ய கோரியதும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டு பின்னர் மாட்டிக்கொண்டால் மானம் போய்விடும் என்பதற்காக உப்புச்சப்பில்லாத வாதங்களை எடுத்து வைத்து நான் பி.ஜெவுடன் நேரடி விவாதம் செய்ய மாட்டேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

இவரை இப்படியே சும்மா விட்டுவிடக்கூடாது என்பதற்காக இவரது உளறல்களை தோலுரித்து காட்ட நாம் முன்வந்தோம். இவரது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஆஹா! இதுவல்லவா வாய்ப்பு என்று சொல்லி குர்ஆனில் எவை எவை அறிவியல் முன்னறிவிப்பாகவும் வரலாற்று சான்றாகவும் குறிப்பிடுகிறோமோ அவையனைத்தையும் எடுத்துவைத்திருக்க வேண்டும். நாம் பதிலளிக்க முன்வரும் வரையில் அறிவியல் முன்னறிவிப்புகளையும் வரலாற்று உண்மைகளையும் விமர்சித்தவர் பதிலளிக்க ஆரம்பித்தவுடன் எமது நம்பிக்கைக்கோட்பாட்டுடன் தொடர்புடைய விமர்சனங்களை கிளப்ப ஆரம்பித்துவிட்டார். இவற்றை கிளப்பினால் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ஓடி விடுவார்கள்; நாமும் தப்பி விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். ஆனாலும் நாம் இவற்றுக்கு பதில் சொல்லாமல் விடப்போவதில்லை. எமது நம்பிக்கை கூட எந்தவகையில் சரி என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபிக்கத்தான் போகிறோம்.

முதலாவதாக 'ஜின்' எனும் பகுத்தறிவு உள்ள உயிரினத்தைப்பற்றி விமர்சிக்கிறார்.ஆனால் அவரது விமர்சனத்தை விட அது பற்றிய அறிமுகமே அதிகளவில் உள்ளது. விமர்சிக்க பெரிதாக ஒன்ருமில்ல்லை. அதைப்பற்றி எழுதியாவது பக்கத்தை நிரப்பிக்கொள்ளலாம் என்று நினைத்தாரோ என்னவோ! இவர் என்ன கேட்கிறார் என்றால் ஜின் என்று ஒன்று இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படி உலகில் எங்கும் காணவில்லையே! அது இருப்பதற்கான எந்த தடையமுமில்லையே என்கிறார். அதைத்தான் நாமும் சொல்கிறோம். ஜின்கள் இருப்பதை ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியாது. ஏன்? அது எமது கண்ணுக்கு தெரியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலை. கண்ணுக்குத்தெரியாது எனும் போது காணவில்லையே என்று கேட்பது எவ்வளவு புத்திசாலித்தனம் (?) என்று அனைவருக்கும் புரியும். அடுத்து அப்படியானால் நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்.

நாங்கள் ஏனைய மதத்தவர்களைப் போலல்ல குரான் சிந்திக்கச் சொல்லியிருக்கிறது எனும் முஸ்லீம்கள் எந்த அடிப்படையில் ஜின்களை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா?


சிங்கள் இருப்பதாக கூறுவதை நாம் நம்புகிறோம். ஏன்? ஏனென்றால் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததாக நாங்கள் நம்புகிறோம். அது இறைவனிடமிருந்துதான் வந்தது! முஹம்மது எனும் நபரால் தயாரித்திருக்கவே முடியாது எனும் அளவிற்கு பல சான்றுகளை கொண்டுள்ளது. (அந்த சான்றுகளில் சிலவற்றை செங்கொடி விமர்சனம் செய்து அவையனைத்தும் தப்பு என்று நிரூபித்துவிட்டோம். அதற்கு பதில் சொல்வார் என்று பார்த்தால் முன்பை விட அதிகமாகவே உளறிக்கொட்டியிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.) அப்படிப்பட்ட திருக்குர்ஆன் சொல்கிறது சிங்கள் உள்ளது என்று. நாம் தட்காலலத்தில் சரிகாணும் அறிவியல் உண்மைகளும் இன்னும் சில விடயங்களும் சரியாக இருக்கும் போது இது எப்படி தவறாகும்? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. திருக்குர்ஆனை நிரூபிக்க ஒன்ரல்ள்ள பல விடயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சரியாக உள்ள போது எமது சக்திக்கப்பாற்பட்ட விடயங்களைக்கூரும் போது அது எப்படி தவறாகும்?

அதுமட்டுமல்ல, இன்னுமொன்றை சிட்ன்தித்துப்பார்க்கும் போது இந்த நம்பிக்கை சரி எனத் தோண்றும். அது என்ன? ஷைத்தானும் ஜின்களின் இனத்தைச் சேர்ந்தவன் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனது வேலை என்ன? மக்கள் மத்தியில் தவறான, அசிங்கமான செயல்களை ஏவி மக்களை வழிகெடுப்பது. இன்று நாம் பார்க்கிறோம் சிகரட் பிடிப்பது, ஹெராயின், வைன் போன்ற போதைப்பொருள் பாவனை தவறு என்று மனிதனின் அறிவுக்குப்படுகிறது. அப்படித்தான் வைத்தியர்களும் சொல்கின்றனர். இதை அவனும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் அத செய்கிறான் என்றால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று அவனது அறிவை மழுங்கடிக்கச் செய்கிறது, அவனை அதன் பக்கம் தூண்டுகிறது என்பது தெரிகிறதா? இல்லையா? இந்த செயலுக்கு காரணமாக இருப்பவன் ஷைத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான். அக்கவே ஷைத்தான் இருக்கிறான் என்றுதானே அர்த்தம். ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவனது இனமான ஜின் இனமும் இருக்கத்தானே வேண்டும். இதுதான் சிங்கள் தொடர்பான அவரது கேள்விக்கு பதில்.

இறைவன் இருப்பதாக முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இறைவனைக் காட்ட முடியுமா என்று கேட்பது போல்தான் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது.

அடுத்து தாப்பத் எனும் உயிரினத்த பற்றி கேட்கிறார். இது ஒரு மேட்டரே இல்லை! உலகம் அழிவதற்கான அடையாளமாக பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்று. உலகம் அழியும்! அதற்கு முன் இன்னின்ன நடக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பட்டியலையே போட்டுள்ளார்கள். அதில் பல விடயங்கள் நடந்து வருகின்றன. இன்னும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் இதையும் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டிய விடயங்கள் அப்படியே நுனியும் பிசகாமல் இன்று நடந்து கொண்டிருக்கும்போது இது நடக்காது என்று எப்படி சொல்வது? அனைத்தும் தவறாக இருந்தால் இதுவும் தவறாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்து சில விடயங்கள் இன்னும் நடக்கவில்லை என்பதால் அது நடக்காது என்பதா? இல்லை இனியும் நடக்கும் என்பதா? இதை அப்படியே சொன்னால் பிரச்சனை இல்லை. ஆனால் இவரது சொந்தக் கருத்தையும் இதோடு சொருகி விடுகிறார்.
தைப்பது குறித்த செங்கொடி சுட்டிக்காட்டும் வசனம் இதுதான்:


அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஒஅர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் பேசும். (27:82)


இந்த வசனத்தில் அந்த உயிரினம் பூமியிலிருந்து வெளிப்படும் என்றுதான் உள்ளது. ஆனால் இவரோ இந்த விலங்கு பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் என்கிறார்.
வெளிப்படுவது என்றால் பிளந்து கொண்டு வரும் என்பதுதான் அர்த்தமா? உள்ளதை உள்ளபடி விமர்சிக்காமல் இப்படி இல்லாத அர்த்தத்தை சேர்ப்பது கயமைத்தனம் இல்லையா?

காலமோ நேரமோ குறிப்பிடாமல் ஒன்று நடக்கும் எனக் கூறினால் அதை போய் என்று யாராலும் கூற முடியாது. கி.பி 2010 ல் நடக்கும் என்று குர்ஆனில் கூறப்பட்டிருந்தால் 2010 வந்து விட்டதே ஏன் தாப்பத்தைக் காணவில்லை என்று கேட்கலாம். காலம் குறிப்பிடாமல் இறுதிக்காலத்தில் நடக்கும் எனக் கூறினால் அதை இப்படி மறுப்பது அறிவுடைமை இல்லை.

பூமியிலிருந்து தாவரங்கள் தானே முளைக்கும்? புழு பூச்சிகள் பொந்துகளில் வாழும், ஆனால் பூமியிலிருந்து திடீரென ஒரு உயிரினம் வெளிப்பட முடியுமா? அப்படி வெளிப்படும் ஒரு உயிரினம் உடனே பேச முடியுமா? எந்தப்பகுதியில் என்ன மொழியில் பேசும்? பேச்சு என்றால் என்ன? ஒரு உயிரினம் சமூக வயப்பட்டிருப்பதன் அடையாளம். தன இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாருவதற்குரிய ஒரு வளர்ச்சி. ஆஅனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? அதுவும் மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?


பூமியை பொத்துக்கொண்டு வரும் என்று குர்ஆனில் இல்லை. இவரது சொதக்கருத்து. அப்படியே பொத்துக்கொண்டு வருவதாக இருந்தாலும் இது கடவுளுக்கு பெரிய விசயமே இல்லை. ஒண்ணுக்கும் உதவாத தண்ணீரிலிருந்து மனிதனைப்படைத்த கடவுளுக்கு இப்படி செய்வது சிரமமல்! இது தவறு என்பதாக இருந்தால் கடவுளே இல்லை என்று நிரூபித்துவிட்டு இவ்வாதத்தை வைக்க வேண்டும். மனிதனுக்கு உள்ளுள்ள ரகசியம் இதற்கு எப்படித்தெரியும் என்று கேட்கிறார். சாதாரணமாக இது யாருக்கு தெரியாததுதான். இறைவன் அறிவித்துக்கொடுத்தால் இது பெரிய விசயமே இல்லை!


அல்லாவுக்கு இவைகளெல்லாம் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான், ஆண்டவனின் மகிமை இது என்பவர்களுக்கு அறிவியல் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை.


இதற்கு நாம் இப்படித்தான் பதில் சொல்வோம் என்று தெரிந்துள்ள செங்கொடி இப்படி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறார். ஆனால் இதற்கு இது பதிலா? அல்லாஹ்வுக்கு இயலும் என்றால் நான் அல்லாஹ்வே இல்லை என்று சொல்கிறேன் எப்படி இதை ஏற்றுக்கொள்வேன் என்றாவது கேட்க வேண்டும். அப்படிக்கேட்டால் அல்லாஹ் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அது இவரால் முடியாது என்பதன் கோபம்தான் இது!.  கடவுள் என்பவன் அனைத்துக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்க வேண்டும். அப்படியில்லாதவன் கடவுளே கிடையாது. அல்லாஹ்வுக்கு அனைத்தும் இயலும் என்பது எமது நிலை! இது தவறு அதாவது அல்லாஹ்வே இல்லை என்று நிரூபித்து விட்டு இந்த வாதங்களை வைக்க வேண்டும். அதுவரை இவற்றை மறுக்க முடியாது.


இன்று கண்டுபிடிக்கப்படும் அறிவியல் நுணுக்கங்கள் கூட குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுவிட்டது, என ஜல்லியடிப்பவர்கள் இந்த உயிரினங்கள் குறித்து என்ன கூறுவார்கள்?


இன்றைய அறிவியல் உண்மைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூரியுல்லவன் இன்றைய அறிவியல் உலகால் கண்டுபிடிக்க முடியாத விடயத்தை கூறினால் அதை தவறு என்று எப்படிக் கூறுவது? இதை அறிவியல் மூலம் பொய் என்று நிரூபிக்க இயலாது! ஏன்? அறிவியல் என்பது சோதனைக்குப்பின் வெளிவரும் தகவல். எதை சோதனைக்குட்படுத்த முடியாதோ அவற்றை தவறு என்பது ஆடத்தெரியாதவன் அரங்கம் கோணல் என்பது போல்தான். எப்படி உயிரின் ரகசியத்தை அறிய முடியாதோ அதை ஆய்வு செய்வது சாத்தியமில்லையோ அதுபோல்தான் இந்த விடயங்களும். ஆனால், அறிவுப்போர்வமாக சிந்திக்கும் போது இவை சாத்தியம் என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்